அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

எபோலா (Ebola) வந்துருச்சு.. ஆனாலும் பயப்படத் தேவையில்லை... காரணம் 5!

எபோலோ ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் இதுகுறித்து யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி. டொனால்ட் டிரம்ப் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளார். நமது நாட்டுக்கு நாம் எபோலோவை இறக்குமதி செய்யக் கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



இவர் மத்திய அமெரிக்காவிலிருந்து வரும் அகதிக் குழந்தைகள் மூலம் அமெரிக்காவிலும் எபோல பரவி விடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் டிவிட்டரில் இப்படித்தான் பல அமெரிக்கர்கள் பீதியுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். பலர் எபோலா நோயாளிகளை அமெரிக்காவில் அனுமதிக்கக் கூடாது, அவர்களுக்கு சிகிச்சை தரக் கூடாது என்றும் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் எபோலா குறித்து இப்படி பீதி அடையத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். நிச்சயம் எபோலா அபாயகரமானதுதான். இது பாதித்தவர்களில் 90 சதவீதம் பேரைக் காப்பாற்ற முடியாதுதான். அதேசமயம் பீதி தேவையில்லை. இதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்கள்.

எபோலா வைரஸானது மிகவும் தளர்வானது, பலவீனமானது. நீண்ட தூரம் அது காற்றில் பரவாது. மேலும் தும்மல் மூலமோ அல்லது இருமல் மூலமோ அது பரவாது. ஜலதோஷம் பிடித்தவர்களிடமிருந்து அது மற்றவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் இடம் மாறாது.

யாருக்காவது நோய்த் தொற்று இருந்தால் மட்டுமே அவர்களுக்கு எபோலா வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும். மற்றபடி அனைவருக்கும் அதை பரவாது.

எபோலா வைரஸானது ரத்தம் மூலம் மட்டுமே நேரடியாக பரவும். அதேபோல மலத்திலிருந்தும் அது பரவும். மேலும் உடலில் காயம் இருந்து, சீழ் கட்டியிருந்தால் அதன் மூலமாக பரவும். மேலும் ஊசிகள் மூலமும் இது பரவும்.

எபோலாவைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல சிகிச்சை அளிப்பதும் கடினம். ஆனால் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை மட்டும் டாக்டர்கள் அறிந்து வைத்துள்ளனர். இது மட்டும்தான் சாதகமானது.

பொது சுகாதார அறிவும், விழிப்புணர்வும் இருந்தாலே போதும் இது பரவுவதைத் தடுக்க முடியும். மருத்துவமனைகளில் இது பரவாது. காரணம், அங்கு சுத்தம், சுகாதாரம் நிச்சயம் இருக்கும். அதேபோல எல்லா இடங்களையும் நாம் பார்த்துக் கொண்டாலே போதும் பரவுவதைத் தடுக்க முடியும்.

எபோலா பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவது அவசியம். அதைச் செய்து அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து வைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். எனவே பீதி தேவையில்லை என்பது டாக்டர்களின் கருத்து.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக