இப்படித்தான் நடக்கின்றது. எது நடந்தாலும் இப்படித்தான் வெள்ளை வான் என்று சொல்வார்கள். தேனிலவுக்கு அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக யாரும் சென்றிருந்தாலும்கூட, அதனையும் வெள்ளைவானுடன் சம்பந்தப்படுத்தித்தான் கூறுவார்கள். இவையெல்லாம் வெறும் யூகக்கதைகள். ஏன் நாங்கள் வெள்ளை வானைப் பயன்படுத்த வேண்டும்? வெள்ளைவான் இருந்திருந்தால், அவர்கள், ஒரு நீல வானை அல்லது ஒரு கறுப்பு வானை ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? இதெல்லாமே வெறும் பிரசார வேலைகளேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
அல் -- ஜசீரா தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய செவ்வி...
அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. வெறும் பிரசாரத்திற்காகவே அவைகள் முன்வைக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையினால் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தல் செயற்பாடுகள் குறித்து பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அல் ஜசீரா தொலைக்காட்சி சேவையிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜேம்ஸ் பேய்ஸ் உடனான ஜனாதிபதியின் நேர்காணலின் கேள்வி பதில் வடிவத்தை இங்கு தருகிறோம்.
அல் ஜசீரா: இலங்கையின் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த கொடூரமான சிவில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்றன. ஆனாலும் சிறந்த எதிர்காலம், பரஸ்பர கௌரவம், நல்லெண்ணம் என்பவற்றின் மீதான நம்பிக்கைகள் நாளுக்கு நாள் அழிந்து செல்வதையே காண முடிகின்றது சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கையொன்றும் இதையே சுட்டிக்காட்டுகின்றது. இலங்கையைப் பற்றிய தெளிவற்ற நம்பிக்கையற்ற ஓவியத்தையே அந்த அறிக்கை சித்திரமாகக் காட்டுகின்றது.
இராணுவம் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மௌனமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அல்லது கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று அது சுட்டிக்காட்டியிருக்கின்றது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றார்கள். இவையெல்லாமே கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் தலைமையிலான ஆட்சியின் கீழ் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ நாட்டை ஏதேச்சதிகாரப் பாதையில் நடத்திச் செல்பவராக ஐ.நா. கூறுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக நிராகரித்துள்ள அரசாங்கமும், அரச ஆதரவாளர்களும் சொற்போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழர் பரம்பரையில் வந்துதித்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையை, அவர்கள் ஐ.நா.வில் உள்ள பெண்புலி என்றும் வர்ணித்துப் பெயர் சூட்டியுள்ளார்கள். இதனைத் தனக்கிழைக்கப்பட்ட அவமான குற்றமாகக் குறிப்பிட்டு, நவிப்பிள்ளை கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
முதற் தடவையாக இவைகள் எல்லாவற்றையும் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன், அல் ஜசீராவினுடனான நேர்காணல் சந்திப்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ அவர்களே அல் ஜசிராவுடன் பேசுவதற்கு முன்வந்துள்ளமைக்கு நன்றி. சிவில் யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகின்றன. இந்த நிலையில் உங்களுடைய நாட்டின் தற்போதைய நிலை என்ன?
ஜனாதிபதி: கடந்த நான்கு வருடங்களில் எங்களால் எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்திருக்கின்றது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் நடைபெற்ற வடபகுதியை எடுத்துக் கொண்டால், அங்குள்ள எல்லா உட்கட்டமைப்புக்களையும் நாங்கள் நிர்மாணித்திருக்கின்றோம். இதற்காக நாங்கள் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்திருக்கின்றோம். அந்த நேரத்தில் யுத்த கைதிகளாக இருந்தவர்கள் - எங்களிடம் வந்து சரணடைந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர, அநேகமாக எல்லோரையுமே விடுதலை செய்திருக்கின்றோம். குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த அந்த ஒரு சிலருக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றன. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதித்துறையின் கடமையாகும். இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். சமூகத்தின் ஊடாக மறுவாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதை நான் நம்புகின்றேன். சமூகம் அவர்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும். இதில் நல்ல விளைவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. ஏனென்றால் கடந்த தேர்தலில் - மாகாண சபைத் தேர்தலில் 80 வீதமான மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே இது காட்டுகின்றது.
ஜேம்ஸ் பேய்ஸ்: நீங்கள் ஒரு சாதகமான நிலைமையைக் காட்டுகின்றீர்கள். ஆனால், உங்களுக்கு எதிராக சர்வதேசத்தினால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஐ.நா. செயலமர்வில் உரையாற்றுகையில் சில நாடுகளைத் திருப்தி செய்வதற்காகவே உலகம் செயற்படுகின்றது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இதன் மூலம் நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?
ஜனாதிபதி: சில நாடுகள் தங்களைப் பொலிஸ்காரர்களாக கருதுகின்றார்கள். அவர்கள் மற்ற நாடுகளைச் விரல் சுட்டி அதிகாரத்தைப் பாவிக்க முயல்கின்றார்கள். அந்த நாடுகளை கஸ்டத்தில் தள்ளப்பார்க்கின்றார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: எந்த நாடுகள் மேற்கத்தைய நாடுகளா?
ஜனாதிபதி: சில நாடுகள்
ஜேம்ஸ் பேய்ஸ்: ஐ.நா. பேரவை தீர்மானங்களின்போது வாக்களித்த நாடுகளில் உங்கள் அயலவரான, பெரிய நாடாகிய இந்தியாவே, இலங்கைக்கு எதிராக பல தடவைகள் வாக்களித்திருக்கின்றதே....?
ஜனாதிபதி: நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றோம். ஏனென்றால் அது எங்களுடைய அயல்நாடு. ஆனால், அவர்களுக்குப் பல அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் நன்கறிவோம். அவற்றை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: உங்களுக்குத் தெரியும், இலங்கைக்கு எதிராகக் கடைசியாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையிடம் இருந்து வந்துள்ளது. அவர் அண்மையில் உங்கள் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். உங்களையும் சந்தித்துப் பேசியிருந்தார். திரும்பிச் சென்றதன் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீங்கள் ஓர் ஏதேச்சதிகாரப் போக்கில் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார். அதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்?
ஜனாதிபதி: இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 19 தேர்தல்களை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். மாகாண சபைத் தேர்தல், பொதுத்தேர்தல் என்று பல தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. எனது பதவிக்காலம் 6 வருடங்கள். ஆனால் நான் அந்தக் காலம் முடிவடைவதற்கு முன்பே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருந்தேன். எனவே, பொதுமக்களே அரசாங்கத்தைத் தீர்மானிக்கின்றார்கள். யார் அரசாங்கத்தை அமைப்பதென்பது அவர்களுடைய கைகளிலேயே இருக்கின்றது.
ஜேம்ஸ் பேய்ஸ்: நவிப்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதில் இருந்து ஒரு விடயத்தை உங்களுக்காக வாசிக்கின்றேன்....கண்காணிப்பும், துன்புறுத்தலும் இலங்கையில் மோசமாகிக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இங்கு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி தாக்கப்படுகின்றார்கள். நிரந்தரமாகவும் அவர்கள் அமைதிப்படுத்தப்படுகின்றார்கள்..... இதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்?
ஜனாதிபதி: இதைப்பற்றி என்ன நினைப்பது? உண்மையிலேயே இது எனக்கு விளங்கவில்லை. நாட்டுக்கு வருகி;ன்ற ஒருவர் என்ன சொல்கின்றார் என்பது விளங்கவில்லை. இது ஒரு ஜனநாயக நாடு என்பதை முதலில் நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு சர்வாதிகார நாடல்ல. சர்வாதிகார நாடாக இருந்தால் அங்கு ஒரு சர்வாதிகாரி இருப்பார். ஆனால் இங்கு எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஜனநாயக நாடென்பதால் பல விதமான கருத்துக்கள் இங்கு இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எப்போதும் தோற்கடிப்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றன. உள்ளூர் மட்டத்திலும்சரி, சர்வதேச மட்டத்திலும்சரி அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.
ஜேம்ஸ் பேய்ஸ்: அப்படியென்றால் நவிப்பிள்ளையைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள், அவரை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
ஜனாதிபதி: இலங்கைக்கு வருவதற்கு முன்பே அவர் தனது அறிக்கையை எழுதிவிட்டார் என்றே மக்கள் கருதுகின்றார்கள். இதனை நான் அவருக்குக் கூறினேன். அவர் என்னைச் சந்தித்தபோது எதுபற்றியும் அவர் என்னிடம் முறையிடவில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: ஆனால் அவர் இப்போது முறையிட்டிருக்கின்றாரே.... அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது அவர் நடத்தப்பட்ட விதம் பற்றியும் அவர் கூறியிருக்கின்றார். அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர், அவரை ஐ.நா.வில் உள்ள தமிழ்ப் புலிகளின் பெண்புலி என்று வர்ணித்திருந்தாக அவர் கூறியிருக்கின்றார். உங்களுடைய சகோதரர் உட்பட சில அமைச்சர்களும் அவரைப்பற்றி தனிப்பட்ட ரீதியில் கருத்து வெளியிட்டிருந்ததாக அவர் சொல்லியிருக்கின்றாரே.....?
ஜனாதிபதி: இது ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இங்கு ஜனநாயகம் இருக்கின்றது. அதனால் அவர்கள் எதையும் கூறலாம். என்னிடம் 58 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை இருக்கின்றது. உலகத்திலேயே ஒரேயொரு ட்ரொட்ஸ்க்கி கொள்கையுடைய பாராளுமன்ற உறுப்பினரும் எங்களோடு இருக்கின்றார். அவர் எனது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கி;ன்றார். மாஸ்கோ சார் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். வலதுசாரி தீவிர கொள்கையுடையவர்களும் இருக்கின்றார்கள். மத தீவிர கொள்கையுடையவர்களும் இருக்கின்றார்கள். தமிழர்கள் இருக்கின்றார்கள். சிங்களவர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இப்படி எல்லாவிதமானவர்களும் எனது அமைச்சரவையில் இருக்கின்றார்கள். எல்லாரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள். அவர்கள் எல்லோரையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட முறையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு அமைச்சர் அல்லது ஒரு அதிகாரி தனக்கு வேண்டிய எதனையும் கூறலாம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நவிப்பிள்ளையைச் சந்தித்தவர்கள் அரசாங்கத்தினாலும், அரச படைகளினாலும் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றதே?
ஜனாதிபதி: இல்லை. இதுபற்றி அவர் எங்களிடம் எதுவும் சொல்லவே இல்லை. அப்படி சொல்லியிருந்தால் அதுபற்றி நான் விசாரணை செய்திருப்பேன். இதுபற்றி பகிரங்கமாகக் கருத்து வெளியிடும் வரையில், அவர் எதையும் எங்களிடம் குறிப்பிடவில்லை. அவர் என்னைச் சந்தித்தபோது, இப்படி நடந்தது என்று அவர் என்னிடம் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு எதையும் அவர் கூறவில்லை. ஆனால் இங்கிருந்து சென்றதன் பின்னர் இதை அவர் ஏன் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அவ்வாறு எதையும் செய்வில்லை. அவ்வாறு எங்களில் எவரும் நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொள்வதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அவரை வரவிடாமல் செய்திருக்கலாமே, அதை நாங்கள் செய்யவில்லை. அவர் விரும்பியவாறு எல்லா இடங்களுக்கும் செல்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தோம். அவர் தனக்குத் தேவையான யாரையும் சந்திக்கலாம் என்று அனுமதித்திருந்தோமே... (நவிப்பிள்ளைக்கு) இவர்கள் இவ்வாறான விடயங்களைச் சொல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களில் அனேகமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். ஆகவே அவர்கள் தாங்கள் விரும்பிய எதையும் அவருக்குக் கூறியிருக்கலாம். நாங்கள் அவ்வாறு அவர்கள் விரும்பியவற்றைச் சொல்வதற்குக் கூட அனுமதித்திருந்தோம். நாங்கள் நினைத்திருந்தால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் தடுத்திருக்கலாம். தடுத்திருக்க முடியும் இல்லையா.....?
ஜேம்ஸ் பேய்ஸ்: வடக்கில் உள்ள நிலைமைகள் பற்றி குறிப்பாக நாங்கள் இப்போது கவனிக்கலாம். வடபகுதி உட்பட சில இடங்களில் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இது எதனைக் காட்டுகின்றது?
ஜனாதிபதி: நீதியும் நேர்மையுமான தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அது காட்டுகின்றது. வடக்கில் நாங்கள் தேர்தலில் தோற்றிருக்கின்றோம். தேர்தலுக்கு முன்பே இது எங்களுக்குத் தெரியும். முன்னர் அங்கு தேர்தல்கள் நடைபெற்றபோது அதனை பகிஸ்கரித்த சம்பவங்கள் இடம்பெற்றிருகின்றன. ஆனால் நாங்கள் நீதியும் நேர்மையுமான ஒரு தேர்தலை அங்கு நடத்தியிருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நேர்மையான தேர்தல் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் அந்தத் தேர்தலைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றனவே...?
ஜனாதிபதி: நான் மட்டுமல்ல. அங்கு சென்றிருந்த ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களும் அங்கு நியாயமான ஒரு தேர்தல் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. அங்கு சார்க் நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் அங்கிருந்தார்கள். அதிகளவான இராணுவ பிரசன்னம் இருந்தது. குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் செயற்பட்டார்கள். வேட்பாளர்களும், அரசியல் கட்சி ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்பட்டார்கள். தேவையற்ற வகையில் இராணுவத்தினர் கூடியிருந்தார்கள். ஒரு பெண் வேட்பாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது என்றெல்லாம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். 'நியாயமான ஒரு தேர்தல் நடைமுறைக்குத் தடையாக இராணுவத்தின் செயற்பாடு விசேட அம்சமாக அமைந்திருந்தது' என்று குறிப்பாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதைப்பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்?
ஜனாதிபதி: தேர்தல் முடிவுகளே இதற்குப் பதில் கூறியிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் என்ன? 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை அவர்கள் கைப்பற்றியிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு தேர்தல் முடிவு வரும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். இதைப்பற்றி நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். சில வெளிநாட்டு செய்தியாளர்களோ அல்லது வெளிநாட்டுத் தூதுவர்களோ என்னிடம் இந்தத் தேர்தல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என கேட்டிருந்தார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே நான் கூறியிருந்தேன், எங்களுக்கு ஏழுக்கும் பத்துக்கும் இடையிலான ஆசனங்கள் கிடைக்கும் என்று. ஆனால் என்னுடைய கணிப்பு பிழையாகிவிட்டது. நாங்கள் ஏழு இடங்களை மட்டும்தான் பெற்றிருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: பொதுமக்கள் இப்போது பேசியிருக்கின்றார்கள். (தேர்தல் மூலம் தங்களுடைய கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.) அவர்களுடைய கருத்துக்கு நீங்கள் செவிசாய்ப்பீர்களா?
ஜனாதிபதி: அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். நாங்கள் அங்கு தேர்தலில் தோல்வியடைவோம் என்பது எங்களுக்குத் தெரியும். வடக்கை நாங்கள் உங்களுக்கே தரப்போகின்றோம் என்று ரீ.என்.ஏ. தலைவரிடமும் நான் சொல்லியிருந்தேன். யார் வெல்லப் போகின்றார்கள், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்திருந்தும் நாங்கள் அங்கு தேர்தலை நடத்தினோம். ஏனென்றால் அங்கு நாங்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக நடத்தினோம். அவர்களும் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். யாரும் எதனைப்பற்றியும் விமர்சனம் செய்யலாம். இப்போது அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் செயற்படட்டும். விளைவுகளைத் தரட்டும்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். மக்கள் எதற்காக வாக்களித்துள்ளார்கள் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள். வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளார்கள். அத்துடன் குறிப்பிட்ட அளவு சுய ஆட்சியையும் கேட்டிருக்கின்றார்கள். இதனை வழங்குவீர்களா?
ஜனாதிபதி: இல்லை. உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் முதலில் அந்த மாதிரி ஒன்றைக் கூறினார்கள். பிறகு அதனை மாற்றிக்கொண்டார்கள். இராணுவம் அவர்கள் கூறும் அளவில் அங்கு இல்லை. இராணுவத்தை வெளியேற்றுமாறு அவர்கள் கேட்க முடியாது. ஏனென்றால் ஏனைய மாகாணசபைகளும் நாடெங்கிலும் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கேட்டால், நான் இராணுவத்தை எங்கே வைத்திருப்பது? யாராவது இராணுவத்தை வைத்திருப்பதற்கு வேறு எங்காவது எனக்கு இடம் கொடுப்பார்களா..?
ஜேம்ஸ் பேய்ஸ்: இப்பொழுது யுத்தமில்லை. அப்படி இருக்கும்போது பெரிய அளவில் இராணுவம் எதற்குத் தேவைப்படப் போகின்றார்கள்?
ஜனாதிபதி: நீங்கள் அப்படி நினைக்கின்றீர்கள். ஆனால் பாதுகாப்பிற்கு எங்களுக்கு இராணுவம் தேவைப்படுகின்றது. எமது பாதுகாப்புப் பற்றியும் இராணுவ பலம் எவ்வளவு இருக்க வேண்டும், எத்தனை இராணுவத்தினர் இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள்தான் தீர்மானிக்க முடியும். இராணுவத்தை வெளியேற்றினால் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியுமா? வியட்நாமில் யுத்தம் முடிந்தபின்னர் என்ன நடந்தது? அவர்களுடைய அணுகுமுறைகளை நாங்கள் மாற்ற வேண்டும். அவர்களுக்கும் நாங்கள் புனர்வாழ்வளிக்க வேண்டும்.
ஜேம்ஸ் பேய்ஸ்: தேவைக்கதிகமாக இராணுவத்தை வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? மூன்று சிவிலியன்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் இராணுவம் இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவித்திருக்கின்றனவே.......?
ஜனாதிபதி: இல்லை. அது தவறு. அது தவறான புள்ளிவிபரம். அந்தப் பகுதியில் 8 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமே அங்கு இருக்கின்றார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. நவிப்பிள்ளையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்களுடைய இடங்களில் இராணுவம் முகாம் அமைக்கின்றது. தனியார் காணிகள் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன................
ஜனாதிபதி: (இடைமறித்து...) தனியார் காணிகள் எல்லாவற்றையும் நாங்கள் கையளித்துவிட்டோம். விமானத்தளம், துறைமுகம் இருக்கின்ற இடத்தில் மாத்திரம் நாங்கள் சில இடங்களை எடுத்திருக்கின்றோம். அதைத் தவிர ஏனைய காணிகள் எல்லாவற்றையும் கையளித்துவிட்டோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: கல்வி, விவசாயத்துறைகளிலும் கூட இராணுவம் ஈடுபட்டிருப்பதாக (நவிப்பிள்ளை) அவர் கூறுகின்றாரே....?
ஜனாதிபதி: என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த விடயங்கள் பற்றி அவர் எப்படி கூற முடியும்....விவசாயம்.....? சரி.... அவர்கள் சாப்பிட வேண்டுமல்லவா.... அவர்களுக்கு வேறு வேலை இல்லாததால் விவசாயம் செய்கின்றார்கள். அவர்கள் பாடசாலைகளில் சென்று கல்வி போதிப்பதில்லையே...பாடசாலைகளில் கடெட் பயிற்சி என்று ஒன்றிருக்கின்றது. அவர் அதைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார். இறுதிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி நம்பிக்கை தரத்தக்க வகையில் இன்னுமே நீங்கள் விசாரணை நடத்தவில்லை என்று அவர் தனது அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின் அதி முக்கிய விடயமாக இது குறிபபிடப்பட்டிருக்கின்றது. அத்தகையதொரு விசாரணையை நீங்கள் நடத்த வேண்டும் என்று அடுத்த மார்ச் மாதம் வரையில் அவர் உங்களுக்கு அவகாசம் வழங்கியிருக்கின்றார். இதற்கு உங்களின் பதில் என்ன?
ஜனாதிபதி: முப்பது வருடங்களாக யுத்தம் நடந்திருக்கின்றது....முப்பது வருட யுத்தம். இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தவைகள் பற்றி மட்டும்தான் அவருக்குத் தேவையாக இருக்கின்றது. அது ஏன்......ஏன்? அதனை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் யுத்தம் நடைபெற்ற முப்பது வருடங்களையும் பார்க்க வேண்டும். அப்போது என்ன நடந்தது? ஹிரோஸிமாவில் என்ன நடந்தது என்று யாரும் கேட்டால்....ஜப்பானில் யுத்தம் நடைபெற்றதன் பின்னர் ஹிரோஸிமாவில் என்ன நடந்தது என கேட்டால், அதுபற்றி யாரும் விசாரணை செய்யப் போகின்றார்களா? இந்த விடயத்தில் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எல்லா நாடுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அந்தக் கடைசி இரண்டு தினங்களில் என்ன நடந்தது என்பதை எங்களால் சொல்ல முடியும். எங்களிடம் ஒளிவு மறைவில்லை. மறைப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை. அல் ஜசீரா அங்கு சென்றிருந்தது. அவர்கள் யுத்த முனையின் முன்னால் இருந்தார்கள். நாங்கள் அவர்கள் அங்கு செல்வதற்கு அனுமதித்திருந்தோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: அந்த நேரத்தில் அல் ஜசீரா வடக்கின் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடியதாக இருக்கவில்லை.
ஜனாதிபதி: நாங்கள் அவர்களை அனுமதித்திருந்தோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: அந்த நேரத்தில் இராணுவம் பிழைகள் ஏதும் செய்ததாக நீங்கள் நம்புகின்றீர்களா?
ஜனாதிபதி: நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் நன்கு பயிற்றப்பட்டிருந்தார்கள். எல்ரீரீயினரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மக்கள் அந்தக் கடைசி சில தினங்களாக அங்கிருந்து அரசாங்கப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்தார்கள். இராணுவத்தினர் அவர்களுக்கு உதவி செய்தார்கள். தங்களுக்கென்று வைத்திருந்த தண்ணீரைக் கொடுத்தார்கள். அந்த மக்களுக்கு அவர்கள் தங்களுடைய உணவைக் கொடுத்தார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: இராணுவத்தினர் இந்த மக்கள் மீது எறிகணை தாக்குதலை நடத்தினார்கள்;. வைத்தியசாலைகள் மீதுகூட தாக்குதல் நடத்தினார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகின்றதே......
ஜனாதிபதி: இல்லை. அவர்கள் அப்படி செய்யவில்லை. நான் அதுபற்றி விசாரித்தேன். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: நீ;ங்கள்தான் ஜனாதிபதி, நீங்கள்தான் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஒட்டுமொத்தமாக அந்தச் சம்பவங்களுக்கு நீங்களே பொறுப்பு அல்லவா?
ஜனாதிபதி: ஆம். அதனால்தான் சொல்கிறேன். யாரும் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன். அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும். சும்மா எதனையும் பொதுவாகச் சொல்வதில் அர்த்தமில்லை. என்ன நடந்தது. இவர் இதனைச் செய்தார், இராணுவம் முழுதும் இதiனைச் செய்தது என்று சுட்டிக்காட்டி கூற வேண்டும். அவ்வாறு கூறினால், நாங்கள் அதுபற்றி விசாரணை செய்ய முடியும். அவ்வாறு எந்தவிதமான முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. இவையெல்லாம் வெறும் பிரசார வேலைகள். இது இலங்கைக்கு எதிரான பிரசாரம். ஏனைய நாடுகளுடன் தயவு செய்து ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கை போன்ற சிறிய நாட்டைத் தனிமைப்படுத்தாதீர்கள். இலங்கையைத் துன்புறுத்த முயற்சிக்காதீர்கள். அச்சுறுத்த முற்படாதீர்கள். அவர்களில் சிலர் சிறிய நாடுதானே என்று அச்சுறுத்த முயற்சிக்கின்றார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: வடக்கிலிருந்து வேறு விடயங்களுக்கு வருவோம். கடந்த பல வருடங்களாக பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இது தொடர்பில் ஒரு விசாரணைக்குழுவை நீங்கள் நியமித்திருக்கின்றீர்கள்......
ஜனாதிபதி: ஆம். ஏனென்றால், கடந்த 1989 ஆம் ஆண்டு, தெற்கில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டிருந்தபோது, காணாமல் போனவர்கள் தொடர்பில் பலதும் சொல்லப்பட்டிருந்தது. அறுபதாயிரம் அல்லது நாற்பதாயிரம் பேர் வரையில் காணாமல் போயிருந்ததாக அப்போது கூறப்பட்டிருந்தது. காணாமல் போனவர்கள் தொடர்பில் ஒரு விசாரணைக் கமிஸன் நியமிக்கப்பட வேண்டும் என்று அப்போது நான்தான் போராட்டம் நடத்தியிருந்தேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: மீண்டும் நவிப்பிள்ளை கூறிய விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். வெள்ளை வான்களில் காணாமல் போயிருப்பவர்கள் பற்றி நீங்கள் விசாரணைகள் நடத்தவில்லை என்று அவர் சொல்லியிருக்கின்றார். வெள்ளை வான்களில் கடத்தல்கள் நடைபெற்றதாகவும், வீதிகளில் சென்றவர்கள்கூட இந்த வெள்ளை வான்களில் இழுத்துப் போட்டு கடத்திச் செல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளாரே........
ஜனாதிபதி: உங்களுக்கு ஒரு விடயம் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் கடத்தல் தொடர்பாக ஒரு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வெள்ளை வான் வந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவரைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசியாக அவரை நாங்கள் ஒரு விருந்தகத்தில் அவருடைய ஆண் நண்பர் ஒருவருடன் இருந்ததை நாங்கள் கண்டுபிடித்திருந்தோம். இப்படித்தான் நடக்கின்றது. எது நடந்தாலும் இப்படித்தான் வெள்ளை வான் என்று சொல்வார்கள். தேனிலவுக்கு அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக யாரும் சென்றிருந்தாலும்கூட, அதனையும் வெள்ளைவானுடன் சம்பந்தப்படுத்தித்தான் கூறுவார்கள். இவையெல்லாம் வெறும் யூகக்கதைகள். ஏன் நாங்கள் வெள்ளை வானைப் பயன்படுத்த வேண்டும்? வெள்ளைவான் இருந்திருந்தால், அவர்கள், ஒரு நீல வானை அல்லது ஒரு கறுப்பு வானை ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? இதெல்லாமே வெறும் பிரசார வேலைகளேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம், அது வடக்கில் நடைபெறவில்லை. ஆனால் கொழும்புக்கு அண்மையில் நடைபெற்றது.... அதில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியபோது அங்கு இராணுவத்தினர் அனுப்பப்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. அது ஒரு பிழையான நடவடிக்கையில்லையா?
ஜனாதிபதி: அதுபற்றி நாங்கள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றோம். நீதவான் நீதிமன்ற விசாரணையும் நடைபெறுகின்;றது. இந்த விடயத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.
ஜேம்ஸ பேய்ஸ்: உங்களுடைய ஆதரவாளர்கள் கூட இதுபற்றி அக்கறையும் கரிசனையும் வெளியிட்டிருக்கின்றார்கள். வடக்கில் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் நடத்தப்பட்டதுபோல, மாசடைந்த நீருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய நிராயுதபாணிகளான சிங்கள மக்கள்...பெருமளவிலான பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள், சிறுவர்களையும் அரச அதிகாரிகள் நடத்தியிருக்கின்றார்கள் என்று கூற வேண்டியிருக்கின்றது என்று ஜெனிவாவில் இருந்த ஐநாவுக்கான உங்களுடைய முன்னாள் தூதுவர்கூட குறிப்பிட்டிருக்கின்றாரே......? அதுவும் உங்களுடைய முன்னாள் தூதுவர் கூறியிருக்கின்றாரே......
ஜனாதிபதி: ஆம். எங்களுடைய தூதுவர்தான். என்னுடைய காலத்தில் இருந்தவர்தான். எங்களுக்குத் தெரியும். அவர் இப்போது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உறுப்பினர். அதுவும் சக்தி வாய்ந்த ஓர் அரச சார்பற்ற நிறுவனம். எனவே, அவர்கள் தங்களுக்கென்ற கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். இதைத்தான் நான் கூறினேன் இந்த நாட்டில் உள்ள ஜனநாயகம் என்று. அவர்கள் எதையும் சொல்லலாம். ஏன், இந்த முழு விடயமும், எங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. நாங்கள் முழு ஆட்களையும் உடனடியாகவே இடம் மாற்றம் செய்துள்ளோம். அதுபற்றியும் நாங்கள் விசாரணை செய்து கொண்டிருக்கின்றோம். அவர்கள் குற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், நாங்கள் அவர்களுக்குத் தண்டனை வழங்குவோம். குற்றவாளிகளைப் பாதுகாக்கப் போவதில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: மற்றுமொரு முக்கியமான அக்கறைக்குரிய விடயம்.....சிறுபான்மை மதத்தவர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள். முறையிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றீர்கள்?
ஜனாதிபதி: சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. அவற்றின் பின்னணியை நீங்கள் பார்க்க வேண்டும். ஏன் அவர்கள் தாக்கப்பட்டார்கள்? இப்போது பாருங்கள் அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதுவும் ஏழு வயதுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறவு நடத்தப்பட்டிருந்தது. இயல்பாகவே எவரும், அவரகள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை, அவர்கள் தாக்குவார்கள்தானே..... அந்தச் சிறுமியின் உறவினர்கள் மற்றும் அதைப்பற்றி கேள்விப்பட்டவர்கள் அனைவரும் குழம்பிப் போனார்கள். எனவே, இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இந்த மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லா சம்பவங்களுக்கும் ஒரு பின்னணி இருக்கின்றது. ஏனென்றால், இங்குதான் முஸ்லிம்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் தங்களுடைய மதங்களைப் பின்பற்றி வசிக்கின்றார்கள். பல மதங்களையும் சேர்ந்தவர்கள் எந்தப்பிரச்சினைகளுமின்றி, தங்கள் மதங்களை ஒரேயொரு நாடாகிய சிறிலங்காவில் மட்டும்தான், இவ்வாறு பின்பற்றி வாழ்கின்றார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: முஸ்லிம்களுக்கு எதிரான 227 சம்பவங்கள் பற்றி நவிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றாரே....
ஜனாதிபதி: இவையெல்லாம் அர்த்தமில்லாத கதைகள். அப்படி ஏதேனும் இருந்தால் அந்தப் பட்டியலை என்னிடம் தாருங்கள். அதைப்பற்றி நான் ஆராய்ந்து பார்க்கின்றேன். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. சில சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. அதுவும் தனிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள். வேறு சில நாடுகளில் இவ்வாறு நடைபெற்றிருந்தால், அந்த நாடுகளின் பெயர்களை நான் குறிப்பிடப்போவதில்லை. இராணுவ சிப்பாய் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டதன் பின்னணியில் 109 பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவற்றில் அரசாங்கம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் தனிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களாகும். இலங்கையில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்துவிட்டால் உடனே என்மீது குற்றம் வந்துவிடும். வேறு நாடுகளில் நடப்பவையெல்லாம் தனிப்பட்ட சம்பவங்கள். இங்கு நடந்தால் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திவிடுவார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: உங்களுடைய ஊடக சுதந்திரம் எப்படி இருக்கின்றது?
ஜனாதிபதி: வார இறுதி பத்திரிகைகளைப் பார்த்தீர்களானால் ஊடகங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வீர்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எவராவது தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றார்களா.........?
ஜனாதிபதி: அந்தப் எண்ணிக்கை பிழையான எண்ணிக்கையென்று எண்ணுகிறேன். சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை பற்றி நாங்கள் விசாரணை செய்து கொண்டிருக்கின்றோம். அதில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. கொல்லப்படவில்லை. சம்பவங்கள் என்று குறிப்பிட விரும்புகிறேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: ராஜபக்ச குடும்பத்தினர் முக்கியமான அரச பதவிகளில் இருக்கின்றார்கள். அதைப்பற்றி நான் கேட்கலாமா? ஏனென்றால் உங்களுடைய சகோதரர்கள் எல்லோரும் முக்கிய பதவிகளை வகிக்கின்றார்கள். மற்றவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவ்வாறில்லையே.....
ஜனாதிபதி: அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அது என்னுடைய குற்றமில்லையே.....
ஜேம்ஸ் பேய்ஸ்: நீங்கள் எவ்வளவு காலத்திற்கு இந்தப் பதவியில் இருக்கப் போகின்றீர்கள்?
ஜனாதிபதி: அது மக்களுடைய கைகளில் தங்கியிருக்கின்றது. அவர்கள் நினைத்தால் நாளையே என்னை இதிலிருந்து அனுப்பலாம். நாளையில்லை. அடுத்தத் தேர்தலில் அவ்வாறு அவர்கள் செய்யலாம். அடுத்த தேர்தல் வரையில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
ஜேம்ஸ் பேய்ஸ்: உங்களுடைய எதிர்காலக் கனவென்ன?
ஜனாதிபதி: நாட்டை வளப்படுத்தி மக்களையும் வளமுள்ளவர்களாக்குவது. அதனைச் செய்யலாம் என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால், இந்த நான்கு வருடங்களில் எங்களுடைய பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அது மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கின்றோம். வேலை வாய்ப்பின்மை குறைந்திருக்கின்றது. கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. எழுத்தறிவு வீதம் 98 வீதமாகியிருக்கின்றது. நாடு வளர்ச்சியடைவதற்காக நாங்கள் நிறைய செய்திருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: இந்த சாதனைகள் பற்றியெல்லாம் நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் உங்கள் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்........முக்கிய பிரமுகராகிய இலங்கையர் ஒருவரை நான் சந்தித்தேன். உரிமைகளைப் பாதுகாக்கத்தக்க வகையில் நியாயமான விதிமுறைகளைக் கொண்ட அரசியலமைப்புடன் கூடிய ஜனநாயக நாடாக இந்த நாடு திகழ்ந்ததாகவும், இப்போது அது ஒரு குடும்ப விவகாரமாக மாறியிருக்கின்றது என்று கூறினார்.....
ஜனாதிபதி: அவர்்கள் தான் இந்த நாட்டை குடும்ப விவகாரமாக்கப் பார்க்கின்றார்கள். அதனால்தான் அப்படி கூறுகின்றார்கள். இந்த ஒரு விமர்சனத்தைத்தான் அவர்கள் செய்ய முயற்சிக்கின்றார்கள். அவர்கள் எங்கள் மீது சேறு பூச முயற்சிக்கின்றார்கள். ஆனால் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். நாங்கள் நியாயமானவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் என்னை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். கடந்த 1936 ஆம் ஆண்டிலிருந்து எங்களுடைய குடும்பம் அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கின்றது. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் மக்களோடு இருக்கின்றோம். நாங்கள் நியாயமானவர்கள் என்று அவர்கள் நன்கறிவார்கள். நாங்கள் நேர்மையானவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம் என்பதும் அவர்களுக்கத் தெரியும்.. எங்களால் செய்ய முடியாததை செய்ய முடியாது என்று நாங்கள் கூறுவோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு வாக்களிக்கின்றார்கள். இல்லாவிட்டால் அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். முதல் தடவை 2005 ஆம் ஆண்டு நான் ஒரு லட்சம் வாக்குகளுடன் வெற்றி பெற்றேன். இரண்டாம் முறை 2011 ஆம் ஆண்டு 1.8 மில்லியன் (பதினெட்டு லட்சம்) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை இதிலிருந்து நீங்௦கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள் எப்போதும் மக்களுடன், இருந்தால், மக்களுக்கு நேர்மையாக இருந்தால் அவர்கள் எப்போதும் உங்களை நம்புவார்கள். இதனை மாகாண சபைத் தேர்தல் முடிவுகளிலிருந்தும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். எனவே, நாங்கள் திறம்பட செயற்பட்டிருக்கின்றோம் என்று எண்ணுகிறேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: ஜனாதிபதி ராஜபக் ஷ அவர்களே எங்களுடன் அல் ஜசீராவுடன் பேசியதற்கு உங்களுக்கு எமது நன்றிகள்
(முற்றும்)

அல் -- ஜசீரா தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய செவ்வி...
அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. வெறும் பிரசாரத்திற்காகவே அவைகள் முன்வைக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையினால் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தல் செயற்பாடுகள் குறித்து பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அல் ஜசீரா தொலைக்காட்சி சேவையிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜேம்ஸ் பேய்ஸ் உடனான ஜனாதிபதியின் நேர்காணலின் கேள்வி பதில் வடிவத்தை இங்கு தருகிறோம்.
அல் ஜசீரா: இலங்கையின் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த கொடூரமான சிவில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்றன. ஆனாலும் சிறந்த எதிர்காலம், பரஸ்பர கௌரவம், நல்லெண்ணம் என்பவற்றின் மீதான நம்பிக்கைகள் நாளுக்கு நாள் அழிந்து செல்வதையே காண முடிகின்றது சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கையொன்றும் இதையே சுட்டிக்காட்டுகின்றது. இலங்கையைப் பற்றிய தெளிவற்ற நம்பிக்கையற்ற ஓவியத்தையே அந்த அறிக்கை சித்திரமாகக் காட்டுகின்றது.
இராணுவம் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மௌனமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அல்லது கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று அது சுட்டிக்காட்டியிருக்கின்றது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றார்கள். இவையெல்லாமே கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் தலைமையிலான ஆட்சியின் கீழ் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ நாட்டை ஏதேச்சதிகாரப் பாதையில் நடத்திச் செல்பவராக ஐ.நா. கூறுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக நிராகரித்துள்ள அரசாங்கமும், அரச ஆதரவாளர்களும் சொற்போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழர் பரம்பரையில் வந்துதித்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையை, அவர்கள் ஐ.நா.வில் உள்ள பெண்புலி என்றும் வர்ணித்துப் பெயர் சூட்டியுள்ளார்கள். இதனைத் தனக்கிழைக்கப்பட்ட அவமான குற்றமாகக் குறிப்பிட்டு, நவிப்பிள்ளை கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
முதற் தடவையாக இவைகள் எல்லாவற்றையும் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன், அல் ஜசீராவினுடனான நேர்காணல் சந்திப்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ அவர்களே அல் ஜசிராவுடன் பேசுவதற்கு முன்வந்துள்ளமைக்கு நன்றி. சிவில் யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகின்றன. இந்த நிலையில் உங்களுடைய நாட்டின் தற்போதைய நிலை என்ன?
ஜனாதிபதி: கடந்த நான்கு வருடங்களில் எங்களால் எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்திருக்கின்றது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் நடைபெற்ற வடபகுதியை எடுத்துக் கொண்டால், அங்குள்ள எல்லா உட்கட்டமைப்புக்களையும் நாங்கள் நிர்மாணித்திருக்கின்றோம். இதற்காக நாங்கள் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்திருக்கின்றோம். அந்த நேரத்தில் யுத்த கைதிகளாக இருந்தவர்கள் - எங்களிடம் வந்து சரணடைந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர, அநேகமாக எல்லோரையுமே விடுதலை செய்திருக்கின்றோம். குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த அந்த ஒரு சிலருக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றன. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதித்துறையின் கடமையாகும். இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். சமூகத்தின் ஊடாக மறுவாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதை நான் நம்புகின்றேன். சமூகம் அவர்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும். இதில் நல்ல விளைவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. ஏனென்றால் கடந்த தேர்தலில் - மாகாண சபைத் தேர்தலில் 80 வீதமான மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே இது காட்டுகின்றது.
ஜேம்ஸ் பேய்ஸ்: நீங்கள் ஒரு சாதகமான நிலைமையைக் காட்டுகின்றீர்கள். ஆனால், உங்களுக்கு எதிராக சர்வதேசத்தினால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஐ.நா. செயலமர்வில் உரையாற்றுகையில் சில நாடுகளைத் திருப்தி செய்வதற்காகவே உலகம் செயற்படுகின்றது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இதன் மூலம் நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?
ஜனாதிபதி: சில நாடுகள் தங்களைப் பொலிஸ்காரர்களாக கருதுகின்றார்கள். அவர்கள் மற்ற நாடுகளைச் விரல் சுட்டி அதிகாரத்தைப் பாவிக்க முயல்கின்றார்கள். அந்த நாடுகளை கஸ்டத்தில் தள்ளப்பார்க்கின்றார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: எந்த நாடுகள் மேற்கத்தைய நாடுகளா?
ஜனாதிபதி: சில நாடுகள்
ஜேம்ஸ் பேய்ஸ்: ஐ.நா. பேரவை தீர்மானங்களின்போது வாக்களித்த நாடுகளில் உங்கள் அயலவரான, பெரிய நாடாகிய இந்தியாவே, இலங்கைக்கு எதிராக பல தடவைகள் வாக்களித்திருக்கின்றதே....?
ஜனாதிபதி: நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றோம். ஏனென்றால் அது எங்களுடைய அயல்நாடு. ஆனால், அவர்களுக்குப் பல அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் நன்கறிவோம். அவற்றை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: உங்களுக்குத் தெரியும், இலங்கைக்கு எதிராகக் கடைசியாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையிடம் இருந்து வந்துள்ளது. அவர் அண்மையில் உங்கள் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். உங்களையும் சந்தித்துப் பேசியிருந்தார். திரும்பிச் சென்றதன் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீங்கள் ஓர் ஏதேச்சதிகாரப் போக்கில் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார். அதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்?
ஜனாதிபதி: இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 19 தேர்தல்களை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். மாகாண சபைத் தேர்தல், பொதுத்தேர்தல் என்று பல தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. எனது பதவிக்காலம் 6 வருடங்கள். ஆனால் நான் அந்தக் காலம் முடிவடைவதற்கு முன்பே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருந்தேன். எனவே, பொதுமக்களே அரசாங்கத்தைத் தீர்மானிக்கின்றார்கள். யார் அரசாங்கத்தை அமைப்பதென்பது அவர்களுடைய கைகளிலேயே இருக்கின்றது.
ஜேம்ஸ் பேய்ஸ்: நவிப்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதில் இருந்து ஒரு விடயத்தை உங்களுக்காக வாசிக்கின்றேன்....கண்காணிப்பும், துன்புறுத்தலும் இலங்கையில் மோசமாகிக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இங்கு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி தாக்கப்படுகின்றார்கள். நிரந்தரமாகவும் அவர்கள் அமைதிப்படுத்தப்படுகின்றார்கள்..... இதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்?
ஜனாதிபதி: இதைப்பற்றி என்ன நினைப்பது? உண்மையிலேயே இது எனக்கு விளங்கவில்லை. நாட்டுக்கு வருகி;ன்ற ஒருவர் என்ன சொல்கின்றார் என்பது விளங்கவில்லை. இது ஒரு ஜனநாயக நாடு என்பதை முதலில் நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு சர்வாதிகார நாடல்ல. சர்வாதிகார நாடாக இருந்தால் அங்கு ஒரு சர்வாதிகாரி இருப்பார். ஆனால் இங்கு எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஜனநாயக நாடென்பதால் பல விதமான கருத்துக்கள் இங்கு இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எப்போதும் தோற்கடிப்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றன. உள்ளூர் மட்டத்திலும்சரி, சர்வதேச மட்டத்திலும்சரி அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.
ஜேம்ஸ் பேய்ஸ்: அப்படியென்றால் நவிப்பிள்ளையைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள், அவரை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
ஜனாதிபதி: இலங்கைக்கு வருவதற்கு முன்பே அவர் தனது அறிக்கையை எழுதிவிட்டார் என்றே மக்கள் கருதுகின்றார்கள். இதனை நான் அவருக்குக் கூறினேன். அவர் என்னைச் சந்தித்தபோது எதுபற்றியும் அவர் என்னிடம் முறையிடவில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: ஆனால் அவர் இப்போது முறையிட்டிருக்கின்றாரே.... அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது அவர் நடத்தப்பட்ட விதம் பற்றியும் அவர் கூறியிருக்கின்றார். அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர், அவரை ஐ.நா.வில் உள்ள தமிழ்ப் புலிகளின் பெண்புலி என்று வர்ணித்திருந்தாக அவர் கூறியிருக்கின்றார். உங்களுடைய சகோதரர் உட்பட சில அமைச்சர்களும் அவரைப்பற்றி தனிப்பட்ட ரீதியில் கருத்து வெளியிட்டிருந்ததாக அவர் சொல்லியிருக்கின்றாரே.....?
ஜனாதிபதி: இது ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இங்கு ஜனநாயகம் இருக்கின்றது. அதனால் அவர்கள் எதையும் கூறலாம். என்னிடம் 58 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை இருக்கின்றது. உலகத்திலேயே ஒரேயொரு ட்ரொட்ஸ்க்கி கொள்கையுடைய பாராளுமன்ற உறுப்பினரும் எங்களோடு இருக்கின்றார். அவர் எனது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கி;ன்றார். மாஸ்கோ சார் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். வலதுசாரி தீவிர கொள்கையுடையவர்களும் இருக்கின்றார்கள். மத தீவிர கொள்கையுடையவர்களும் இருக்கின்றார்கள். தமிழர்கள் இருக்கின்றார்கள். சிங்களவர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இப்படி எல்லாவிதமானவர்களும் எனது அமைச்சரவையில் இருக்கின்றார்கள். எல்லாரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள். அவர்கள் எல்லோரையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட முறையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு அமைச்சர் அல்லது ஒரு அதிகாரி தனக்கு வேண்டிய எதனையும் கூறலாம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நவிப்பிள்ளையைச் சந்தித்தவர்கள் அரசாங்கத்தினாலும், அரச படைகளினாலும் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றதே?
ஜனாதிபதி: இல்லை. இதுபற்றி அவர் எங்களிடம் எதுவும் சொல்லவே இல்லை. அப்படி சொல்லியிருந்தால் அதுபற்றி நான் விசாரணை செய்திருப்பேன். இதுபற்றி பகிரங்கமாகக் கருத்து வெளியிடும் வரையில், அவர் எதையும் எங்களிடம் குறிப்பிடவில்லை. அவர் என்னைச் சந்தித்தபோது, இப்படி நடந்தது என்று அவர் என்னிடம் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு எதையும் அவர் கூறவில்லை. ஆனால் இங்கிருந்து சென்றதன் பின்னர் இதை அவர் ஏன் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அவ்வாறு எதையும் செய்வில்லை. அவ்வாறு எங்களில் எவரும் நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொள்வதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அவரை வரவிடாமல் செய்திருக்கலாமே, அதை நாங்கள் செய்யவில்லை. அவர் விரும்பியவாறு எல்லா இடங்களுக்கும் செல்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தோம். அவர் தனக்குத் தேவையான யாரையும் சந்திக்கலாம் என்று அனுமதித்திருந்தோமே... (நவிப்பிள்ளைக்கு) இவர்கள் இவ்வாறான விடயங்களைச் சொல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களில் அனேகமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். ஆகவே அவர்கள் தாங்கள் விரும்பிய எதையும் அவருக்குக் கூறியிருக்கலாம். நாங்கள் அவ்வாறு அவர்கள் விரும்பியவற்றைச் சொல்வதற்குக் கூட அனுமதித்திருந்தோம். நாங்கள் நினைத்திருந்தால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் தடுத்திருக்கலாம். தடுத்திருக்க முடியும் இல்லையா.....?
ஜேம்ஸ் பேய்ஸ்: வடக்கில் உள்ள நிலைமைகள் பற்றி குறிப்பாக நாங்கள் இப்போது கவனிக்கலாம். வடபகுதி உட்பட சில இடங்களில் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இது எதனைக் காட்டுகின்றது?
ஜனாதிபதி: நீதியும் நேர்மையுமான தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அது காட்டுகின்றது. வடக்கில் நாங்கள் தேர்தலில் தோற்றிருக்கின்றோம். தேர்தலுக்கு முன்பே இது எங்களுக்குத் தெரியும். முன்னர் அங்கு தேர்தல்கள் நடைபெற்றபோது அதனை பகிஸ்கரித்த சம்பவங்கள் இடம்பெற்றிருகின்றன. ஆனால் நாங்கள் நீதியும் நேர்மையுமான ஒரு தேர்தலை அங்கு நடத்தியிருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நேர்மையான தேர்தல் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் அந்தத் தேர்தலைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றனவே...?
ஜனாதிபதி: நான் மட்டுமல்ல. அங்கு சென்றிருந்த ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களும் அங்கு நியாயமான ஒரு தேர்தல் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. அங்கு சார்க் நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் அங்கிருந்தார்கள். அதிகளவான இராணுவ பிரசன்னம் இருந்தது. குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் செயற்பட்டார்கள். வேட்பாளர்களும், அரசியல் கட்சி ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்பட்டார்கள். தேவையற்ற வகையில் இராணுவத்தினர் கூடியிருந்தார்கள். ஒரு பெண் வேட்பாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது என்றெல்லாம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். 'நியாயமான ஒரு தேர்தல் நடைமுறைக்குத் தடையாக இராணுவத்தின் செயற்பாடு விசேட அம்சமாக அமைந்திருந்தது' என்று குறிப்பாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதைப்பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்?
ஜனாதிபதி: தேர்தல் முடிவுகளே இதற்குப் பதில் கூறியிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் என்ன? 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை அவர்கள் கைப்பற்றியிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு தேர்தல் முடிவு வரும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். இதைப்பற்றி நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். சில வெளிநாட்டு செய்தியாளர்களோ அல்லது வெளிநாட்டுத் தூதுவர்களோ என்னிடம் இந்தத் தேர்தல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என கேட்டிருந்தார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே நான் கூறியிருந்தேன், எங்களுக்கு ஏழுக்கும் பத்துக்கும் இடையிலான ஆசனங்கள் கிடைக்கும் என்று. ஆனால் என்னுடைய கணிப்பு பிழையாகிவிட்டது. நாங்கள் ஏழு இடங்களை மட்டும்தான் பெற்றிருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: பொதுமக்கள் இப்போது பேசியிருக்கின்றார்கள். (தேர்தல் மூலம் தங்களுடைய கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.) அவர்களுடைய கருத்துக்கு நீங்கள் செவிசாய்ப்பீர்களா?
ஜனாதிபதி: அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். நாங்கள் அங்கு தேர்தலில் தோல்வியடைவோம் என்பது எங்களுக்குத் தெரியும். வடக்கை நாங்கள் உங்களுக்கே தரப்போகின்றோம் என்று ரீ.என்.ஏ. தலைவரிடமும் நான் சொல்லியிருந்தேன். யார் வெல்லப் போகின்றார்கள், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்திருந்தும் நாங்கள் அங்கு தேர்தலை நடத்தினோம். ஏனென்றால் அங்கு நாங்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக நடத்தினோம். அவர்களும் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். யாரும் எதனைப்பற்றியும் விமர்சனம் செய்யலாம். இப்போது அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் செயற்படட்டும். விளைவுகளைத் தரட்டும்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். மக்கள் எதற்காக வாக்களித்துள்ளார்கள் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள். வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளார்கள். அத்துடன் குறிப்பிட்ட அளவு சுய ஆட்சியையும் கேட்டிருக்கின்றார்கள். இதனை வழங்குவீர்களா?
ஜனாதிபதி: இல்லை. உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் முதலில் அந்த மாதிரி ஒன்றைக் கூறினார்கள். பிறகு அதனை மாற்றிக்கொண்டார்கள். இராணுவம் அவர்கள் கூறும் அளவில் அங்கு இல்லை. இராணுவத்தை வெளியேற்றுமாறு அவர்கள் கேட்க முடியாது. ஏனென்றால் ஏனைய மாகாணசபைகளும் நாடெங்கிலும் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கேட்டால், நான் இராணுவத்தை எங்கே வைத்திருப்பது? யாராவது இராணுவத்தை வைத்திருப்பதற்கு வேறு எங்காவது எனக்கு இடம் கொடுப்பார்களா..?
ஜேம்ஸ் பேய்ஸ்: இப்பொழுது யுத்தமில்லை. அப்படி இருக்கும்போது பெரிய அளவில் இராணுவம் எதற்குத் தேவைப்படப் போகின்றார்கள்?
ஜனாதிபதி: நீங்கள் அப்படி நினைக்கின்றீர்கள். ஆனால் பாதுகாப்பிற்கு எங்களுக்கு இராணுவம் தேவைப்படுகின்றது. எமது பாதுகாப்புப் பற்றியும் இராணுவ பலம் எவ்வளவு இருக்க வேண்டும், எத்தனை இராணுவத்தினர் இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள்தான் தீர்மானிக்க முடியும். இராணுவத்தை வெளியேற்றினால் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியுமா? வியட்நாமில் யுத்தம் முடிந்தபின்னர் என்ன நடந்தது? அவர்களுடைய அணுகுமுறைகளை நாங்கள் மாற்ற வேண்டும். அவர்களுக்கும் நாங்கள் புனர்வாழ்வளிக்க வேண்டும்.
ஜேம்ஸ் பேய்ஸ்: தேவைக்கதிகமாக இராணுவத்தை வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? மூன்று சிவிலியன்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் இராணுவம் இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவித்திருக்கின்றனவே.......?
ஜனாதிபதி: இல்லை. அது தவறு. அது தவறான புள்ளிவிபரம். அந்தப் பகுதியில் 8 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமே அங்கு இருக்கின்றார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. நவிப்பிள்ளையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்களுடைய இடங்களில் இராணுவம் முகாம் அமைக்கின்றது. தனியார் காணிகள் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன................
ஜனாதிபதி: (இடைமறித்து...) தனியார் காணிகள் எல்லாவற்றையும் நாங்கள் கையளித்துவிட்டோம். விமானத்தளம், துறைமுகம் இருக்கின்ற இடத்தில் மாத்திரம் நாங்கள் சில இடங்களை எடுத்திருக்கின்றோம். அதைத் தவிர ஏனைய காணிகள் எல்லாவற்றையும் கையளித்துவிட்டோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: கல்வி, விவசாயத்துறைகளிலும் கூட இராணுவம் ஈடுபட்டிருப்பதாக (நவிப்பிள்ளை) அவர் கூறுகின்றாரே....?
ஜனாதிபதி: என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த விடயங்கள் பற்றி அவர் எப்படி கூற முடியும்....விவசாயம்.....? சரி.... அவர்கள் சாப்பிட வேண்டுமல்லவா.... அவர்களுக்கு வேறு வேலை இல்லாததால் விவசாயம் செய்கின்றார்கள். அவர்கள் பாடசாலைகளில் சென்று கல்வி போதிப்பதில்லையே...பாடசாலைகளில் கடெட் பயிற்சி என்று ஒன்றிருக்கின்றது. அவர் அதைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஜேம்ஸ் பேய்ஸ்: நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார். இறுதிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி நம்பிக்கை தரத்தக்க வகையில் இன்னுமே நீங்கள் விசாரணை நடத்தவில்லை என்று அவர் தனது அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின் அதி முக்கிய விடயமாக இது குறிபபிடப்பட்டிருக்கின்றது. அத்தகையதொரு விசாரணையை நீங்கள் நடத்த வேண்டும் என்று அடுத்த மார்ச் மாதம் வரையில் அவர் உங்களுக்கு அவகாசம் வழங்கியிருக்கின்றார். இதற்கு உங்களின் பதில் என்ன?
ஜனாதிபதி: முப்பது வருடங்களாக யுத்தம் நடந்திருக்கின்றது....முப்பது வருட யுத்தம். இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தவைகள் பற்றி மட்டும்தான் அவருக்குத் தேவையாக இருக்கின்றது. அது ஏன்......ஏன்? அதனை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் யுத்தம் நடைபெற்ற முப்பது வருடங்களையும் பார்க்க வேண்டும். அப்போது என்ன நடந்தது? ஹிரோஸிமாவில் என்ன நடந்தது என்று யாரும் கேட்டால்....ஜப்பானில் யுத்தம் நடைபெற்றதன் பின்னர் ஹிரோஸிமாவில் என்ன நடந்தது என கேட்டால், அதுபற்றி யாரும் விசாரணை செய்யப் போகின்றார்களா? இந்த விடயத்தில் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எல்லா நாடுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அந்தக் கடைசி இரண்டு தினங்களில் என்ன நடந்தது என்பதை எங்களால் சொல்ல முடியும். எங்களிடம் ஒளிவு மறைவில்லை. மறைப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை. அல் ஜசீரா அங்கு சென்றிருந்தது. அவர்கள் யுத்த முனையின் முன்னால் இருந்தார்கள். நாங்கள் அவர்கள் அங்கு செல்வதற்கு அனுமதித்திருந்தோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: அந்த நேரத்தில் அல் ஜசீரா வடக்கின் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடியதாக இருக்கவில்லை.
ஜனாதிபதி: நாங்கள் அவர்களை அனுமதித்திருந்தோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: அந்த நேரத்தில் இராணுவம் பிழைகள் ஏதும் செய்ததாக நீங்கள் நம்புகின்றீர்களா?
ஜனாதிபதி: நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் நன்கு பயிற்றப்பட்டிருந்தார்கள். எல்ரீரீயினரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மக்கள் அந்தக் கடைசி சில தினங்களாக அங்கிருந்து அரசாங்கப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்தார்கள். இராணுவத்தினர் அவர்களுக்கு உதவி செய்தார்கள். தங்களுக்கென்று வைத்திருந்த தண்ணீரைக் கொடுத்தார்கள். அந்த மக்களுக்கு அவர்கள் தங்களுடைய உணவைக் கொடுத்தார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: இராணுவத்தினர் இந்த மக்கள் மீது எறிகணை தாக்குதலை நடத்தினார்கள்;. வைத்தியசாலைகள் மீதுகூட தாக்குதல் நடத்தினார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகின்றதே......
ஜனாதிபதி: இல்லை. அவர்கள் அப்படி செய்யவில்லை. நான் அதுபற்றி விசாரித்தேன். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: நீ;ங்கள்தான் ஜனாதிபதி, நீங்கள்தான் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஒட்டுமொத்தமாக அந்தச் சம்பவங்களுக்கு நீங்களே பொறுப்பு அல்லவா?
ஜனாதிபதி: ஆம். அதனால்தான் சொல்கிறேன். யாரும் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன். அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும். சும்மா எதனையும் பொதுவாகச் சொல்வதில் அர்த்தமில்லை. என்ன நடந்தது. இவர் இதனைச் செய்தார், இராணுவம் முழுதும் இதiனைச் செய்தது என்று சுட்டிக்காட்டி கூற வேண்டும். அவ்வாறு கூறினால், நாங்கள் அதுபற்றி விசாரணை செய்ய முடியும். அவ்வாறு எந்தவிதமான முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. இவையெல்லாம் வெறும் பிரசார வேலைகள். இது இலங்கைக்கு எதிரான பிரசாரம். ஏனைய நாடுகளுடன் தயவு செய்து ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கை போன்ற சிறிய நாட்டைத் தனிமைப்படுத்தாதீர்கள். இலங்கையைத் துன்புறுத்த முயற்சிக்காதீர்கள். அச்சுறுத்த முற்படாதீர்கள். அவர்களில் சிலர் சிறிய நாடுதானே என்று அச்சுறுத்த முயற்சிக்கின்றார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: வடக்கிலிருந்து வேறு விடயங்களுக்கு வருவோம். கடந்த பல வருடங்களாக பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இது தொடர்பில் ஒரு விசாரணைக்குழுவை நீங்கள் நியமித்திருக்கின்றீர்கள்......
ஜனாதிபதி: ஆம். ஏனென்றால், கடந்த 1989 ஆம் ஆண்டு, தெற்கில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டிருந்தபோது, காணாமல் போனவர்கள் தொடர்பில் பலதும் சொல்லப்பட்டிருந்தது. அறுபதாயிரம் அல்லது நாற்பதாயிரம் பேர் வரையில் காணாமல் போயிருந்ததாக அப்போது கூறப்பட்டிருந்தது. காணாமல் போனவர்கள் தொடர்பில் ஒரு விசாரணைக் கமிஸன் நியமிக்கப்பட வேண்டும் என்று அப்போது நான்தான் போராட்டம் நடத்தியிருந்தேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: மீண்டும் நவிப்பிள்ளை கூறிய விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். வெள்ளை வான்களில் காணாமல் போயிருப்பவர்கள் பற்றி நீங்கள் விசாரணைகள் நடத்தவில்லை என்று அவர் சொல்லியிருக்கின்றார். வெள்ளை வான்களில் கடத்தல்கள் நடைபெற்றதாகவும், வீதிகளில் சென்றவர்கள்கூட இந்த வெள்ளை வான்களில் இழுத்துப் போட்டு கடத்திச் செல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளாரே........
ஜனாதிபதி: உங்களுக்கு ஒரு விடயம் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் கடத்தல் தொடர்பாக ஒரு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வெள்ளை வான் வந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவரைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசியாக அவரை நாங்கள் ஒரு விருந்தகத்தில் அவருடைய ஆண் நண்பர் ஒருவருடன் இருந்ததை நாங்கள் கண்டுபிடித்திருந்தோம். இப்படித்தான் நடக்கின்றது. எது நடந்தாலும் இப்படித்தான் வெள்ளை வான் என்று சொல்வார்கள். தேனிலவுக்கு அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக யாரும் சென்றிருந்தாலும்கூட, அதனையும் வெள்ளைவானுடன் சம்பந்தப்படுத்தித்தான் கூறுவார்கள். இவையெல்லாம் வெறும் யூகக்கதைகள். ஏன் நாங்கள் வெள்ளை வானைப் பயன்படுத்த வேண்டும்? வெள்ளைவான் இருந்திருந்தால், அவர்கள், ஒரு நீல வானை அல்லது ஒரு கறுப்பு வானை ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? இதெல்லாமே வெறும் பிரசார வேலைகளேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம், அது வடக்கில் நடைபெறவில்லை. ஆனால் கொழும்புக்கு அண்மையில் நடைபெற்றது.... அதில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியபோது அங்கு இராணுவத்தினர் அனுப்பப்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. அது ஒரு பிழையான நடவடிக்கையில்லையா?
ஜனாதிபதி: அதுபற்றி நாங்கள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றோம். நீதவான் நீதிமன்ற விசாரணையும் நடைபெறுகின்;றது. இந்த விடயத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.
ஜேம்ஸ பேய்ஸ்: உங்களுடைய ஆதரவாளர்கள் கூட இதுபற்றி அக்கறையும் கரிசனையும் வெளியிட்டிருக்கின்றார்கள். வடக்கில் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் நடத்தப்பட்டதுபோல, மாசடைந்த நீருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய நிராயுதபாணிகளான சிங்கள மக்கள்...பெருமளவிலான பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள், சிறுவர்களையும் அரச அதிகாரிகள் நடத்தியிருக்கின்றார்கள் என்று கூற வேண்டியிருக்கின்றது என்று ஜெனிவாவில் இருந்த ஐநாவுக்கான உங்களுடைய முன்னாள் தூதுவர்கூட குறிப்பிட்டிருக்கின்றாரே......? அதுவும் உங்களுடைய முன்னாள் தூதுவர் கூறியிருக்கின்றாரே......
ஜனாதிபதி: ஆம். எங்களுடைய தூதுவர்தான். என்னுடைய காலத்தில் இருந்தவர்தான். எங்களுக்குத் தெரியும். அவர் இப்போது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உறுப்பினர். அதுவும் சக்தி வாய்ந்த ஓர் அரச சார்பற்ற நிறுவனம். எனவே, அவர்கள் தங்களுக்கென்ற கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். இதைத்தான் நான் கூறினேன் இந்த நாட்டில் உள்ள ஜனநாயகம் என்று. அவர்கள் எதையும் சொல்லலாம். ஏன், இந்த முழு விடயமும், எங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. நாங்கள் முழு ஆட்களையும் உடனடியாகவே இடம் மாற்றம் செய்துள்ளோம். அதுபற்றியும் நாங்கள் விசாரணை செய்து கொண்டிருக்கின்றோம். அவர்கள் குற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், நாங்கள் அவர்களுக்குத் தண்டனை வழங்குவோம். குற்றவாளிகளைப் பாதுகாக்கப் போவதில்லை.
ஜேம்ஸ் பேய்ஸ்: மற்றுமொரு முக்கியமான அக்கறைக்குரிய விடயம்.....சிறுபான்மை மதத்தவர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள். முறையிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றீர்கள்?
ஜனாதிபதி: சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. அவற்றின் பின்னணியை நீங்கள் பார்க்க வேண்டும். ஏன் அவர்கள் தாக்கப்பட்டார்கள்? இப்போது பாருங்கள் அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதுவும் ஏழு வயதுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறவு நடத்தப்பட்டிருந்தது. இயல்பாகவே எவரும், அவரகள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை, அவர்கள் தாக்குவார்கள்தானே..... அந்தச் சிறுமியின் உறவினர்கள் மற்றும் அதைப்பற்றி கேள்விப்பட்டவர்கள் அனைவரும் குழம்பிப் போனார்கள். எனவே, இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இந்த மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லா சம்பவங்களுக்கும் ஒரு பின்னணி இருக்கின்றது. ஏனென்றால், இங்குதான் முஸ்லிம்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் தங்களுடைய மதங்களைப் பின்பற்றி வசிக்கின்றார்கள். பல மதங்களையும் சேர்ந்தவர்கள் எந்தப்பிரச்சினைகளுமின்றி, தங்கள் மதங்களை ஒரேயொரு நாடாகிய சிறிலங்காவில் மட்டும்தான், இவ்வாறு பின்பற்றி வாழ்கின்றார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: முஸ்லிம்களுக்கு எதிரான 227 சம்பவங்கள் பற்றி நவிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றாரே....
ஜனாதிபதி: இவையெல்லாம் அர்த்தமில்லாத கதைகள். அப்படி ஏதேனும் இருந்தால் அந்தப் பட்டியலை என்னிடம் தாருங்கள். அதைப்பற்றி நான் ஆராய்ந்து பார்க்கின்றேன். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. சில சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. அதுவும் தனிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள். வேறு சில நாடுகளில் இவ்வாறு நடைபெற்றிருந்தால், அந்த நாடுகளின் பெயர்களை நான் குறிப்பிடப்போவதில்லை. இராணுவ சிப்பாய் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டதன் பின்னணியில் 109 பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவற்றில் அரசாங்கம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் தனிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களாகும். இலங்கையில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்துவிட்டால் உடனே என்மீது குற்றம் வந்துவிடும். வேறு நாடுகளில் நடப்பவையெல்லாம் தனிப்பட்ட சம்பவங்கள். இங்கு நடந்தால் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திவிடுவார்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: உங்களுடைய ஊடக சுதந்திரம் எப்படி இருக்கின்றது?
ஜனாதிபதி: வார இறுதி பத்திரிகைகளைப் பார்த்தீர்களானால் ஊடகங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வீர்கள்.
ஜேம்ஸ் பேய்ஸ்: கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எவராவது தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றார்களா.........?
ஜனாதிபதி: அந்தப் எண்ணிக்கை பிழையான எண்ணிக்கையென்று எண்ணுகிறேன். சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை பற்றி நாங்கள் விசாரணை செய்து கொண்டிருக்கின்றோம். அதில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. கொல்லப்படவில்லை. சம்பவங்கள் என்று குறிப்பிட விரும்புகிறேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: ராஜபக்ச குடும்பத்தினர் முக்கியமான அரச பதவிகளில் இருக்கின்றார்கள். அதைப்பற்றி நான் கேட்கலாமா? ஏனென்றால் உங்களுடைய சகோதரர்கள் எல்லோரும் முக்கிய பதவிகளை வகிக்கின்றார்கள். மற்றவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவ்வாறில்லையே.....
ஜனாதிபதி: அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அது என்னுடைய குற்றமில்லையே.....
ஜேம்ஸ் பேய்ஸ்: நீங்கள் எவ்வளவு காலத்திற்கு இந்தப் பதவியில் இருக்கப் போகின்றீர்கள்?
ஜனாதிபதி: அது மக்களுடைய கைகளில் தங்கியிருக்கின்றது. அவர்கள் நினைத்தால் நாளையே என்னை இதிலிருந்து அனுப்பலாம். நாளையில்லை. அடுத்தத் தேர்தலில் அவ்வாறு அவர்கள் செய்யலாம். அடுத்த தேர்தல் வரையில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
ஜேம்ஸ் பேய்ஸ்: உங்களுடைய எதிர்காலக் கனவென்ன?
ஜனாதிபதி: நாட்டை வளப்படுத்தி மக்களையும் வளமுள்ளவர்களாக்குவது. அதனைச் செய்யலாம் என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால், இந்த நான்கு வருடங்களில் எங்களுடைய பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அது மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கின்றோம். வேலை வாய்ப்பின்மை குறைந்திருக்கின்றது. கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. எழுத்தறிவு வீதம் 98 வீதமாகியிருக்கின்றது. நாடு வளர்ச்சியடைவதற்காக நாங்கள் நிறைய செய்திருக்கின்றோம்.
ஜேம்ஸ் பேய்ஸ்: இந்த சாதனைகள் பற்றியெல்லாம் நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் உங்கள் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்........முக்கிய பிரமுகராகிய இலங்கையர் ஒருவரை நான் சந்தித்தேன். உரிமைகளைப் பாதுகாக்கத்தக்க வகையில் நியாயமான விதிமுறைகளைக் கொண்ட அரசியலமைப்புடன் கூடிய ஜனநாயக நாடாக இந்த நாடு திகழ்ந்ததாகவும், இப்போது அது ஒரு குடும்ப விவகாரமாக மாறியிருக்கின்றது என்று கூறினார்.....
ஜனாதிபதி: அவர்்கள் தான் இந்த நாட்டை குடும்ப விவகாரமாக்கப் பார்க்கின்றார்கள். அதனால்தான் அப்படி கூறுகின்றார்கள். இந்த ஒரு விமர்சனத்தைத்தான் அவர்கள் செய்ய முயற்சிக்கின்றார்கள். அவர்கள் எங்கள் மீது சேறு பூச முயற்சிக்கின்றார்கள். ஆனால் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். நாங்கள் நியாயமானவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் என்னை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். கடந்த 1936 ஆம் ஆண்டிலிருந்து எங்களுடைய குடும்பம் அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கின்றது. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் மக்களோடு இருக்கின்றோம். நாங்கள் நியாயமானவர்கள் என்று அவர்கள் நன்கறிவார்கள். நாங்கள் நேர்மையானவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம் என்பதும் அவர்களுக்கத் தெரியும்.. எங்களால் செய்ய முடியாததை செய்ய முடியாது என்று நாங்கள் கூறுவோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு வாக்களிக்கின்றார்கள். இல்லாவிட்டால் அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். முதல் தடவை 2005 ஆம் ஆண்டு நான் ஒரு லட்சம் வாக்குகளுடன் வெற்றி பெற்றேன். இரண்டாம் முறை 2011 ஆம் ஆண்டு 1.8 மில்லியன் (பதினெட்டு லட்சம்) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை இதிலிருந்து நீங்௦கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள் எப்போதும் மக்களுடன், இருந்தால், மக்களுக்கு நேர்மையாக இருந்தால் அவர்கள் எப்போதும் உங்களை நம்புவார்கள். இதனை மாகாண சபைத் தேர்தல் முடிவுகளிலிருந்தும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். எனவே, நாங்கள் திறம்பட செயற்பட்டிருக்கின்றோம் என்று எண்ணுகிறேன்.
ஜேம்ஸ் பேய்ஸ்: ஜனாதிபதி ராஜபக் ஷ அவர்களே எங்களுடன் அல் ஜசீராவுடன் பேசியதற்கு உங்களுக்கு எமது நன்றிகள்
(முற்றும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக