மகாத்மா காந்தி வேட்டியணிந்து வந்ததை, அரை நிர்வாண பக்கிரி என்று கிண்டல் செய்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்னாளில் அதற்கு வருத்தம் தெரிவித்தார். அந்தப் பக்கிரி தான் கோட்சூட்போட்ட ஆங்கிலேயர்களை ஆட்டிப்படைத்தார் என்பது வரலாறு!
பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு நடுவில் தமிழகத்தையும் ஓரளவு தென்னிந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஒரு நிகழ்வு. வேட்டி கட்டிவந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு டி.என்.சி.ஏ கிளப் விழாவில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதை எங்கோ ஒரு மூலையில் தனி நபருக்கு நடந்த ஒரு சிறு நிகழ்வு என்று ஒதுக்கி விட முடியாது. வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த அடிமைத்தனமும் அவர்களை காப்பியடிக்கும் கலாசாரமும் இன்னும் நம் இரத்தத்தை விட்டு நீங்கவில்லை என்பதன் அடையாளம் இது!
சென்னை சேப்பாக்கத்திலுள்ள டி.என்.சி.ஏ கிளப் என்பது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் சமூக கிளப். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கூடிப்பேசுவதற்கும் மது அருந்திப் பொழுது போக்கவும் வியாபார பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கும் என்று மேல் தட்டு மக்களின் பொழுதுபோக்கு தலமாகவே அமைந்திருக்கிறது இந்த வகை கிளப்புகள்.
இந்தக் கிளப் வளாகத்திலுள்ள ஆடிட்டோரியத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்தப்புத்தக வெளியீட்டு விழாவில் இப் புத்தகத்தை குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுல கிருஷ்ணன் வெளியிட ஹிமாச்சல் பிரதேச முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.ரத்தினம் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதாக இருந்தார். விழாவிற்குப் பல உயர்நீதிமன்ற முன்னாள் இந்நாள் நீதிபதிகள், சீனியர் வழக்கறிஞர்கள் எனப்பலரும் விருந்தாளிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் டி.ஹரிபரந்தாமன் இவ்விழா வில் கலந்துகொள்ள வந்து இறங்கியபோதுதான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வேட்டிச்சட்டை அணிந்து வந்ததால் கிளப்பின் உடை தொடர்பான விதிகளை மீறி வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் அவருக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று வரவேற்பரையில் இருந்தவர் தடுத்துவிட்டார். நீதிபதி ஹரிபரந்தாமன் சுழல் விளக்கு பொருத்திய காரில் வந்து இறங்கியதை பார்த்த பின்னும் கூட அதாவது அவர் உயர்நீதிமன்ற இந்நாள் நீதிபதி என்று தெரிந்தும் கொஞ்சம் கூட மரியாதையின்றி நாகரிகமின்றி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஹரிபரந்தாமனைப் போலவே உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தியும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதனும் வேட்டியில் வந்ததற்காக இதே விழாவில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். விழாக்குழுவினர் தலையிட்டும் இந்த தர்மசங்கடத்தை தவிர்க்க முடியவில்லை. விதிமுறைகளில் இவ்வளவு வெள்ளைக்காரத்தனமான விருந்தாளிகளாக அழைக்கும் விழாக்களை தங்கள் வளாகத்தில் ஏன் நடத்த அனுமதிக்க வேண்டும்?
டி.என்.சி.ஏ.கிளப்பை நடத்தும் டி.என்.சி.ஏவின் தலைவர் வெள்ளைக்காரர் அல்லர். குங்குமப்பொட்டு வைத்த பச்சை தமிழர். என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடந்ததாகக் கூறப்படும்.மேட்ச் ஃபிக்சிங் முறைக்கேடுகளுக்காக உச்சநீதிமன்றத்தால் தள்ளி வைக்கப்பட்டவர். அதையும் மீறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகியிருப்பவர்.
என்.சீனிவாசனுக்கு நீதிமன்றங்களின் மேல் எழுந்த கோபத்தினால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு இப்படியொரு அசிங்கமான தர்மசங்கடம் ஏற்படுவது அவருக்கு உடனே தெரிவிக்கப்பட்டதா? தெரிவிக்கப்பட்டும் அவர் தலையிடவில்லையா? என்று தெரியவில்லை. தெரிந்த பின்னாவது அவர் நடந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தால் அது பண்பாடு. இந்தக்கட்டுரை அச்சாகும் வரை அவர் இது விடயமாக எந்த அறிக்கையையும் விடவில்லை என்பது தான் அதிகபடியாகவே உறுத்துகிறது. விழாவிற்கு அழைப்பு விடுத்த அமைப்பாளர்கள் உடையலங்கார விதிமுறையை அழைப்பிதழ் டிரஸ் கோட் என்று குறிப்பிடாததும் ஒருவகையில் தவறுதான்.
மகாத்மா காந்தி வேட்டியணிந்து வந்ததை அரை நிர்வாண பக்கிரி என்று கிண்டல் செய்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூடப் பின்னாளில் அதற்கு வருத்தம் தெரிவித்தார். கோட்டு சூட்டு போட்ட அத்தனை வெள்ளையர்களையும் அரை நிர்வாணப் பக்கிரி தான் ஆட்டோ ஆட்டு என்று ஆட்டி வைத்தது வரலாறு. இந்த விடயத்தில் வட இந்திய உடையான நேரு ஜாக்கெட் கூட மேற்கத்திய உடையாக பல அரசு விழாக்களிலும் விருந்துகளிலும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. கழுத்தை ஒட்டிய கொலருடன் முட்டிக்கால் தாண்டிய நீள நேரு ஜாக்கெட்டை அநேகமாக வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அனைவராலும் அணியப்படுகிறது. ஆனால் தென்னாட்டு உடையான வேட்டி மட்டும் இன்னும் தாழ்த்தப்பட்ட உடையாகவே பாவிக்கப்படுவதுதான் கொடுமை.
வெள்ளையர்கள் காலத்திலிருந்து பின் தொடரப்பட்ட நமது சட்டமுறையில் பார் கவுன்சில் ஒப் இந்தியாவின் விதிமுறைகளில் (49 (1) GG) வழக்கறிஞர் டிரவுசர் அல்லது வேட்டி அணிந்து வருவதை அனுமதிக்கிறது. மேலே போட்டுக்கொள்ளும் கறுப்பு கோட் கவுன் விடயங்களில் சில விதிமுறைகளை விதித்தாலும் வெயில் காலத்தில் சில விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளவும் வழி செய்கிறது.
கோட்டும் சூட்டும் ஷுவும் குளிர் பிரதேசத்தில் இருக்கும் வெள்ளையர்களுக்காக வெள்ளையர்களால் உண்டாக்கப்பட்ட உடைமுறைகள். மண்டை காய்கிற வெயிலில் கழுத்தை இறுக்கும் கோட்டையும் டையையும் கட்டிக்கொண்டு நாம் அலைவது அசட்டுத்தனத்தின் உச்சநிலை.
காமராஜர் வேட்டி கட்டிக்கொண்டுதான் வெளிநாடுகளுக்கும் சென்றார். முந்திய அரசியல் அமைச்சராக இருந்த முரசொலிமாறனும் ப.சிதம்பரமும் வேட்டியணிந்துதான் அரசுப் பணிபுரிந்தனர். இவர்கள் நாடாளுமன்றத்திலேயும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களை இந்தியாவில் சந்திக்கும் போதும் கூட வேட்டிதான் அணிந்தனர். வெளிநாட்டிற்கு செல்லும்போது மேற்கத்தேய உடை அணிந்தால் அது தவறில்லை. ஆனால் உள்ளுக்குள்ளேயே இப்படி அலப்பரை செய்வது தான் அபத்தம். கண்ணியத்துக்கு தொடர்பே இல்லாதவர்கள் கூட கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம் அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பது போல் நடிப்பது இன்று நாகரிகமாகிவிட்டது.
இந்த வேட்டி விதிமுறை வெட்டிக் கலாசாரத்தை பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் கண்டித்திருக்கிறார்கள்.
ஐ.நா. சபைக்கூட்டத்தில் பேசும்போது கூட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வேட்டியணிந்திருந்ததை ராமதாஸ் சுட்டிக்காட்டி இந்த வேண்டாத விதிமுறைகளை சீர்படுத்த தமிழக அரசு சட்டம் கொண்டுவரவேண்டும் என்கிறார். நியாயமான கோரிக்கை தான்.
சென்னை மாநகராட்சி தலைவராக இருந்த சேர். பிட்டி. தியாக ராயர் ஆங்கிலேய அரசின் நிபந்தனைகளை ஏற்காமல் தனது வழக்கமான வெள்ளைவேட்டிச் சட்டையிலேயே சென்று வேல்ஸ் இளவரசரை வரவேற்றார். ஆங்கிலேயே அரசையே பணிய வைத்த நமக்கு இந்தக் கிளப்புகள் எம்மாத்திரம் என சட்டசபையில் சவால் விட்டார் முதல்வர் ஜெயலலிதா!
தகவல் – ஷண்
பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு நடுவில் தமிழகத்தையும் ஓரளவு தென்னிந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஒரு நிகழ்வு. வேட்டி கட்டிவந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு டி.என்.சி.ஏ கிளப் விழாவில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதை எங்கோ ஒரு மூலையில் தனி நபருக்கு நடந்த ஒரு சிறு நிகழ்வு என்று ஒதுக்கி விட முடியாது. வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த அடிமைத்தனமும் அவர்களை காப்பியடிக்கும் கலாசாரமும் இன்னும் நம் இரத்தத்தை விட்டு நீங்கவில்லை என்பதன் அடையாளம் இது!
சென்னை சேப்பாக்கத்திலுள்ள டி.என்.சி.ஏ கிளப் என்பது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் சமூக கிளப். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கூடிப்பேசுவதற்கும் மது அருந்திப் பொழுது போக்கவும் வியாபார பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கும் என்று மேல் தட்டு மக்களின் பொழுதுபோக்கு தலமாகவே அமைந்திருக்கிறது இந்த வகை கிளப்புகள்.
இந்தக் கிளப் வளாகத்திலுள்ள ஆடிட்டோரியத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்தப்புத்தக வெளியீட்டு விழாவில் இப் புத்தகத்தை குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுல கிருஷ்ணன் வெளியிட ஹிமாச்சல் பிரதேச முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.ரத்தினம் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதாக இருந்தார். விழாவிற்குப் பல உயர்நீதிமன்ற முன்னாள் இந்நாள் நீதிபதிகள், சீனியர் வழக்கறிஞர்கள் எனப்பலரும் விருந்தாளிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் டி.ஹரிபரந்தாமன் இவ்விழா வில் கலந்துகொள்ள வந்து இறங்கியபோதுதான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வேட்டிச்சட்டை அணிந்து வந்ததால் கிளப்பின் உடை தொடர்பான விதிகளை மீறி வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் அவருக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று வரவேற்பரையில் இருந்தவர் தடுத்துவிட்டார். நீதிபதி ஹரிபரந்தாமன் சுழல் விளக்கு பொருத்திய காரில் வந்து இறங்கியதை பார்த்த பின்னும் கூட அதாவது அவர் உயர்நீதிமன்ற இந்நாள் நீதிபதி என்று தெரிந்தும் கொஞ்சம் கூட மரியாதையின்றி நாகரிகமின்றி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஹரிபரந்தாமனைப் போலவே உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தியும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதனும் வேட்டியில் வந்ததற்காக இதே விழாவில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். விழாக்குழுவினர் தலையிட்டும் இந்த தர்மசங்கடத்தை தவிர்க்க முடியவில்லை. விதிமுறைகளில் இவ்வளவு வெள்ளைக்காரத்தனமான விருந்தாளிகளாக அழைக்கும் விழாக்களை தங்கள் வளாகத்தில் ஏன் நடத்த அனுமதிக்க வேண்டும்?
டி.என்.சி.ஏ.கிளப்பை நடத்தும் டி.என்.சி.ஏவின் தலைவர் வெள்ளைக்காரர் அல்லர். குங்குமப்பொட்டு வைத்த பச்சை தமிழர். என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடந்ததாகக் கூறப்படும்.மேட்ச் ஃபிக்சிங் முறைக்கேடுகளுக்காக உச்சநீதிமன்றத்தால் தள்ளி வைக்கப்பட்டவர். அதையும் மீறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகியிருப்பவர்.
என்.சீனிவாசனுக்கு நீதிமன்றங்களின் மேல் எழுந்த கோபத்தினால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு இப்படியொரு அசிங்கமான தர்மசங்கடம் ஏற்படுவது அவருக்கு உடனே தெரிவிக்கப்பட்டதா? தெரிவிக்கப்பட்டும் அவர் தலையிடவில்லையா? என்று தெரியவில்லை. தெரிந்த பின்னாவது அவர் நடந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தால் அது பண்பாடு. இந்தக்கட்டுரை அச்சாகும் வரை அவர் இது விடயமாக எந்த அறிக்கையையும் விடவில்லை என்பது தான் அதிகபடியாகவே உறுத்துகிறது. விழாவிற்கு அழைப்பு விடுத்த அமைப்பாளர்கள் உடையலங்கார விதிமுறையை அழைப்பிதழ் டிரஸ் கோட் என்று குறிப்பிடாததும் ஒருவகையில் தவறுதான்.
மகாத்மா காந்தி வேட்டியணிந்து வந்ததை அரை நிர்வாண பக்கிரி என்று கிண்டல் செய்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூடப் பின்னாளில் அதற்கு வருத்தம் தெரிவித்தார். கோட்டு சூட்டு போட்ட அத்தனை வெள்ளையர்களையும் அரை நிர்வாணப் பக்கிரி தான் ஆட்டோ ஆட்டு என்று ஆட்டி வைத்தது வரலாறு. இந்த விடயத்தில் வட இந்திய உடையான நேரு ஜாக்கெட் கூட மேற்கத்திய உடையாக பல அரசு விழாக்களிலும் விருந்துகளிலும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. கழுத்தை ஒட்டிய கொலருடன் முட்டிக்கால் தாண்டிய நீள நேரு ஜாக்கெட்டை அநேகமாக வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அனைவராலும் அணியப்படுகிறது. ஆனால் தென்னாட்டு உடையான வேட்டி மட்டும் இன்னும் தாழ்த்தப்பட்ட உடையாகவே பாவிக்கப்படுவதுதான் கொடுமை.
வெள்ளையர்கள் காலத்திலிருந்து பின் தொடரப்பட்ட நமது சட்டமுறையில் பார் கவுன்சில் ஒப் இந்தியாவின் விதிமுறைகளில் (49 (1) GG) வழக்கறிஞர் டிரவுசர் அல்லது வேட்டி அணிந்து வருவதை அனுமதிக்கிறது. மேலே போட்டுக்கொள்ளும் கறுப்பு கோட் கவுன் விடயங்களில் சில விதிமுறைகளை விதித்தாலும் வெயில் காலத்தில் சில விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளவும் வழி செய்கிறது.
கோட்டும் சூட்டும் ஷுவும் குளிர் பிரதேசத்தில் இருக்கும் வெள்ளையர்களுக்காக வெள்ளையர்களால் உண்டாக்கப்பட்ட உடைமுறைகள். மண்டை காய்கிற வெயிலில் கழுத்தை இறுக்கும் கோட்டையும் டையையும் கட்டிக்கொண்டு நாம் அலைவது அசட்டுத்தனத்தின் உச்சநிலை.
காமராஜர் வேட்டி கட்டிக்கொண்டுதான் வெளிநாடுகளுக்கும் சென்றார். முந்திய அரசியல் அமைச்சராக இருந்த முரசொலிமாறனும் ப.சிதம்பரமும் வேட்டியணிந்துதான் அரசுப் பணிபுரிந்தனர். இவர்கள் நாடாளுமன்றத்திலேயும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களை இந்தியாவில் சந்திக்கும் போதும் கூட வேட்டிதான் அணிந்தனர். வெளிநாட்டிற்கு செல்லும்போது மேற்கத்தேய உடை அணிந்தால் அது தவறில்லை. ஆனால் உள்ளுக்குள்ளேயே இப்படி அலப்பரை செய்வது தான் அபத்தம். கண்ணியத்துக்கு தொடர்பே இல்லாதவர்கள் கூட கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம் அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பது போல் நடிப்பது இன்று நாகரிகமாகிவிட்டது.
இந்த வேட்டி விதிமுறை வெட்டிக் கலாசாரத்தை பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் கண்டித்திருக்கிறார்கள்.
ஐ.நா. சபைக்கூட்டத்தில் பேசும்போது கூட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வேட்டியணிந்திருந்ததை ராமதாஸ் சுட்டிக்காட்டி இந்த வேண்டாத விதிமுறைகளை சீர்படுத்த தமிழக அரசு சட்டம் கொண்டுவரவேண்டும் என்கிறார். நியாயமான கோரிக்கை தான்.
சென்னை மாநகராட்சி தலைவராக இருந்த சேர். பிட்டி. தியாக ராயர் ஆங்கிலேய அரசின் நிபந்தனைகளை ஏற்காமல் தனது வழக்கமான வெள்ளைவேட்டிச் சட்டையிலேயே சென்று வேல்ஸ் இளவரசரை வரவேற்றார். ஆங்கிலேயே அரசையே பணிய வைத்த நமக்கு இந்தக் கிளப்புகள் எம்மாத்திரம் என சட்டசபையில் சவால் விட்டார் முதல்வர் ஜெயலலிதா!
தகவல் – ஷண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக