கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 பேர் கொச்சி வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சி செய்தனர். அவர்களை கடற்படையினர் பிடித்து எச்சரித்து அனுப்பி விட்டனர். அவர்கள் பிடிபட அந்த அகதி முகாமை சேர்ந்த இன்னொரு தரப்பினர் தான் காரணம் என்று நினைத்த 15 பேர் கும்பலாக வந்து இன்னொரு தரப்பினரை தாக்கினார்கள்.
இதில் ஜேசுதாஸ்,அவரது மனைவி மேரி ஜெனீதா மற்றும் சாமி பிள்ளை ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஜேசுதாசின் குழந்தை தர்ஷிகாவை அந்தக்கும்பல் தூக்கி வீசியது. இதில் தர்ஷிகாவும் காயம் அடைந்தார். இந்த மோதலை தொடர்ந்து அகதி முகாமில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.இது தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக