அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 14 ஜூன், 2015

கள்­ளக் ­கா­த­லியை நாயாக மாற்­று­வ­தாக கூறிய மந்­தி­ர­வாதி இளம் பெண் மீதும் பாலியல் துஷ்­பி­ர­யோகம்

22 வய­தான இளம் பெண்­ணொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய மந்­தி­ர­வா­தியை கைது செய்ய களுத்­துறை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.



இச்­சம்­பவம் தொடர்­பாக தெரிய வரு­வ­தா­வது, கண­வரின் கள்­ளக்­காதல் தொடர்பை நிறுத்த வீட்டில் யாகம் நடத்த ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்தார். இதன்­போது வீட்டில் யாகத்தை நடத்­திய மந்­தி­ர­வாதி 22 வய­தான இளம் பெண்­ணொ­ரு­வரை வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.

யாகத்­திற்­காக எனக் கூறி இளம் பெண்ணை தனி­யான அறை ஒன்­றுக்கு அழைத்துச் சென்ற மந்­தி­ர­வாதி, அந்தப் பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட பெண் நாகொட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பெண்ணின் கண­வ­ரையும் அவ­ரது கள்ளக் காத­லி­யையும் செய்­வினை மூலம் நாய்­க­ளாக மாற்ற முடியும் என மந்­தி­ர­வாதி கூறி­ய­தாக பாதிக்­கப்­பட்ட பெண் களுத்­துறை பொலிஸ் நிலை­யத்தில் தெரி­வித்த முறைப்­பாட்டில் கூறி­யுள்ளார்.

சந்­தேக நப­ரான மந்­தி­ர­வாதி ஏற்­க­னவே சில பெண்­களை இவ்­வாறு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக