இன்றைய கால கட்டம் பிறக்கும் குழந்தைகளுக்கும், புதிதாக அமைக்கும் வியாபார நிலையங்கள் கம்பனிகள் என எதை எடுத்துக்கொண்டாலும் பெயர் சூட்டுவதிலே மிகவும் அதீத அக்கறையும் கவனமும் கொண்டு செயற்படுகின்றனர். அதிர்ஷ்டப் பெயர் அமைப்பதிலே உள்ள கவனம் பெற்றோர்களிடம் மிகவும் அதிகமாக அமைந்திருக்கின்றது. அதில் தவறு இல்லை. யாரும் தம் பிள்ளைகள் அதிர்ஷ்டகரமான வாழ்வினை பெறவேண்டும் என்பதையே எண்ணுவார்கள். அதை எப்படி அணுகி செயற்பட வேண்டும் என்பதிலேதான் சிலர் தடுமாற்றம் கொள்கின்றனர்.
குறிப்பாக முன்னைய காலங்களில் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய நாம எழுத்துக்கள் இருக்கும். அந்த எழுத்தின்படி பெயரை சூட்டி விடுவார்கள். பெரும்பாலும் தமது சந்ததிப்பெயர் தொடர்பும், தெய்வீக நாமமுமாய் அந்தப் பெயர் அமைந்திருக்கும். அதிகமான அதிர்ஷ்டமும் கொடுக்கும். பலருக்கு பிறக்கும் நட்சத்திர நாம எழுத்துப் பற்றிய தெளிவு இல்லை.
உதாரணமாக “விசாகம்” நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை எந்தப் பாதத்தில் பிறந்துள்ளது என்பதை கணிப்பிட வேண்டும். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு. அந்த நான்கு பாதங்களுக்கும் நட்சத்திர நாம எழுத்து உண்டு. விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் பாதங்களுக்கு முறையே தி,து,தே,தோ என நான்கு நாம எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதிலே அந்த பாதத்திற்கு உரிய நாமமே பெயரில் அமைய வேண்டும். முதல் எழுத்தில் பெயர் எடுப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் பெயரினுள்ளே அந்த எழுத்து அமைகின்ற நிலையில் பெயர் தெரிவுகளை அமைத்துக்கொள்ளலாம். இப்போது உதாரணப் பெயர்கள் விசாகம் நட்சத்திர நாமப்பெயரே முதல் எழுத்தாக அமைந்து திவ்யன், துஷ்யந்தன், தேனுஜன், தோமதன், இவை நாம எழுத்தின் தொடக்கப்பெயர். இதையே பிறந்த திகதிக்கு ஏற்ப வைப்பதாயின் உதாரணமாக 5ஆம் எண்ணில் குழந்தை பிறந்திருந்தால் அந்த 5ஆம் எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்து E, H, N, X என்பன நந்திதன், ஈதுஷன், நிதேஷன், கவிதோன் என பெயர் அமைக்கும்போது நட்சத்திர நாமம் பிறப்பு எண், நாமம் என இரண்டுமே சிறப்பாக அமையும் நிலை ஏற்படுகின்றது. இதுவே அதிர்ஷ்டகரமான சிறப்பு தரும்.
அடுத்து பெயர் சூட்டும்போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை. எமது கலாசார விழுமியமான சமய, மொழிப்பற்றோடு அமைய வேண்டும். இதைவிட ஆதிகாலங்களில் எம்முன்னோர்கள் தமது குலப்பெருமை பறைசாற்றும் வகையில் பெயரோடு ஒட்டி ஐயர், செட்டியார், தேவர், நாடார், முதலியார் என்பதை சேர்த்துக்கொள்வார்கள். இது இன்றும் கிராமங்களில் நடைமுறையிலே அமைந்திருக்கின்றது.
பொதுவாக அதிர்ஷ்டப் பெயர் என்பது பிறந்த நட்சத்திர நாம எழுத்தும், பிறந்த திகதி எண்ணும் சேர்ந்த நிலையில் அமைகின்ற போது அதிகமான அதிர்ஷ்ட நிலையைக் கொடுக்கின்றது. எனவே இந்த இரண்டு விடயங்களையும் கவனத்தில் கொள்வதோடு நமது சந்ததி வழிவந்தவர்கள் நாமம், தொடர்ந்து சூட்டி வருவதும் மூதாதையர் ஆசியும் நம் குடும்பப் பெருமைகளையும் நிலை நிறுத்தி செயற்படுத்தும்.
இவற்றை நாம் பெயர் சூட்டுகின்ற போது மிகவும் நன்கு கவனித்து செயற்படுத்த வேண்டியது நம் கடமையாகின்றது. அதிர்ஷ்டமாக பெயர் சூட்டி வெற்றி வாகை பெற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களின் பெயர் சிறப்புகளை ஆய்வு செய்யும் போது நட்சத்திர நாமத்தின் எழுத்து உச்சரிப்புகள், பெயர் எண்ணில் கூட்டு எண் ஆதிக்கம், பிறப்பு எண்ணிலே ஆரம்பமாகும் எழுத்து, நட்சத்திர நாம எழுத்து பெயரின் உள்ளே அமைவது என ஏதோ ஒரு வகையில் பிறந்த நட்சத்திரத்திற்கும் பிறப்பு எண், கூட்டு எண் என்பனவற்றிற்கும் தொடர்பு கொண்டவையாகவே அமைகின்றன. அதை விட ஒரு தெய்வீகத்தன்மை பெயரிலே அடங்கியிருக்கின்றது.
ஒவ்வொருவருக்கும் பெயர் அதிர்ஷ்டமாய் அமைந்திருக்கின்றது. திரையுலகிலும், அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் மக்கள் திலகம், ‘எம்.ஜி.ஆர்’ இவரின் முழுப்பெயர், எம்.ஜி.ராமச்சந்திரன் 17.01.1917ஆம் ஆண்டு பிறந்த இவரின் நட்சத்திரம் ‘சுவாதி’ நட்சத்திர நாம எழுத்து ‘ரே’, ‘ரோ’ போன்ற எழுத்து பெயர் ஆரம்பத்திலேயே ‘ராமச்சந்திரன்’ என அமைகின்றது. பிறப்பு எண் 8, கூட்டு எண் 9, 8ஆம் எண்ணிற்கு மிகவும் வசியமான 5ஆம் எண்ணில் M.G.Ramachandran எனும் பெயர் எண் அமைகின்றது. அதையே சுருக்கி தனது கூட்டு எண் 9ஆம் எண்ணிற்கு ஏற்றவாறு M.G.R என அமைத்தார். அளவில்லா அதிர்ஷ்டத்தை வாரி வழங்கியது. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும் என்பதை இன்றும் நிரூபித்து நெஞ்சங்களில் வாழ்கின்றார். ராமபிரானின் தெய்வீன நாமமுமாய் இது அமைந்து விட்டது.
அடுத்து அரசியல் சாணக்கியனாய் தமிழ் எழுத்துலகின் வித்தகனாய் இருக்கும் மு.கருணாநிதி 03.06.1924ஆம் ஆண்டு பிறந்தார். நட்சத்திரம் ‘மிருகசீரிடம்’ நாம எழுத்து ‘க’. அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கின்றது. பிறப்பு எண் 3, கூட்டு எண் 7 என அமைகின்றது. இவரின் கூட்டு எண்ணின் வசிய எண்ணாகிய 2ஆம் எண் எழுத்து “K”யில் கருணாநிதி, கலைஞர் போன்ற பெயர்கள் அமைந்திருப்பது இரட்டிப்பு அதிர்ஷ்டமாய் அமையும் நிலையை கொடுத்தது. இன்றும் அவர் புகழ்மிக்கவராய் மிளிர பெயர் அதிர்ஷ்டம் கொடுத்தது. கருணாநிதி சிவனின் திருநாமம்.
அடுத்து நடிப்புலகிலே தன்னிகரில்லா புகழ்பெற்று விளங்கிய நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” 01.10.1927இல் பிறந்தார். உத்தராடம் நட்சத்திரத்திலே பிறந்த இவரின் நிஜப்பெயர் “சின்னையா கணேசன்”. இவரின் உத்தராட நட்சத்திர நாம எழுத்து ஐ.ஜி.சேர்ந்தது. ‘சிவாஜி’ இவர் உச்சத்திற்கு சென்றார். பிறப்பு எண் 1உம், கூட்டு எண் 3உம் என அமைந்த இவருக்கு இவரின் கூட்டு எண் எழுத்தாகிய S முதல் எழுத்தாய் அமைந்தது. இவரின் 'Sivaji Ganesan' பிறப்பு எண் 1இல் பெயரென்றும் அமைந்தது. “கணேசன்” எனும் தெய்வீகநாமம். இவர் புகழை உலகறிய செய்தது.
24.06.1927 அன்று பிறந்த கவியரசு கண்ணதாசன் அஸ்வினி நட்சத்திரமும், 6ஆம் எண் பிறப்பு எண்ணாகவும் 4ஆம் எண் கூட்டு எண்ணாகவும் கொண்டவர். அஸ்வினி நட்சத்திர நாம எழுத்து “ச” பெயருக்குள் அமைந்தது. பெயரின் கூட்டு எண் 6இல் அமைந்தது. கூட்டு எண் எழுத்து 'T' பெயருக்குள் அமைந்தது. தமிழ்நாட்டு அரசவைக் கவிஞராய் புகழின் உச்சிக்கே சென்றார். ஆண்மைக்குரலுக்கு சொந்தமான T.M. செளந்தர்ராஜன் 24.03.1923இல் பிறந்தார். மிருகசீரிடம் நட்சத்திரமும், பிறப்பு, கூட்டு எண்கள் 6ஆம் எண்ணாகவும் அமைந்தது. நட்சத்திர எழுத்து “வு” பெயருள் சேர்ந்தது. 6ஆம் எண்ணில் W பெயருள் அமைந்தது. புகழின் உச்ச நிலையை தொட்டார்.
இன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதா 24.02.1948இல் பிறந்தார். மகம் நட்சத்திரமும், பிறப்பு எண் 6உம், கூட்டு எண் 3உம் பெற்றார். நடிக்க வந்த காலம் ‘அம்மு’ என்றே எல்லோரும் இவரை அழைத்தனர். இன்று தமிழ் நாட்டில் “அம்மா” என்றே பெயரே நிலைத்து விட்டது. மகத்திற்கு உரிய “ம” வரி பெயர் அழைப்புக்குள் வந்தது. கூட்டு எண் 3இன் எழுத்து L ஆங்கில பெயருக்குள் அடங்கியது. தெய்வீகம் நிறைந்த லலிதா நாமம் சேர்ந்தது.
இன்று தமிழ் நாட்டையே ஆட்சி நிலை செலுத்தும் அம்மாவாகி மிளிர்கின்றார்.
இப்படியாக பிரபல்யமானவர்களின் அதிர்ஷ்டப் பெயர்களை ஆய்வு செய்து பார்த்தோமேயானால் அதில் பலவித சிறப்புக்கள் இருக்கும். நட்சத்திர நாம எழுத்து, பிறப்பு எண், கூட்டு எண் என்பனவற்றின் ஆங்கில எழுத்து பெயருக்குள்ளே அமைவது இல்லையே பெயர் எண்ணுக்குரிய கிரஹம் ஜாதக கிரஹ நிலையிலே. ஆட்சி உச்சம் பெற்று அமைவது இல்லையேல் கேந்திர திரிகோணங்களில் அமைவது என்பனவே அதிர்ஷ்டப் பெயருக்கு அற்புதம் தருகின்றது.
எனவே பெயர்கள் சூட்டும்போது மேற்படியான அம்சங்கள் சிறப்பாக அமைந்திருந்தால் பலவித மேன்மைகளையும் அதிர்ஷ்டப் பெயர் தரும். எமது சமயத்திற்கும், மொழிக்கும் சம்பந்தமில்லாமல் வாயில் உச்சரிக்க முடியாத பெயர்களை “அதிர்ஷ்டப் பெயர்” என சூட்டுவதன் மூலம் எவ்வித சிறப்புகளையும் பெற முடியாது.
எமது உறவினர்களின் சந்ததி தொடர்களில் ஏழு சந்ததி பெயர் தெரிந்திருக்க வேண்டும் என்பது சிரார்த்தம் பற்றிய நூல்கள் கூறுகின்றன. அத்தோடு இந்த ஏழு சந்ததியில் உள்ள பெயர்கள் மாறி மாறி நமது பிறக்கும் குழந்தைகளில் ஒருவருக்கு சூட்டி அந்த சந்ததி சிறப்பை பெருமைப்படுத்த வேண்டும்.
மூதாதையர் பெயர்கள் தொடர்ந்து நம் இல்லங்களில் ஒலிப்பதன் மூலம் பலவித பேறுகள் நம் குடும்பத்திற்கு கிடைக்கும். எனவே அதிர்ஷ்ட பெயர்கள் ஆராய்ந்து சூட்டினால் முழுமையான அதிர்ஷ்டம் தரும் என்பதில் ஐயமில்லை.
துன்னையூர் - - கலாநிதி ராம்.தேவலோகேஸ்வர குருக்கள்
குறிப்பாக முன்னைய காலங்களில் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய நாம எழுத்துக்கள் இருக்கும். அந்த எழுத்தின்படி பெயரை சூட்டி விடுவார்கள். பெரும்பாலும் தமது சந்ததிப்பெயர் தொடர்பும், தெய்வீக நாமமுமாய் அந்தப் பெயர் அமைந்திருக்கும். அதிகமான அதிர்ஷ்டமும் கொடுக்கும். பலருக்கு பிறக்கும் நட்சத்திர நாம எழுத்துப் பற்றிய தெளிவு இல்லை.
உதாரணமாக “விசாகம்” நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை எந்தப் பாதத்தில் பிறந்துள்ளது என்பதை கணிப்பிட வேண்டும். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு. அந்த நான்கு பாதங்களுக்கும் நட்சத்திர நாம எழுத்து உண்டு. விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் பாதங்களுக்கு முறையே தி,து,தே,தோ என நான்கு நாம எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதிலே அந்த பாதத்திற்கு உரிய நாமமே பெயரில் அமைய வேண்டும். முதல் எழுத்தில் பெயர் எடுப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் பெயரினுள்ளே அந்த எழுத்து அமைகின்ற நிலையில் பெயர் தெரிவுகளை அமைத்துக்கொள்ளலாம். இப்போது உதாரணப் பெயர்கள் விசாகம் நட்சத்திர நாமப்பெயரே முதல் எழுத்தாக அமைந்து திவ்யன், துஷ்யந்தன், தேனுஜன், தோமதன், இவை நாம எழுத்தின் தொடக்கப்பெயர். இதையே பிறந்த திகதிக்கு ஏற்ப வைப்பதாயின் உதாரணமாக 5ஆம் எண்ணில் குழந்தை பிறந்திருந்தால் அந்த 5ஆம் எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்து E, H, N, X என்பன நந்திதன், ஈதுஷன், நிதேஷன், கவிதோன் என பெயர் அமைக்கும்போது நட்சத்திர நாமம் பிறப்பு எண், நாமம் என இரண்டுமே சிறப்பாக அமையும் நிலை ஏற்படுகின்றது. இதுவே அதிர்ஷ்டகரமான சிறப்பு தரும்.
அடுத்து பெயர் சூட்டும்போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை. எமது கலாசார விழுமியமான சமய, மொழிப்பற்றோடு அமைய வேண்டும். இதைவிட ஆதிகாலங்களில் எம்முன்னோர்கள் தமது குலப்பெருமை பறைசாற்றும் வகையில் பெயரோடு ஒட்டி ஐயர், செட்டியார், தேவர், நாடார், முதலியார் என்பதை சேர்த்துக்கொள்வார்கள். இது இன்றும் கிராமங்களில் நடைமுறையிலே அமைந்திருக்கின்றது.
பொதுவாக அதிர்ஷ்டப் பெயர் என்பது பிறந்த நட்சத்திர நாம எழுத்தும், பிறந்த திகதி எண்ணும் சேர்ந்த நிலையில் அமைகின்ற போது அதிகமான அதிர்ஷ்ட நிலையைக் கொடுக்கின்றது. எனவே இந்த இரண்டு விடயங்களையும் கவனத்தில் கொள்வதோடு நமது சந்ததி வழிவந்தவர்கள் நாமம், தொடர்ந்து சூட்டி வருவதும் மூதாதையர் ஆசியும் நம் குடும்பப் பெருமைகளையும் நிலை நிறுத்தி செயற்படுத்தும்.
இவற்றை நாம் பெயர் சூட்டுகின்ற போது மிகவும் நன்கு கவனித்து செயற்படுத்த வேண்டியது நம் கடமையாகின்றது. அதிர்ஷ்டமாக பெயர் சூட்டி வெற்றி வாகை பெற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களின் பெயர் சிறப்புகளை ஆய்வு செய்யும் போது நட்சத்திர நாமத்தின் எழுத்து உச்சரிப்புகள், பெயர் எண்ணில் கூட்டு எண் ஆதிக்கம், பிறப்பு எண்ணிலே ஆரம்பமாகும் எழுத்து, நட்சத்திர நாம எழுத்து பெயரின் உள்ளே அமைவது என ஏதோ ஒரு வகையில் பிறந்த நட்சத்திரத்திற்கும் பிறப்பு எண், கூட்டு எண் என்பனவற்றிற்கும் தொடர்பு கொண்டவையாகவே அமைகின்றன. அதை விட ஒரு தெய்வீகத்தன்மை பெயரிலே அடங்கியிருக்கின்றது.
ஒவ்வொருவருக்கும் பெயர் அதிர்ஷ்டமாய் அமைந்திருக்கின்றது. திரையுலகிலும், அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் மக்கள் திலகம், ‘எம்.ஜி.ஆர்’ இவரின் முழுப்பெயர், எம்.ஜி.ராமச்சந்திரன் 17.01.1917ஆம் ஆண்டு பிறந்த இவரின் நட்சத்திரம் ‘சுவாதி’ நட்சத்திர நாம எழுத்து ‘ரே’, ‘ரோ’ போன்ற எழுத்து பெயர் ஆரம்பத்திலேயே ‘ராமச்சந்திரன்’ என அமைகின்றது. பிறப்பு எண் 8, கூட்டு எண் 9, 8ஆம் எண்ணிற்கு மிகவும் வசியமான 5ஆம் எண்ணில் M.G.Ramachandran எனும் பெயர் எண் அமைகின்றது. அதையே சுருக்கி தனது கூட்டு எண் 9ஆம் எண்ணிற்கு ஏற்றவாறு M.G.R என அமைத்தார். அளவில்லா அதிர்ஷ்டத்தை வாரி வழங்கியது. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும் என்பதை இன்றும் நிரூபித்து நெஞ்சங்களில் வாழ்கின்றார். ராமபிரானின் தெய்வீன நாமமுமாய் இது அமைந்து விட்டது.
அடுத்து அரசியல் சாணக்கியனாய் தமிழ் எழுத்துலகின் வித்தகனாய் இருக்கும் மு.கருணாநிதி 03.06.1924ஆம் ஆண்டு பிறந்தார். நட்சத்திரம் ‘மிருகசீரிடம்’ நாம எழுத்து ‘க’. அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கின்றது. பிறப்பு எண் 3, கூட்டு எண் 7 என அமைகின்றது. இவரின் கூட்டு எண்ணின் வசிய எண்ணாகிய 2ஆம் எண் எழுத்து “K”யில் கருணாநிதி, கலைஞர் போன்ற பெயர்கள் அமைந்திருப்பது இரட்டிப்பு அதிர்ஷ்டமாய் அமையும் நிலையை கொடுத்தது. இன்றும் அவர் புகழ்மிக்கவராய் மிளிர பெயர் அதிர்ஷ்டம் கொடுத்தது. கருணாநிதி சிவனின் திருநாமம்.
அடுத்து நடிப்புலகிலே தன்னிகரில்லா புகழ்பெற்று விளங்கிய நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” 01.10.1927இல் பிறந்தார். உத்தராடம் நட்சத்திரத்திலே பிறந்த இவரின் நிஜப்பெயர் “சின்னையா கணேசன்”. இவரின் உத்தராட நட்சத்திர நாம எழுத்து ஐ.ஜி.சேர்ந்தது. ‘சிவாஜி’ இவர் உச்சத்திற்கு சென்றார். பிறப்பு எண் 1உம், கூட்டு எண் 3உம் என அமைந்த இவருக்கு இவரின் கூட்டு எண் எழுத்தாகிய S முதல் எழுத்தாய் அமைந்தது. இவரின் 'Sivaji Ganesan' பிறப்பு எண் 1இல் பெயரென்றும் அமைந்தது. “கணேசன்” எனும் தெய்வீகநாமம். இவர் புகழை உலகறிய செய்தது.
24.06.1927 அன்று பிறந்த கவியரசு கண்ணதாசன் அஸ்வினி நட்சத்திரமும், 6ஆம் எண் பிறப்பு எண்ணாகவும் 4ஆம் எண் கூட்டு எண்ணாகவும் கொண்டவர். அஸ்வினி நட்சத்திர நாம எழுத்து “ச” பெயருக்குள் அமைந்தது. பெயரின் கூட்டு எண் 6இல் அமைந்தது. கூட்டு எண் எழுத்து 'T' பெயருக்குள் அமைந்தது. தமிழ்நாட்டு அரசவைக் கவிஞராய் புகழின் உச்சிக்கே சென்றார். ஆண்மைக்குரலுக்கு சொந்தமான T.M. செளந்தர்ராஜன் 24.03.1923இல் பிறந்தார். மிருகசீரிடம் நட்சத்திரமும், பிறப்பு, கூட்டு எண்கள் 6ஆம் எண்ணாகவும் அமைந்தது. நட்சத்திர எழுத்து “வு” பெயருள் சேர்ந்தது. 6ஆம் எண்ணில் W பெயருள் அமைந்தது. புகழின் உச்ச நிலையை தொட்டார்.
இன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதா 24.02.1948இல் பிறந்தார். மகம் நட்சத்திரமும், பிறப்பு எண் 6உம், கூட்டு எண் 3உம் பெற்றார். நடிக்க வந்த காலம் ‘அம்மு’ என்றே எல்லோரும் இவரை அழைத்தனர். இன்று தமிழ் நாட்டில் “அம்மா” என்றே பெயரே நிலைத்து விட்டது. மகத்திற்கு உரிய “ம” வரி பெயர் அழைப்புக்குள் வந்தது. கூட்டு எண் 3இன் எழுத்து L ஆங்கில பெயருக்குள் அடங்கியது. தெய்வீகம் நிறைந்த லலிதா நாமம் சேர்ந்தது.
இன்று தமிழ் நாட்டையே ஆட்சி நிலை செலுத்தும் அம்மாவாகி மிளிர்கின்றார்.
இப்படியாக பிரபல்யமானவர்களின் அதிர்ஷ்டப் பெயர்களை ஆய்வு செய்து பார்த்தோமேயானால் அதில் பலவித சிறப்புக்கள் இருக்கும். நட்சத்திர நாம எழுத்து, பிறப்பு எண், கூட்டு எண் என்பனவற்றின் ஆங்கில எழுத்து பெயருக்குள்ளே அமைவது இல்லையே பெயர் எண்ணுக்குரிய கிரஹம் ஜாதக கிரஹ நிலையிலே. ஆட்சி உச்சம் பெற்று அமைவது இல்லையேல் கேந்திர திரிகோணங்களில் அமைவது என்பனவே அதிர்ஷ்டப் பெயருக்கு அற்புதம் தருகின்றது.
எனவே பெயர்கள் சூட்டும்போது மேற்படியான அம்சங்கள் சிறப்பாக அமைந்திருந்தால் பலவித மேன்மைகளையும் அதிர்ஷ்டப் பெயர் தரும். எமது சமயத்திற்கும், மொழிக்கும் சம்பந்தமில்லாமல் வாயில் உச்சரிக்க முடியாத பெயர்களை “அதிர்ஷ்டப் பெயர்” என சூட்டுவதன் மூலம் எவ்வித சிறப்புகளையும் பெற முடியாது.
எமது உறவினர்களின் சந்ததி தொடர்களில் ஏழு சந்ததி பெயர் தெரிந்திருக்க வேண்டும் என்பது சிரார்த்தம் பற்றிய நூல்கள் கூறுகின்றன. அத்தோடு இந்த ஏழு சந்ததியில் உள்ள பெயர்கள் மாறி மாறி நமது பிறக்கும் குழந்தைகளில் ஒருவருக்கு சூட்டி அந்த சந்ததி சிறப்பை பெருமைப்படுத்த வேண்டும்.
மூதாதையர் பெயர்கள் தொடர்ந்து நம் இல்லங்களில் ஒலிப்பதன் மூலம் பலவித பேறுகள் நம் குடும்பத்திற்கு கிடைக்கும். எனவே அதிர்ஷ்ட பெயர்கள் ஆராய்ந்து சூட்டினால் முழுமையான அதிர்ஷ்டம் தரும் என்பதில் ஐயமில்லை.
துன்னையூர் - - கலாநிதி ராம்.தேவலோகேஸ்வர குருக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக