அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

சினிமா பாணியில் குடும்பஸ்தர் கொலை

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் மனிதப் படு கொலைகள், திரைப்­ப­டங்­களில் காண்­பிக்­கப்­படும் காட்­சி­களை அடி­யொற்­றி­ய­வாறு அமைந்­தி­ருப்­பதைக் காணலாம். சினிமா நிஜ­வாழ்க்­கையின் பிர­தி­ப­லிப்பு என்று சொல்­லப்­ப­டு­வ­துண்டு. சில திரைப்­ப­டங்­களின் கதை உண்மைச் சம்­ப­வங்­களைத் தழு­வி­யதாய் திரைக்­கதை அமைக்­கப்­பட்­டி­ருக்கும்.



சில தரு­ணங்­களில் திரையில் சித்­தி­ரிக்­கப்­பட்டு காட்சிப் பிழம்­பாகக் காட்­டப்­ப­டு­பவை நிஜ வாழ்க்­கை­யிலும் அவ்­வ­கை­யான சம்­ப­வங்கள் நடை­பெற கால்­கோ­ளாக அமைந்­து­வி­டு­கின்­றன. அம்­மா­தி­ரி­யான திரைப்­ப­டங்­களில் பச்­சி­ளங்­கு­ழந்­தைகள் முன்னே, அல்­லது ஓர­ள­வுக்கு விவரம் தெரிந்த பிள்­ளை­களின் கண்­ணெ­திரே அவர்­க­ளது தந்­தை­யையோ தாயையோ கொடூ­ர­மாக கொலை­செய்­வது போன்று காட்­சிகள் அமைக்­கப்­பட்­டி­ருக்கும்.

அவர்­க­ளது தாய், தகப்­பனின் கழுத் தைத் திருகி, முகத்தைத் தலை­ய­ணை யைக் கொண்டு அழுத்தி மூச்­சைத்­தி­ண­ற­டித்து, கத்­தியால் குத்தி, துப்­பாக்­கியால் சுட்டு, வாயை அகல விரித்து விஷத்தை ஊற்றிக் கொலை செய்­வது போல காட்­சிகள் அமைக்­கப்­பட்­டி­ருக்கும். இவை பார்ப்­பவர் மனதில் ஒரு­வித பாதிப்­பையும் சல­னத்­தையும் தோற்­று­வித்­து­விட­ வல்­ல­ன­வாகும்.

சமீ­பத்தில் நான் பார்க்க நேரிட்ட திரைப்­ப­ட­மொன்றில் ஒரு பெண் ஆணுடன் சர­ச­மாடிக் கொண்டே அவ­னது கழுத்தில் இலா­வ­க­மாக சுருக்­கு­மாட்ட, மறு­மு­னையில் பிறி­தொரு பெண் மரத்தில் ஏலவே கட்­டப்­பட்ட கயிற்றை வலுக்­கொண்ட மட்டும் பிடித்து இழுப்பாள். அதன் போது சடு­தி­யாக அந்த ஆட­வனை விட்டு வரும் சர­ச­மா­டிய பெண்ணும் சேர்ந்து அக்­க­யிற்றை இழுப்பாள். பின்னர் சரசம் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த ஆண் தூக்கில் தொங்­க­வி­டப்­பட்டு கொலை­செய்­யப்­ப­டுவான்.

சில வரு­டங்­க­ளுக்கு முன்பு நடிகர் சத்­தி­யராஜ் நடித்த 6.2 என்ற திரைப்­படம் இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணி­யி­லேயே அமைந்­தி­ருந்­தது. அதில் சிறு­வ­னாக இருந்த சத்­தி­ய­ராஜின் தந்­தை­யிடம் அவ­ரது உற­வுக்­கார சகோ­த­ரர்கள், பிழைப்­புக்­காக தஞ்சம் கோரி அவ­ரது வீட்­டுக்கு வரு­வார்கள். அப்­போது ஓர் நாளி­ரவு வீட்டில் எல்­லோரும் படுக்­கைக்குச் சென்ற பின்னர் உற­வுக்­கார சகோ­த­ரர்கள் சத்­தி­ய­ராஜின் தாயையும் தந்­தை­யையும் கூரிய ஆயு­தத்தால் அடித்தே கொலை செய்­வார்கள்.

இதனை சிறு­வ­னாக இருக்கும் சத்­தி­ய­ராஜும் அவ­ரது சகோ­த­ரியும் மறை­வாக நின்று பார்த்­துக் ­கொண்­டி­ருப்­பார்கள். தம் கண்­ணெ­திரே பெற்­றோர்கள் கொலை செய்­யப்­ப­டு­வதைப் பார்த்து யாதொன்றும் செய்ய இய­லா­த­வர்­க­ளாக விழி பிதுங்கி நிற்­பார்கள். இத்­தி­ரைப்­படம் திரைக்கு வந்து பல வரு­டங்­க­ளா­கின்ற போதிலும், தற்­போது அத­னைப்­பார்க்க நேர்ந்தால் திரைப்­ப­டத்தில் வரும் இக்­காட்சி பார்ப்­ப­வரின் மனதில் ஏதோ ஒரு­வித பாதிப்­பையும் தாக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­வி­டு­மென்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை.

அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக ஆட்சிப் பொறுப்பை வகித்த ஒருவர் கூட, அக்­கா­லத்தில் வெளி­வந்து சக்கை போடு போட்ட "டெல்டா போஸ்" என்ற திரைப்­ப­டத்தில் இடம்­பெற்ற கொலைக்­காட்­சியை மைய­மாக வைத்தே கொலை செய்­யப்­பட்­டா­ரெனக் கூறப்­ப­டு­கின்­றது. எனவே, திரைப்­ப­டங்­களில் நடக்கும் சம்­ப­வங்கள் சில நேரம் நிஜ­வாழ்­வுடன் தொடர்­பு­றாமல் இருந்­தாலும், சில தரு­ணங்­களில் அவற்றின் பாதிப்பில் சில சம்­ப­வங்கள் நிஜ­வாழ்வில் அரங்­கே­றத்தான் செய்­கின்­றன. அவ்­வாறு ஒரு சம்­பவம் நிஜ வாழ்வில் நடந்து ஒரு குடும்­பத்­தையே நிர்க்­க­தி­யான நிலை­மைக்­குள்­ளாக்­கிய கதையே இம்­முறை பதி­வா­கின்­றது.

ஆம். களுத்­துறை வடக்கு பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கல்­பாத்த, வெல்­பொல, புன்­சி­ரி­புர பகு­தியில் சில ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குச் சொந்­த­மான தேயிலைத் தோட்ட உரி­மை­யா­ள­ரொ­ருவர் தமது மனைவி, பிள்­ளை­க­ளுடன் தனது தொழில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வந்­துள்ளார். அவர் தேக நலம் சற்று குன்­றிய, அடிக்­கடி நோய்­வாய்ப்­படும் ஒரு­வ­ராக இருந்­துள்­ளா­ரென களுத்­துறை வடக்கு பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் பிரஷான் சில்வா தெரி­வித்தார்.

இதன் கார­ண­மாக அடிக்­கடி மருந்து வாங்­கவும், வைத்­திய சிகிச்­சை­க­ளுக்­கா­கவும் மருந்­த­கங்­க­ளையும் வைத்­தி­ய­சா­லை­க­ளையும் நாடு­ப­வ­ராக இருந்­துள்ளார். இவ­ரது குடும்பம் ஊரின் மத்­தியில் சற்று பிர­பலம் பெற்ற ஒன்­றா­கவே இருந்­துள்­ளது. குறித்த நப­ருக்கு மூன்று பிள்­ளைகள், மூவ­ருமே ஆண்கள். மூத்த பைய­னுக்கு 15 வய­தா­கின்­ற­தென பொலிஸ் தரப்­பி­னரால் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவர்­களின் தாய் தொழில் எதுவும் செய்­யாத நிலையில், பிள்­ளை­க­ளையும் கண­வ­னையும் கவ­னித்துக் கொண்டு வீட்டில் இருந்­துள்ளார்.

இவர்­க­ளது வீட்டில் மற்­ற­வர்கள் உதவி என்று வரு­வதும் அவர்­க­ளுக்கு இக்­கு­டும்பம் உத­வி­செய்­வதும் வாடிக்­கை­யா­கவே இருந்­துள்­ளது. எவ்­வித பிரச்­சி­னையும் சிக்­கல்­களும் இல்­லாமல் அவர்­க­ளது வாழ்க்கை மலர்ப் பாதையில் காலடி எடுத்து வைத்துப் பய­ணித்­துள்­ளது. ஆனால் அப்­பா­தையில் தூவப்­பட்ட மலர் ரோஜா என்றும் அத­னுடன் முள்ளும் இருக்­கு­மென்­பதை அறி­யாமல் கால் வைத்­ததன் விளைவு இவர்­க­ளது வாழ்க்­கை­யையே திசை­மா­றிய ஓட­மாக மாற்­றி­விட்­டது.

ஆம். இவ்­வா­றி­ருந்த போது தான் குறித்த நபரின் மனை­வி­யிடம் ஒரு அவ­சரத் தேவை­யெனக் கூறி சந்­தேக நபர் ஆயிரம் ரூபாவைக் கைமாற்­ற­லாக (கட­னாக) பெற்­றுள்ளார். அந்­ந­பரின் மனைவி இக்­கட்­டான சூழ்­நி­லையில் அப்­ப­ணத்தைக் கொடுத்­துள்ளார். ஏனென்றால் சந்­தேக நபர் ஒரே ஊரைச் சேர்ந்­தவர்.

அடிக்­கடி இவர்­க­ளது வீட்­டுக்கு வந்து போகும் ஒரு­வ­ராக இருந்­துள்ளார். அவ­சரத் தேவை­யெனக் கேட்­பதால் கொடுக்­காமல் இருந்தால் அவர் என்ன நினைப்பார் என்ற எண்­ணமும் சந்தேக மும் அந்­ந­பரின் மனை­வியை உள்­ளூர வாட்­டி­யுள்­ளது. உடனே அச்­சந்­தே­க­நபர் கேட்ட ஆயிரம் ரூபாவைக் கொடுத்­துள்ளார். சந்­தே­க­ந­பரும் பெற்­றுக்­கொண்டு சென்­றுள்ளார். அதன் பிறகு அப்­ப­ணத்தை உரிய நேரத்தில் குறித்த நபரின் மனை­வி­யிடம் கொடுக்­காது காலம் தாழ்த்தி வந்­துள்­ளா­ரென களுத்­துறை வடக்குப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரி­சோ­தகர் பிரஷான் சில்வா தெரி­வித்தார்.

குறித்த நபரின் மனை­வியும் பொறுத் துப் பொறுத்து பார்த்­து­விட்டு, ஒருநாள் சந்­தே­க­ந­பரின் வீட்­டுக்கே சென்­றுள்ளார். அங்கே சென்று சந்­தேக நப­ரிடம் தன்­னிடம் கைமாற்­ற­லாக (கட­னாக) வாங் கிச் சென்ற பணம் தொடர்­பிலும் அதனைத் திருப்பித் தர மறுத்­த­மைக்­கான காரணம் தொடர்­பிலும் வின­வி­யுள்ளார். அச்­ச­ம­யத்தில் சந்­தே­க­நபர் அதனை அமை­தி­யாக செவி­ம­டுத்துக் கேட்­டுக்­கொண்­டி­ருந்­துள்ளார்.

ஆனால், இத­னை­யொரு சிறிய விட­ய­மாகக் கருதி சந்­தே­க­நபர் மறந்­து­வி­ட­வில்­லை­யென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சம்­பவ தின­மான கடந்த 17 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாலை ஏழு மணிக்கு நிறை­போ­தையில் குறித்த நபரின் வீட்­டுக்கு சந்­தேக நபர் சென்­றுள்ளார். குறித்த நபரின் மனைவி தனது வீட்­டுக்கு வந்து கொடுத்த பணத்தைக் கேட்­டதை எண்ணி எண்ணி மன­துக்குள் ஏசிக்­கொண்டே அவ்­வீட்டுக் கதவை தட்­டி­யுள்ளார்.

அச்­ச­மயம் கதவு தட்டும் சத்தம் கேட்டு குறித்த பெண் வந்­துள்ளார். கதவை திறந்து பார்த்த போது நிறை­போ­தையில் கத­வோ­ர­மாக தள்­ளா­டியபடி காணப்­பட்ட சந்­தே­க­நபர் தனது வாய்க்கு வந்­த­படி அவ­ளைத்­ திட்­டி­யுள்ளார். இடை­வி­டாது கத்­திக்­ கூச்­ச­லிட்­டுள்ளார். அந்­நேரம் பார்த்து குறித்த நபர் வீட்டில் இருக்­க­வில்லை.

அவர் சுக­வீ­ன­முற்­றி­ருந்­த­மையின் கார­ண­மாக மருந்து வாங்­கு­வ­தற்­காக அரு­கா­மை­யி­லி­ருந்த தனியார் மருத்­து­வ­சி­கிச்சை நிலை­யத்­திற்குச் சென்­றுள்ளார். சந்­தேக நபர் அங்கு வந்து கூச்­ச­லிட்­டுக்­கொண்­டி­ருந்த சிறிது நேரத்­திற்­கெல்லாம் அந்­நபர் அங்கே வந்­து­விட்டார். சந்­தே­க­நபர் தனது வீட்டு வாசலில் நின்­று­கொண்டு மது அருந்­தி­விட்டு வந்து மனைவி பிள்­ளை­களை தகாத வார்த்­தை­களால் திட்­டு­வதைக் கண்டு கோபம் கொப்­ப­ளிக்க சந்­தே­க­ந­பரை நோக்கி வேக­மாக வந்­துள்ளார். சுக­வீனம் கார­ண­மாக அவ­ரது உடல் சற்று தெம்­பி­ழந்து பல­வீ­ன­மா­கவே இருந்­துள்­ள­தென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சந்­தே­ந­பரை தடுத்­து­நி­றுத்தி என்­ன­வென விசா­ரித்­துள்ளார். “பணம் தரா­விட்டால் பர­வா­யில்லை" அங்­கி­ருந்து சென்றால் போது­மென குறித்த நபர் எவ்­வ­ளவோ தூரம் சந்­தே­க­ந­ப­ரிடம் கெஞ்­சாத குறை­யாக கேட்­டுப்­பார்த்­துள்ளார். ஆனால் சந்­தே­க­நபர் அதை­யெல்லாம் காதில் வாங்கிக் கொள்­ள­வில்­லை­யென குறித்த நபரின் மனைவி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

தொடர்ச்­சி­யாக சகிக்க முடி­யாத வண் ணம் தீய­வார்த்­தைக் ­க­ணை­களை சர­மா­ரி­யாகப் பொழிந்­துள்ளார். பொறுத்­தி­ருந்து பார்த்த குறித்த நபரின் பொறுமை எல்லை தாண்­டி­யுள்­ளது. இதனால் வாய்த்­தர்க்கம் முற்றி சிறிது நேரத்­திற்­கெல்லாம் வாய்த்­தர்க்கம் கைக­லப்­பாக பரி­மாற்­ற­ம­டைந்­துள்­ளது. இதன்­போது சந்­தே­க­நபர் தாக்­கி­யதில் குறித்த நபர் வீட்­டிற்கு முன்­னா­லுள்ள கானில் விழுந்­துள்ளார்.

கோபத்தின் உச்­சா­ணிக்­கொம்­புக்கே சென்­று­விட்ட சந்­தேக நபர் அவரை கானி­லி­ருந்து வெளியே இழுத்­தெ­டுத்து அவ­ரது கழுத்தை தனது முழங்­கையால் வலுக்­கொண்ட மட்டும் இறு­கப்­பற்றி கழுத்தை நெரித்­துள்­ள­தாக வடக்கு களுத்­துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பரி­சோ­தகர் பிரஷான் சில்வா தெரி­வித்தார். இதனால் மூச்­சுத்­தி­ணறி குறித்த நபர் ஸ்தலத்­தி­லேயே பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­துடன், சந்­தே­க­நபர் தனது பிடியைத் தளர்த்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளார்.

இதனை கண்­ணெ­திரே பார்த்­துக்­கொண்­டி­ருந்த அவ­ரது குடும்பம் அதிர்ச்­சியால் உறைந்து நிலை­த­டு­மாறி கத்­திக்­கூச்­ச­லிட்டு அல­றி­யுள்­ளது. இருந்தும் பய­னில்லை. சிறிதும் தாம­திக்­காமல் தான் இக்­கட்டில் மாட்­டிக்­கொண்­டதை உணர்ந்த சந்­தே­க­நபர், அங்­கி­ருந்து தப்பி ஓட்டம் பிடித்­துள்ளார். அங்­கி­ருந்து ஓடி­ய­துடன் அப்­ப­கு­தி­யி­லுள்ள வீடொன்றின் அறைக்குள் ஒளிந்­து­கொண்­ட­துடன், சில நாட்கள் யாரும் அறி­யா­த­வாறு தலை­மறை­வா­கி­யுள்ளார்.

பொலிஸ் இர­க­சிய தகவல் தொடர்­பாளர் ஒரு­வரின் உத­வியால் சந்­தே­க­ந­பரை மடக்கிப் பிடித்து கைது ­செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். களுத்­துறை வடக்கு பொலிஸ் நிலைய பொலிஸ் பரி­சோ­தகர் பிரஷான் சில்­வாவின் வழிக்­காட்­ட­லுக்­க­மை­வாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்குப் பொறுப்­பான தலைமை பொலிஸ் அத்­தி­யட்­சகர் மற்றும் உப­பொலிஸ் பரி­சோ­தகர் பத்­மினி குல­துங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள் ளப்படுகின்றன.

 கே.நிரோஷ்குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக