அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

திரு­ம­ண­மாகி 7 வரு­டங்­க­ளா­கியும் கர்ப்­பந்­த­ரிக்­காத மனை­வியின் கரங்­களை வெட்டித் துண்­டித்த கணவர்

 Jackline Mwende (pictured) was brutally slashed by Stephen Ngila at her home in Masii, Machakos County after he told her 'Today is your last day'
கணவர் ஒருவர், தான் இன­வி­ருத்தி ஆற்­ற­லற்­றவர் என்­பதை அறிந்­தி­ருந்த நிலை­யிலும் திரு­ம­ண­மாகி 7 வரு­டங்­க­ளா­கியும் கர்ப்­பந்­த­ரிக்­க­வில்லை எனக் குற்­றஞ்­சாட்டி தனது மனை­வியின் கரங்­களை வெட்டித் துண்­டித்த விப­ரீத சம்­பவம் கென்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.


 Mwende, 27, was also left with horrific injuries to her head. The case has sparked outrage in Kenya
மசாகொஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள மாஸ்லி எனும் இடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் நகிலா (34 வயது) என்ற கண­வரே இவ்­வாறு தனது மனை­வி­யான ஜக்லின் மவென்ட்டின் (27 வயது) கரங்­களை வெட்டித் துண்­டித்­துள்ளார்.

அவர் தனது மனை­வி­யிடம்' "இன்­றைய தினம் உனது இறுதி நாளாகும்" எனக் குறிப்­பிட்ட பின்­னரே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யுள்ளார்.

குழந்தைப் பேறு இல்­லாமை குறித்து மருத்­துவ உத­வியைப் பெறச் சென்ற மேற்­படி இரு­வ­ரையும் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள், ஸ்டீபன் நகிலா இன­வி­ருத்தி ஆற்­ற­லற்­றவர் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

ஆனால் ஸ்டீபன் நகிலா தனது குறை­பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து ஜக்­லினே குழந்­தை­யின்­மைக்கு காரணம் எனக் குற்­றஞ்­சாட்டி வந்தார்.
இத­னை­ய­டுத்து ஸ்டீபன் நகி­லாவும் அவ­ரது மனை­வியும் பிரிந்து வாழ ஆரம்­பித்­தனர்.

இந்­நி­லையில் 3 மாதம் கழித்து வீடு திரும்­பிய ஸ்டீபன் நகிலா, பாரிய வெட்டுக் கத்­தியால் தனது மனை­வியை தாக்க ஆரம்­பித்­துள்ளார்.

இந்த சம்­ப­வத்தில் ஜக்லின் மவென்ட்டின் இரு கரங்­களும் துண்­டிக்­கப்­பட்டன.
ஸ்டீபன் நகிலா தனது மனை­வியைக் கொல்லும் முக­மா­கவே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து ஜக்லின் மவென்ட் அய­ல­வர்­களால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.

மேற்­படி சம்­பவம் இடம்­பெற்று ஒரு நாள் கழித்து ஸ்டீபன் நகிலா கைது­செய்­யப்­பட்டார்.

இது தொடர்பில் ஜக்லின் மவென்ட் கூறுகையில், “நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் என்பதை அறிந்திருந்தும் இரக்கமற்ற முறையில் அவர் என்னைக் கொல்ல முயற்சித்தார்" என்று கூறினார்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக