அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது கணவனுடன் முரண்பாடு; மனைவி தூக்கிட்டு தற்கொலை (படங்கள் இணைப்பு)

மட்­டக்­க­ளப்பு, மாவ­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் இளம் தாயொ­ரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். மாவ­டி­வேம்பு நாவுக்­க­ரசர் வீதியைச் சேர்ந்த கிருஷ்­ண­பிள்ளை நிர்­மலா (வயது 25) என்ற ஒரு பிள்­ளையின் தாயே இவ்­வாறு நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிசார் மேலும் தெரி­வித்­தனர்.

கட்­டாரில் தொழில் புரியும் தனது கண­வ­ரோடு ஸ்கைப்பில் பேசிக் கொண்­டி­ருக்கும் போது ஏற்­பட்ட கருத்து முரண்­பாட்டால் வீட்டு வளையில் தூக்­கிட்டு மர­ணிக்­கப்­போ­கிறேன் என்று சொல்லி விட்டு கணவர் பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் போதே கழுத்தில் சுருக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.

உட­ன­டி­யாக இவரின் உற­வி­னர்­க­ளுக்கு விட­யத்தை கணவர் தொலை­பேசி மூலம் அறி­வித்­த­துடன் உற­வி­னர்கள் இவரின் வீட்­டிற்கு வந்து பார்த்த போது வீட்டு வளையில் தூக்­கிட்டு மர­ணித்­தி­ருப்­பதை அவ­தா­னித்­துள்­ளனர்.

ஏறாவூர் பொலிசார் மற்றும் மரண விசா­ரணை அதி­காரி சம்­பவ இடத்­திற்கு சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­துடன் செங்­க­ட­கல வைத்­தி­ய­சா­லையில் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக