அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை... ஐந்து மொழிகளில்.. என்னா தைரியம்!!

யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பாத்து குசலம் விசாரிக்குமாம்... இந்தப் பழமொழி சினிமாவில் அடிக்கடி அரங்கேறுவதைப் பார்த்திருக்கிறோம்.


இப்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம். அரசியல், சினிமா துறையினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள நேரமாகப் பார்த்து, அவரது வாழ்க்கைக் கதையைப் படமாக்கப் போவதாக ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.

படத்துக்குத் தலைப்பு அம்மா!

இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறதாம்.

ஒரு இளம்பெண் எப்படி சினிமாவுக்குள் நுழைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு எப்படி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குகிறார்களாம்.

இந்தப் படத்தை இயக்குபவர் பைசல் சயீப். இவர் யார் தெரியுமா? ரஜினியின் இமேஜைக் கெடுக்கும் விதத்தில் படமெடுத்து, பின்னர் ரஜினியே கோபப்பட்டு வழக்குப் போட்டுத் தடுத்தாரே.. அந்த மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ராகினி திவேதி நடிக்கிறார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது வரை அனைத்தையும் காட்சிப்படுத்தப் போகிறார்களாம்.

'அம்மா' தமிழகத்திலிருந்திருந்தால் இப்படியொரு செய்தியை வெளியிடத் துணிந்திருப்பார்களா எவராவது.. என்னா தைரியம்!!

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக