அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 9 ஆகஸ்ட், 2014

சென்னைக்கும் வந்தது எபோலா வைரஸ்...?

சென்னை: நைஜீரீியாவில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் ஒருவருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சரிவர தடுப்பு மற்றும் நோய்க்குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நோயான எபோலா உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நோயை கட்டுப்படுத்தும் வகையில் நாடுகள் தடுப்பு வகைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த வாலிபருக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்ற 26 வயது வாலிபர். இவர் நைஜீரியாவிலிருந்து நேற்று தமிழகம் திரும்பினார். அப்போது அவருக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பார்த்திபன். அங்கு நோய் பரவாவண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அவருக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக