அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

தெருவில் தேங்காய் அடித்து திரியும் புலன்பெயர்ந்தவர்கள்

வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு வேளை உணவுக்கே வழியின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வாடிக்கொண்டிருக்கும் போது வெளிநாடுகளில் புலன்பெயர்ந்தவர்கள் ( மூளைகுழம்பியவர்கள் ) தெருக்களில் தேங்காய் அடித்து காசை கரியாக்கி தமது பணத்திமிரை காட்டி வருகின்றனர்.

நேற்று பிரான்ஸ் லாச்சப்பலில் தேர்த்திருவிழா நடைபெற்ற போது தமிழ் கடைகளுக்கு முன்னால் தேங்காய்கள் குவிக்கப்பட்டு வீதிகளில் உடைத்தனர். இந்த தேங்காய்களுக்காக அவர்கள் பெருந்தொகை பணத்தை செலவழித்ததுடன் வீதிகளையும் அசுத்தம் செய்தனர்.

இந்த பணத்தை வறுமையால் வாடும் மக்களுக்கு அனுப்பினால் அவர்கள் ஒருவேளை உணவையாவது உண்டிருப்பார்கள் அல்லவா? இது புலன் பெயர்ந்தவர்களுக்கு ( மூளைகுழம்பிய பைத்தியகாரர்களுக்கு) எங்கே புரியப்போகிறது என லாச்சப்பலிருந்து இப்படத்தை அனுப்பிய ஒருவர் தெரிவித்தார்.

Thinakathir
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக