அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 30 செப்டம்பர், 2013

தீக்குளிக்கும் தம்பிராசாவும் வீடியோ எடுக்க துடிக்கும் ஊடகவியலாளர்களும்

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரிக்கு வடமாகாணசபையில் போனஸ் ஆசனம் வழங்கவில்லை என்றால் தான் தீக்குளித்து இறப்பேன், அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இறப்பேன் என வடமாகாணசபைக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட தம்பி என்று அழைக்கும் தம்பிராசா அண்மையில் தெரிவித்திருந்தார்.

தற்போது போனஸ் ஆசனம் யாருக்கு வழங்குவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படவில்லை, சுழற்சி முறையிலும் ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனம் கிடையாது என்பது உறுதியாகி விட்டது.

அப்படியானால் தம்பிராசா தீக்குளிப்பது உறுதியாகி விட்டதாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

தம்பிராசாவிடம் தொடர்பு கொண்ட சில ஊடகவியலாளர்கள் அண்ணை எப்ப தீக்குளிக்க போறியள். எந்த இடத்தில தீக்குளிக்க போறியள், தீக்குளிக்க இடத்தையும் நேரத்தையும் நேரகாலத்தோட சொன்னால் நாங்கள் வந்து வீடியோ எடுக்கலாம். அதை எங்களட்டை இரகசியமாக சொல்லுங்கோ, நாங்கள் பொலிஸட்டை சொல்ல மாட்டாம். பொலிசட்டை சொன்னால் நீங்கள் தீக்குளிக்கிறதை தடுத்து போடுவாங்கள்.

எப்ப அண்ணை தீக்குளிக்க போறீங்கள் என ஊடகவியலாளர்கள் தம்பியிடம் துளைத்தெடுத்து வருகிறார்களாம்.

பாவம் தம்பி ஆனந்தசங்கரியை நம்பி தீக்குளிப்பன் எண்டு சொல்லி இப்ப சங்கடத்தில் மாட்டிக்கொண்டு விட்டாராம்.

thinakkathir
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக