* நெல்லிக்காய் ஊறுகாய் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி உண்டு. நெல்லிக்காயை உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்து, அந்த உப்பு நீரிலேயே வைத்திருக்க வேண்டும். தேவைப்படும்போது எடுத்து, நறுக்கி, சூடான எண்ணெயில் கடுகு தாளித்து, மிளகாய் தூள், வெந்தயத் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கிளறி உபயோகிக்க வேண்டும். இப்படிச் செய்தால் கெட்டுப் போகாது. மொத்தமாகத் தாளித்து வைத்தால் கெட்டுப் போய்விடும்.
* புடலை, பீர்க்கங்காய், பரங்கிக்காய் கூட்டு செய்யும் போது, ஒரு டீஸ்பூன் பால் சேர்த்தால் சுவையாக இருக்கும். சூடான தோசைக்கல்லில் சிறிது புளித்த மோரும் உப்பும் தடவி தேய்த்தால் தோசைக்கல்லில் பிசுபிசுப்பு இருக்காது.
* பச்சைமிளகாய் வாங்கி வந்தவுடன் காம்பைக் கிள்ளிவிட்டால் பச்சை மிளகாய் அழுகாமல் இருக்கும்.
* பாகற்காயை அரிந்து, சிறிது நேரம் அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். பிறகு சமைக்கவும். கசப்பு இருக்காது.
* சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு வகைகளை எண்ணெய் விட்டு வதக்கி கறி செய்யும் போது, சிறிதளவு பொட்டுக் கடலை மாவைத் தூவினால் மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
*அடைக்கு அரைக்கும் போது, ஒரு சிறிய துண்டு பரங்கிப்பிஞ்சு அல்லது பரங்கிக்காயை சேர்த்து அரைக்கவும். அடை மிருதுவாக பஞ்சு போல இருக்கும்.
*ஆப்ப மாவைக் கரைத்ததும் சிறிது தேங்காய் தண்ணீர் ஊற்றி வைத்தால் ருசியாகவும் மென்மையாகவும் இருக்கும்.
*முருங்கைக்கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையைச் சேர்த்துக் கொண்டால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரி உதிரியாக இருக்கும்.
*எலுமிச்சம் பழத்தை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு வைத்து விட்டு எடுத்து, பிறகு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழிவதும் சுலபம்.
*முட்டைகளின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
*கிழங்குகளை உப்புப் போட்டு வேக வைத்தால் கிழங்கு சரியாக வேகாது. சேனையை தோல் எடுத்துவிட்டுத்தான் வேக வைக்க வேண்டும்.
*கொத்தமல்லி சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, மிளகாய்க்கு பதிலாக மிளகை வறுத்துச் சேர்த்தால் சுவை கூடும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
* புடலை, பீர்க்கங்காய், பரங்கிக்காய் கூட்டு செய்யும் போது, ஒரு டீஸ்பூன் பால் சேர்த்தால் சுவையாக இருக்கும். சூடான தோசைக்கல்லில் சிறிது புளித்த மோரும் உப்பும் தடவி தேய்த்தால் தோசைக்கல்லில் பிசுபிசுப்பு இருக்காது.
* பச்சைமிளகாய் வாங்கி வந்தவுடன் காம்பைக் கிள்ளிவிட்டால் பச்சை மிளகாய் அழுகாமல் இருக்கும்.
* பாகற்காயை அரிந்து, சிறிது நேரம் அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். பிறகு சமைக்கவும். கசப்பு இருக்காது.
* சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு வகைகளை எண்ணெய் விட்டு வதக்கி கறி செய்யும் போது, சிறிதளவு பொட்டுக் கடலை மாவைத் தூவினால் மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
*அடைக்கு அரைக்கும் போது, ஒரு சிறிய துண்டு பரங்கிப்பிஞ்சு அல்லது பரங்கிக்காயை சேர்த்து அரைக்கவும். அடை மிருதுவாக பஞ்சு போல இருக்கும்.
*ஆப்ப மாவைக் கரைத்ததும் சிறிது தேங்காய் தண்ணீர் ஊற்றி வைத்தால் ருசியாகவும் மென்மையாகவும் இருக்கும்.
*முருங்கைக்கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையைச் சேர்த்துக் கொண்டால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரி உதிரியாக இருக்கும்.
*எலுமிச்சம் பழத்தை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு வைத்து விட்டு எடுத்து, பிறகு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழிவதும் சுலபம்.
*முட்டைகளின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
*கிழங்குகளை உப்புப் போட்டு வேக வைத்தால் கிழங்கு சரியாக வேகாது. சேனையை தோல் எடுத்துவிட்டுத்தான் வேக வைக்க வேண்டும்.
*கொத்தமல்லி சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, மிளகாய்க்கு பதிலாக மிளகை வறுத்துச் சேர்த்தால் சுவை கூடும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக