பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து தமக்குப் பூரண விபரங்கள் நாளை திங்கட்கிழமை தெரியவருமெனவும், அதன் பின்னர் அது தொடர்பான முடிவு எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வியாழக்கிழமை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நேற்று பூரண கடையடைப்பும் வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வடக்கு, கிழக்குப் பிரதேசமெங்கும் ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கியிருந்தன.
யுத்தம் முடிவுக்கு வந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் பரந்தளவில் அமைதியான முறையில் தமிழ் பேசும் மக்களால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரமன்றி, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மேற்படி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்றமையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
தமிழ் அரசியல் கைதிகளை பொறுத்தமட்டில் தமது விடுதலையை வேண்டி ஏலவே பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்நிலையில், பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. எனினும், அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஏமாற்றம் ஒன்றே அவர்களுக்கு எஞ்சியிருந்தது. புதிய அரசின் வருகையோடு இவ்விவகாரம் மீள் எழுந்ததுடன், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்தனர். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிக்கமைய அவர்கள் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்தனர். எனினும், அந்த உறுதிமொழிக்கேற்ப கைதிகள் விடுதலை சாத்தியமாகாததன் காரணமாக மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உடல்நிலை முற்றாகப் பாதிப்படைந்த நிலையில் 19 அரசியல் கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். கடந்த பல வருடகாலமாக சிறைத் தண்டனையை அனுபவித்து எந்தவித விமோசனமும் இல்லாத நிலையில் தாம் பல்வேறு துயரங்களை அனுபவித்து விட்டதாகவும், எனவே பொதுமன்னிப்பின் அடிப்படையில் தங்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோரியே குறித்த கைதிகள் தமது போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த புதன்கிழமை 31 அரசியல் கைதிகள் கடுமையான நிபந்தனைகளுடன் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. எனினும், அவர்களின் பிணைக்கான கையொப்பமிடுவதற்கு எவரும் இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கே கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது ஒருவகையில் தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்காத நிலைமையையே எடுத்துக்காட்டுவதாக அவர்களின் பெற்றோர்களும் விசனம் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே தமது விடுதலை விடயத்தில் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதாகவும், இது தொடர்பில் எவரும் சரியான முடிவை எடுக்கத் தவறிவிடுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கைதிகள் முன்வைத்துள்ளனர். மீண்டும் அரசியல் கைதிகள் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அதற்கு துரிதமாகப் பரிகாரத்தை காணவேண்டிய தார்மிகப் பொறுப்பு அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமுமே உள்ளது. அதனை மேலும் இழுத்தடிக்க முனைந்தால் அது அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்தை சிதைப்பதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், இந்த விவகாரத்தை சிங்கள அரசியல்வாதிகளும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரி தமக்கு சாதகமான முறையில் அரசியலாக்கி அதில் குளிர்காய முனையும் போக்குகளை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, சில கடும்போக்கு சிங்கள அரசியல்வாதிகள் படையினரை அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்துக்கொண்டு, புலிகளை விடுதலை செய்வதாக அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோன்று சில தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் தலைவர் இரா. சம்பந்தன் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். கைதிகள் விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பும் தலைவர் இரா.சம்பந்தனும் கடந்த பல வருடகாலமாக தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் வெறுமனே குற்றச்சாட்டுக்களை முன்வவைப்பது கூட்டமைப்பின் செயற்பாடுகளை பின்னடையச் செய்யவும் எதிர்த்தரப்பினருக்குச் சாதமாகவும் செய்யவே வழிவகுக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்வது அவசியமாகும். கைதிகள் விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்க வேண்டியது ஜனாதிபதியும் அரசாங்கமுமே ஆகும். எனினும், அதற்கான அழுத்தத்தை தொடர்ச்சியாக வழங்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பிடமும் அதன் தலைமைத்துவத்திடமும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் குத்து வெட்டுக்களும் மீண்டும் தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மறுபுறம் தமிழ் மக்களின் பலத்தை எவ்வாறு சீரழிக்கலாமென எதிர்பார்த்திருக்கும் சக்திகளுக்கு சிறப்பான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. இதுவரை காலம் கட்சிக்குள்ளிருந்த முரண்பாடுகள் தற்பொழுது பகிரங்கமாகி ஒருவர் மீது ஒருவர் நேரடியாக சேற்றை வாரியிறைக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளதைக் காணமுடிகின்றது.
அண்மையில் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் தெரிவித்த கருத்து, உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மக்களின் பிரச்சினைகளுக்கு அப்பால், தமது சுய கோபதாபங்களின் பின்னணியிலும் பதவி மோகத்தின் அடிப்படையிலும் இவ்வாறு செயற்படுகின்றனரா? இதற்காகவா நாம் இவர்களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து அனுப்பி வைத்தோம்? என கேள்வியெழுப்புகின்றனர் தமிழ் மக்கள்.
மறுபுறம், தமிழ் மக்கள் எந்தளவு தூரம் துயரங்களையும் இழுத்தடிப்புக்களையும் சந்தித்துள்ளார்கள் என்பதையும் அதிலிருந்து மீளமுடியாது அவர்கள் அன்றாடம் படும் வேதனைகளையும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு கணம் தங்கள் நெஞ்சில் கைவைத்து சிந்திப்பார்களேயானால், தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் இவ்வாறு உலகே வெட்கித் தலைகுனியும் வகையில் குடும்பிபிடிச் சண்டைகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்.
கட்சிக்குள் இவ்வாறு தீவிரமடைந்துவரும் கருத்து மோதல்கள் சந்தி சிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருப்பதுடன் மாத்திரமன்றி, தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மக்களை பரிகாசம் செய்யும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதை சர்வசாதாரணமாகக் காணமுடிகின்றது. இந்த நிலைமை மேலும் தொடருமானால் அது தமிழ் மக்களின் அரசியல் பலத்தை முற்றுமுழுதாக சீர்குலைப்பதுடன் கடந்த காலங்களில் தமிழர்கள் சிந்திய இரத்தத்தை அர்த்தமற்ற ஒன்றாகவே ஆக்கிவிடும்.
சரித்திரத்தை ஒருகணம் திரும்பிப் பார்த்தால் தமிழர்களின் துயர வரலாற்றுக்கு பிரதான காரணம் காட்டிக்கொடுப்புகளும் போட்டா போட்டிகளும் ஒருவரது காலை மற்றவர் வாரி விடுவதுமேயாகும். இந்த நிலைமை இனிமேலும் தொடருமானால் தந்தை செல்வா கூறியது போன்று, 'தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாத நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும்' என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நேற்று பூரண கடையடைப்பும் வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வடக்கு, கிழக்குப் பிரதேசமெங்கும் ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கியிருந்தன.
யுத்தம் முடிவுக்கு வந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் பரந்தளவில் அமைதியான முறையில் தமிழ் பேசும் மக்களால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரமன்றி, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மேற்படி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்றமையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
தமிழ் அரசியல் கைதிகளை பொறுத்தமட்டில் தமது விடுதலையை வேண்டி ஏலவே பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்நிலையில், பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. எனினும், அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஏமாற்றம் ஒன்றே அவர்களுக்கு எஞ்சியிருந்தது. புதிய அரசின் வருகையோடு இவ்விவகாரம் மீள் எழுந்ததுடன், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்தனர். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிக்கமைய அவர்கள் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்தனர். எனினும், அந்த உறுதிமொழிக்கேற்ப கைதிகள் விடுதலை சாத்தியமாகாததன் காரணமாக மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உடல்நிலை முற்றாகப் பாதிப்படைந்த நிலையில் 19 அரசியல் கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். கடந்த பல வருடகாலமாக சிறைத் தண்டனையை அனுபவித்து எந்தவித விமோசனமும் இல்லாத நிலையில் தாம் பல்வேறு துயரங்களை அனுபவித்து விட்டதாகவும், எனவே பொதுமன்னிப்பின் அடிப்படையில் தங்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோரியே குறித்த கைதிகள் தமது போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த புதன்கிழமை 31 அரசியல் கைதிகள் கடுமையான நிபந்தனைகளுடன் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. எனினும், அவர்களின் பிணைக்கான கையொப்பமிடுவதற்கு எவரும் இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கே கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது ஒருவகையில் தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்காத நிலைமையையே எடுத்துக்காட்டுவதாக அவர்களின் பெற்றோர்களும் விசனம் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே தமது விடுதலை விடயத்தில் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதாகவும், இது தொடர்பில் எவரும் சரியான முடிவை எடுக்கத் தவறிவிடுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கைதிகள் முன்வைத்துள்ளனர். மீண்டும் அரசியல் கைதிகள் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அதற்கு துரிதமாகப் பரிகாரத்தை காணவேண்டிய தார்மிகப் பொறுப்பு அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமுமே உள்ளது. அதனை மேலும் இழுத்தடிக்க முனைந்தால் அது அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்தை சிதைப்பதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், இந்த விவகாரத்தை சிங்கள அரசியல்வாதிகளும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரி தமக்கு சாதகமான முறையில் அரசியலாக்கி அதில் குளிர்காய முனையும் போக்குகளை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, சில கடும்போக்கு சிங்கள அரசியல்வாதிகள் படையினரை அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்துக்கொண்டு, புலிகளை விடுதலை செய்வதாக அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோன்று சில தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் தலைவர் இரா. சம்பந்தன் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். கைதிகள் விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பும் தலைவர் இரா.சம்பந்தனும் கடந்த பல வருடகாலமாக தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் வெறுமனே குற்றச்சாட்டுக்களை முன்வவைப்பது கூட்டமைப்பின் செயற்பாடுகளை பின்னடையச் செய்யவும் எதிர்த்தரப்பினருக்குச் சாதமாகவும் செய்யவே வழிவகுக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்வது அவசியமாகும். கைதிகள் விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்க வேண்டியது ஜனாதிபதியும் அரசாங்கமுமே ஆகும். எனினும், அதற்கான அழுத்தத்தை தொடர்ச்சியாக வழங்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பிடமும் அதன் தலைமைத்துவத்திடமும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் குத்து வெட்டுக்களும் மீண்டும் தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மறுபுறம் தமிழ் மக்களின் பலத்தை எவ்வாறு சீரழிக்கலாமென எதிர்பார்த்திருக்கும் சக்திகளுக்கு சிறப்பான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. இதுவரை காலம் கட்சிக்குள்ளிருந்த முரண்பாடுகள் தற்பொழுது பகிரங்கமாகி ஒருவர் மீது ஒருவர் நேரடியாக சேற்றை வாரியிறைக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளதைக் காணமுடிகின்றது.
அண்மையில் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் தெரிவித்த கருத்து, உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மக்களின் பிரச்சினைகளுக்கு அப்பால், தமது சுய கோபதாபங்களின் பின்னணியிலும் பதவி மோகத்தின் அடிப்படையிலும் இவ்வாறு செயற்படுகின்றனரா? இதற்காகவா நாம் இவர்களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து அனுப்பி வைத்தோம்? என கேள்வியெழுப்புகின்றனர் தமிழ் மக்கள்.
மறுபுறம், தமிழ் மக்கள் எந்தளவு தூரம் துயரங்களையும் இழுத்தடிப்புக்களையும் சந்தித்துள்ளார்கள் என்பதையும் அதிலிருந்து மீளமுடியாது அவர்கள் அன்றாடம் படும் வேதனைகளையும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு கணம் தங்கள் நெஞ்சில் கைவைத்து சிந்திப்பார்களேயானால், தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் இவ்வாறு உலகே வெட்கித் தலைகுனியும் வகையில் குடும்பிபிடிச் சண்டைகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்.
கட்சிக்குள் இவ்வாறு தீவிரமடைந்துவரும் கருத்து மோதல்கள் சந்தி சிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருப்பதுடன் மாத்திரமன்றி, தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மக்களை பரிகாசம் செய்யும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதை சர்வசாதாரணமாகக் காணமுடிகின்றது. இந்த நிலைமை மேலும் தொடருமானால் அது தமிழ் மக்களின் அரசியல் பலத்தை முற்றுமுழுதாக சீர்குலைப்பதுடன் கடந்த காலங்களில் தமிழர்கள் சிந்திய இரத்தத்தை அர்த்தமற்ற ஒன்றாகவே ஆக்கிவிடும்.
சரித்திரத்தை ஒருகணம் திரும்பிப் பார்த்தால் தமிழர்களின் துயர வரலாற்றுக்கு பிரதான காரணம் காட்டிக்கொடுப்புகளும் போட்டா போட்டிகளும் ஒருவரது காலை மற்றவர் வாரி விடுவதுமேயாகும். இந்த நிலைமை இனிமேலும் தொடருமானால் தந்தை செல்வா கூறியது போன்று, 'தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாத நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும்' என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக