இன்று எழுபது நாடுகளில் முப்பது கோடி வேடுவர் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதமாகும். உலகில் வாழும் அனைத்து ஆதிவாசிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கிறார்கள்.
நகரங்களின் விரிவாக்கம் ஆதிவாசிகளது வாழ்வாதாரங்களும் அவர்களது வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் ஆதிவாசிகளின் புதிய தலைமுறை நவீன வாழ்க்கையினை விரும்புவது ஆகியவற்றின் விளைவாக ஆதிவாசிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. உலக ஆதிவாசிகள் தினம் ஆகஸ்ட் ஒன்பதாம் திகதி என ஐக்கிய நாடுகள் சபை 1994 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. உலகில் வாழும் பல்வேறுபட்ட ஆதிவாசிகள் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்கள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும் உலக ஆதிவாசிகள் தினம் International Day of The World's Indigenous Peoples பெரிதும் துணைநிற்கும்.

வேடுவர் எனப்படுவோர் காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இலங்கையின் பழங்குடி மக்களான இவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மை கொண்டவர்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக காணப்பட்டாலும், அண்மைக் காலமாக சாதாரண மனிதவாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு, ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் போல்லேபெட்ட மற்றும் ஹெனனிகல, பதுளை மாவட்டத்தின் தம்பனை, பொலநறுவை மாவட்டத்தின் டலுகன மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை ஆகிய பகுதிகளில் இலங்கையின் வேடுவர் சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிறு சிறு குழுக்களாக இணைந்து வாழும் இவர்கள் இன்னமும் கோடரி, அம்பு, வில் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். இந்த வேடுவச் சமூகத்தவர்களில் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் வெளியே வந்து ஏனைய மக்களுடன் கலந்து வாழ்வதோடு உயர் கல்வியினை தொடருகின்ற போதும், ஏனையவர்கள் தங்களது கலாச்சார ரீதியிலான வழமைகளைப் பின்பற்றி வாழவே விரும்புகிறார்கள்.
எவ்வாறிருப்பினும், இலங்கையினது வேடுவர் சமூகத்தினது தொகை பெரிதும் குறைவடைந்து வருகிறது. 1921ஆம் ஆண்டு 45,010 ஆக இருந்த இவர்களது தொகை 1946ஆம் ஆண்டு 2,361ஆகக் குறைந்திருந்தது. வேடுவரின் உத்தியோகபூர்வ கிராமமாக மகியங்கனைப் பிரதேசத்தின் தம்பனை கிராமம் காணப்படுகிறது. தம்பனையில் சுமார் 350 வேடுவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்போதைய பிரதான தொழில் விவசாயமாக மாறியிருக்கிறது. மேலும் சிலர் படித்து, தொழில் புரிகின்றனர்.
ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களுக்கு நீர்வசதியினைப் பெற்றுக்கொடுப்பது, அவர்களது சிற்ப வேலைப்பாடுகளைச் சேகரித்து அவற்றைப் பாதுகாத்தல், இவர்களது கலாச்சார நிகழ்வுகளை ஊக்குவித்தல், ஆதிவாசிகளது உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆயூள்வேத சிகிச்சைமுறைகள் தொடர்பான இளந்தலைமுறையினருக்குக் கற்பிப்பதோடு இது தொடர்பான புத்தகங்களைத் தயாரித்து ஆவணப்படுத்துதல் மற்றும் இலங்கையினது ஆதிவாசிகளின் வரலாறு தொடர்பான அனைத்துச் சான்றுகளையும் கொண்டிருக்கும் நூதனசாலையினை அமைக்கும் திட்டங்களும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
ஆதிவாசிகளது மொழி மற்றும் அவர்களது வாழ்க்கை முறை ஆகியன தொடர்பில் இவர்களது இளம்தலைமுறையினருக்குக் கற்பிக்கும் வகையில் பழங்குடியின பாடசாலை மகியங்கனைப் பிரதேசத்தின் தம்பனை பகுதியில் காணப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை அழித்துவிட்டன.
சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, அந்தஸ்து இழந்து காணப்பட்ட வேடுவர்களுக்கு அந்தஸ்தளித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.
காலப் போக்கில் காடுகளின் அளவு நாகரீகம் என்ற பெயரில் குறைவடைய ஆரம்பித்ததை அடுத்து வேடுவ சமூகத்தினர் கிராமத்து மக்களைப் போன்று தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் மரங்களையும், மரக்குற்றிகளையும், பலகைகள், களிமண் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறு வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். இலுக் மற்றும் மனா என்ற புல் இனத்தைப் பயன்படுத்தி இவர்கள் அந்த வீடுகளின் கூரைகளை அமைத்தார்கள்.
கடல் வேடுவர்களின் பழைய வீடுகள் குட்டையாக தென்னம் ஓலைகளினாலும் காட்டுப் புல்லினாலும் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த வீடுகளில் ஒரு சில சமையல் பாத்திரங்களும், ஒரு பாயும், மீன் பிடிப்பதற்கான சில வலை மற்றும் தூண்டில் மாத்திரமே இருந்தன. அவர்கள் தங்கள் வீடுகளை அடுத்துள்ள களைகளை அகற்றிவிட்டு சோளம், மஞ்சள் பூசணிக்காய் போன்ற காய்கறிகளை செய்கை பண்ணினார்கள். இவை இலகுவில் வளரக்கூடிய காய்கறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேடுவர்கள் அன்று நோய்வாய்ப்பட்டு, காயமடைந்த, வயிற்றில் குட்டிகளை வைத்திருக்கும் மிருகங்களை வேட்டையாடுவதே இல்லை. தண்ணீர் குடிக்கும் மிருகங்களையோ அல்லது குட்டிகளுக்கு பாலூட்டும் மிருகங்களையோ அவர்கள் கொல்வதில்லை.
காடுகளில் உள்ள மருந்து மூலிகைகளை சேகரித்து, பாரம்பரிய மருந்து வகைகளை தயாரித்தல், கைப்பணிப் பொருட்கள், மிருகங்களின் எலும்புகள், கற்கள் மற்றும் மரங்களின் இலை, குழைகளை பயன்படுத்தி பொருட்களை தயாரிப்பது வேடுவ சமூகத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. கிழக்கிலுள்ள வேடுவர்கள் மீன்பிடி, விவசாயம், குளவிகளின் தேன் பாணியை சேகரித்தல் போன்ற பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் ஆரம்ப காலத்தில் காடுகளில் உணவை தேடியலையும் மனிதர்களாக விளங்கினார்கள். கடந்த 50 ஆண்டு காலத்தில் வேடுவர்களின் வாழ்க்கை மாறிவிட்டது. இவர்களை காடுகளில் இருந்து வெளியேற்றி கிராமங்களில் குடியமர்த்தியதும் பிரதான காரணமாகும். அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை தவிடு பொடியாவதற்கும் இதுவொரு முக்கிய காரணியாகும். இதனால் அவர்களின் பாரம்பரியமான வாழ்க்கை முறை பெரும் பாதிப்பிற்குள்ளாகியது.
கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட இவர்கள் பாரம்பரியமாக வேட்டையாடி உணவைத் தேடும் வாழ்வாதாரத்தை இழந்து, அவர்கள் சமூகத்தின் ஏனையோருடன் ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டிய ஒரு பெரும் சவாலையும் எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலை இலங்கையின் மத்தியிலுள்ள வேடுவர்களையும், கரையோரத்தில் உள்ள வேடுவர்களையும் பெரிதும் பாதித்தன. சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் செல்வாக்கும் இந்த ஆதிக்குடிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு வலுவான செல்வாக்காக மாறியது.
இலங்கையின் ஆதிவாசிகளின் மத்தியில் வாரிக சபா என்ற அமைப்பு இருந்து வருகின்றது. இந்த அமைப்புக்களின் மூலமே தங்களது பிரச்சினைகளை கலந்தாலோ சித்து தீர்மானங்களை எடுப்பர்.
இது போன்று இப்போது இலங்கையில் உள்ள வேடுவர் சமூகத்தினர் வருடம் ஒரு தடவை ஒன்றிணைந்து தங்கள் தலைவர் ஊர், குலத்தைச் சேர்ந்த தலைமையில் வாரிக சபா கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்த ஒன்றுகூடல் தம்பனையில் நடைபெற்றது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி இலங்கையில் உள்ள ஆதிவாசிகளின் பெருமளவு எண்ணிக்கையினர் இன்று கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகள் எங்களது வரலாறும் மரபுரிமையும் ஆகும். அவர்களையும் அவர்களது வாழ்க்கை முறையினையும் பேணிக்காப்பது எங்கள் அனைவரதும் கடமையாகும்.
நிஷாயா இக்பால் – பாணந்துறை
நகரங்களின் விரிவாக்கம் ஆதிவாசிகளது வாழ்வாதாரங்களும் அவர்களது வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் ஆதிவாசிகளின் புதிய தலைமுறை நவீன வாழ்க்கையினை விரும்புவது ஆகியவற்றின் விளைவாக ஆதிவாசிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. உலக ஆதிவாசிகள் தினம் ஆகஸ்ட் ஒன்பதாம் திகதி என ஐக்கிய நாடுகள் சபை 1994 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. உலகில் வாழும் பல்வேறுபட்ட ஆதிவாசிகள் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்கள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும் உலக ஆதிவாசிகள் தினம் International Day of The World's Indigenous Peoples பெரிதும் துணைநிற்கும்.

வேடுவர் எனப்படுவோர் காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இலங்கையின் பழங்குடி மக்களான இவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மை கொண்டவர்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக காணப்பட்டாலும், அண்மைக் காலமாக சாதாரண மனிதவாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு, ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் போல்லேபெட்ட மற்றும் ஹெனனிகல, பதுளை மாவட்டத்தின் தம்பனை, பொலநறுவை மாவட்டத்தின் டலுகன மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை ஆகிய பகுதிகளில் இலங்கையின் வேடுவர் சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிறு சிறு குழுக்களாக இணைந்து வாழும் இவர்கள் இன்னமும் கோடரி, அம்பு, வில் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். இந்த வேடுவச் சமூகத்தவர்களில் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் வெளியே வந்து ஏனைய மக்களுடன் கலந்து வாழ்வதோடு உயர் கல்வியினை தொடருகின்ற போதும், ஏனையவர்கள் தங்களது கலாச்சார ரீதியிலான வழமைகளைப் பின்பற்றி வாழவே விரும்புகிறார்கள்.
எவ்வாறிருப்பினும், இலங்கையினது வேடுவர் சமூகத்தினது தொகை பெரிதும் குறைவடைந்து வருகிறது. 1921ஆம் ஆண்டு 45,010 ஆக இருந்த இவர்களது தொகை 1946ஆம் ஆண்டு 2,361ஆகக் குறைந்திருந்தது. வேடுவரின் உத்தியோகபூர்வ கிராமமாக மகியங்கனைப் பிரதேசத்தின் தம்பனை கிராமம் காணப்படுகிறது. தம்பனையில் சுமார் 350 வேடுவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்போதைய பிரதான தொழில் விவசாயமாக மாறியிருக்கிறது. மேலும் சிலர் படித்து, தொழில் புரிகின்றனர்.
ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களுக்கு நீர்வசதியினைப் பெற்றுக்கொடுப்பது, அவர்களது சிற்ப வேலைப்பாடுகளைச் சேகரித்து அவற்றைப் பாதுகாத்தல், இவர்களது கலாச்சார நிகழ்வுகளை ஊக்குவித்தல், ஆதிவாசிகளது உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆயூள்வேத சிகிச்சைமுறைகள் தொடர்பான இளந்தலைமுறையினருக்குக் கற்பிப்பதோடு இது தொடர்பான புத்தகங்களைத் தயாரித்து ஆவணப்படுத்துதல் மற்றும் இலங்கையினது ஆதிவாசிகளின் வரலாறு தொடர்பான அனைத்துச் சான்றுகளையும் கொண்டிருக்கும் நூதனசாலையினை அமைக்கும் திட்டங்களும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
ஆதிவாசிகளது மொழி மற்றும் அவர்களது வாழ்க்கை முறை ஆகியன தொடர்பில் இவர்களது இளம்தலைமுறையினருக்குக் கற்பிக்கும் வகையில் பழங்குடியின பாடசாலை மகியங்கனைப் பிரதேசத்தின் தம்பனை பகுதியில் காணப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை அழித்துவிட்டன.
சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, அந்தஸ்து இழந்து காணப்பட்ட வேடுவர்களுக்கு அந்தஸ்தளித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.
காலப் போக்கில் காடுகளின் அளவு நாகரீகம் என்ற பெயரில் குறைவடைய ஆரம்பித்ததை அடுத்து வேடுவ சமூகத்தினர் கிராமத்து மக்களைப் போன்று தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் மரங்களையும், மரக்குற்றிகளையும், பலகைகள், களிமண் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறு வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். இலுக் மற்றும் மனா என்ற புல் இனத்தைப் பயன்படுத்தி இவர்கள் அந்த வீடுகளின் கூரைகளை அமைத்தார்கள்.
கடல் வேடுவர்களின் பழைய வீடுகள் குட்டையாக தென்னம் ஓலைகளினாலும் காட்டுப் புல்லினாலும் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த வீடுகளில் ஒரு சில சமையல் பாத்திரங்களும், ஒரு பாயும், மீன் பிடிப்பதற்கான சில வலை மற்றும் தூண்டில் மாத்திரமே இருந்தன. அவர்கள் தங்கள் வீடுகளை அடுத்துள்ள களைகளை அகற்றிவிட்டு சோளம், மஞ்சள் பூசணிக்காய் போன்ற காய்கறிகளை செய்கை பண்ணினார்கள். இவை இலகுவில் வளரக்கூடிய காய்கறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேடுவர்கள் அன்று நோய்வாய்ப்பட்டு, காயமடைந்த, வயிற்றில் குட்டிகளை வைத்திருக்கும் மிருகங்களை வேட்டையாடுவதே இல்லை. தண்ணீர் குடிக்கும் மிருகங்களையோ அல்லது குட்டிகளுக்கு பாலூட்டும் மிருகங்களையோ அவர்கள் கொல்வதில்லை.
காடுகளில் உள்ள மருந்து மூலிகைகளை சேகரித்து, பாரம்பரிய மருந்து வகைகளை தயாரித்தல், கைப்பணிப் பொருட்கள், மிருகங்களின் எலும்புகள், கற்கள் மற்றும் மரங்களின் இலை, குழைகளை பயன்படுத்தி பொருட்களை தயாரிப்பது வேடுவ சமூகத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. கிழக்கிலுள்ள வேடுவர்கள் மீன்பிடி, விவசாயம், குளவிகளின் தேன் பாணியை சேகரித்தல் போன்ற பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் ஆரம்ப காலத்தில் காடுகளில் உணவை தேடியலையும் மனிதர்களாக விளங்கினார்கள். கடந்த 50 ஆண்டு காலத்தில் வேடுவர்களின் வாழ்க்கை மாறிவிட்டது. இவர்களை காடுகளில் இருந்து வெளியேற்றி கிராமங்களில் குடியமர்த்தியதும் பிரதான காரணமாகும். அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை தவிடு பொடியாவதற்கும் இதுவொரு முக்கிய காரணியாகும். இதனால் அவர்களின் பாரம்பரியமான வாழ்க்கை முறை பெரும் பாதிப்பிற்குள்ளாகியது.
கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட இவர்கள் பாரம்பரியமாக வேட்டையாடி உணவைத் தேடும் வாழ்வாதாரத்தை இழந்து, அவர்கள் சமூகத்தின் ஏனையோருடன் ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டிய ஒரு பெரும் சவாலையும் எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலை இலங்கையின் மத்தியிலுள்ள வேடுவர்களையும், கரையோரத்தில் உள்ள வேடுவர்களையும் பெரிதும் பாதித்தன. சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் செல்வாக்கும் இந்த ஆதிக்குடிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு வலுவான செல்வாக்காக மாறியது.
இலங்கையின் ஆதிவாசிகளின் மத்தியில் வாரிக சபா என்ற அமைப்பு இருந்து வருகின்றது. இந்த அமைப்புக்களின் மூலமே தங்களது பிரச்சினைகளை கலந்தாலோ சித்து தீர்மானங்களை எடுப்பர்.
இது போன்று இப்போது இலங்கையில் உள்ள வேடுவர் சமூகத்தினர் வருடம் ஒரு தடவை ஒன்றிணைந்து தங்கள் தலைவர் ஊர், குலத்தைச் சேர்ந்த தலைமையில் வாரிக சபா கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்த ஒன்றுகூடல் தம்பனையில் நடைபெற்றது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி இலங்கையில் உள்ள ஆதிவாசிகளின் பெருமளவு எண்ணிக்கையினர் இன்று கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகள் எங்களது வரலாறும் மரபுரிமையும் ஆகும். அவர்களையும் அவர்களது வாழ்க்கை முறையினையும் பேணிக்காப்பது எங்கள் அனைவரதும் கடமையாகும்.
நிஷாயா இக்பால் – பாணந்துறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக