அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

யுத்தம் முடிவுக்கு வந்ததும் மட்ட்க்களப்பில் தாண்டவமாடும் வறுமை


நாடு முன்­னேற வறு­மையினையும், அறி­யா­மை­யி­னையும் போக்க வேண்டும். இவை இரண்டும் போனா­லன்றி நாடு முன்­னே­றி­ய­தாகச் சொல்ல முடி­யாது என்­பது வறிய மக்­க­ளுக்­காக வாழ்ந்த மனித நேயமிக்க மகான் பெருந்­த­லைவர் காம­ரா­ஜரின் கருத்­தாகும். போர் நடை­பெற்ற நாடு­களில் வறுமை என்­பது தவிர்க்க முடி­யாத ஒரு விட­ய­மாகக் கொள்­ளப்­ப­டு­கின்­றது. அதிலும் ஒரு குறை­வி­ருத்தி நாட்டில் தொடர்ச்­சி­யாக முப்­பது வருடம் யுத்தம் நடை­பெற்றால் எவ்­வாறு வறுமை அதி­க­ரிக்­காமல் இருக்க முடியும்? அதிலும் போர் நடை­பெற்ற காலத்தில் மக்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத்­துக்­கான எந்­த­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளாத நிலையில் மக்­களின் வறு­மை­யினை உட­ன­டி­யாகக் குறைத்­து­விட முடி­யாது. அந்த அடிப்­ப­டை­யில்தான் போர் ஓய்ந்த பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­களின் அடிப்­ப­டையில் 2009 மற்றும் 2010இல் வறு­மையில் முத­லி­டத்­தினை மட்­டக்­க­ளப்பு மாவட்டம் கொண்­டி­ருந்­தது.



இக்­கா­லப்­ப­கு­தியில் இலங்­கையில் முழு­மை­யான யுத்தம் ஓயும் நிலை காணப்­பட்ட போதிலும் வன்­னிப்­பெ­ரு­நி­லப்­ப­கு­தியில் உள்ள மாவட்­டங்­க­ளான மன்னார், முல்­லைத்­தீவு மற்றும் கிளி­நெச்சி மாவட்­டத்­துக்­கான சரி­யான புள்­ளி­வி­ப­ரத்­தினைப் பெற்றுக் கொள்ள முடி­யாத நிலை காணப்­பட்­டது. இதன் கார­ணத்­தி­னாலோ என்­னவோ மட்­டக்­க­ளப்பு முத­லிடம் பெறும் நிலைக்கு இட்டுச் சென்­றது.

ஆனால் 2012, -2013இல் பெறப்­பட்ட புள்­ளி­வி­ப­ரத்­தின்­படி முல்­லைத்­தீவு மாவட்டம் 28.8 வீதத்­தினைப் பெற்று முத­லி­டத்­தி­னையும், மொனராகலை மாவட்டம் 20.8 வீதத்­தி­னைப்­பெற்று இரண்டாம் இடத்­தி­னையும், மன்னார் மாவட்டம் 20.1 வீதத்­தி­னைப்­பெற்று மூன்றாம் இடத்­தி­னையும் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் 19.4 வீதத்­தி­னைப்­பெற்று நான்காம் இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. இதற்­காக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வறு­மை­யினைத் தணித்­துள்ளோம் எனக் கூறு­வார்­க­ளாயின் அது தவ­றான கருத்­தாகும்.

இறுதிப் போர் ஆரம்­பிக்­கப்­பட்­டது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லாகும் அதுபோல் போருக்­கான முழு­மை­யான ஓய்வு கொடுக்­கப்­பட்டு மக்­களின் சாதா­ரண வாழ்க்­கைக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டதும் மட்­டக்­க­ளப்பு மாவட்­ட­மாகும். இதன் கார­ணத்­தி­னால்தான் 2008இல் ஏற்­பட்ட உலக பொரு­ளா­தார சிக்­கலில் இலங்கை எதிர்­நோக்­கிய மக்­க­ளுக்­கான அரிசி பற்­றாக்­கு­றை­யினை ஈடு­செய்­வ­தற்­கான பாரிய பங்­க­ளிப்­பினை மட்­டக்­க­ளப்பு மாவட்டம் வழங்­கி­யது.

யாழ்.­மா­வட்­டத்தில் யுத்தம் முடி­வ­டைந்­தாலும் இன்னும் அவர்­களின் நிலம் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­டாத நிலை­யிலும் இம் மாவட்­டத்தின் பங்­க­ளிப்பு பாரிய அளவில் அதி­க­ரித்­துள்­ளது. யாழ். மாவட்­டத்தில் 2009/2010இல் வறுமை நிலை 16.1 ஆக இருந்து 2012/2013இல் 8.3 ஆக குறை­வ­டைந்­துள்­ளது.

இம் மாவட்டம் 48 வீத வறுமைத் தணிப்­பாக உள்­ளமை ஒரு குறிப்­பி­டத்­தக்க மாற்­ற­மாகும். வறுமைத் தணிப்பில் கொழும்பு மாவட்டம் முத­லிடம் பெறு­கின்ற போதும் அடுத்­துள்ள மாவட்­ட­மாக , புத்­தள மாவட்டம் அமைந்­துள்­ளது. எனவே, இலங்­கையில் வறுமைத் தனிப்பில் மூன்­றா­வது இடத்தில் உள்ள மாவட்டம் யாழ். மாவட்­ட­மாகும் இது ஒரு விசேட அம்­ச­மாகும்.

இலங்­கையில் வறுமை கணிப்­பீட்டுப் புள்­ளி­யா­னது மூன்று வரு­டத்­துக்கு ஒரு முறை அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­ப­டு­ கின்­றது. அந்த அடிப்­ப­டையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வறுமை 2009/2010 இல் 20.3 வீதத்­தினைப் பெற்று முத­லி­டத்­தினை வகித்து 2012/2013ல் இவ் வீதம் 19.4 வீதத்­தினைப் பெற்று 4.4 வீத வறுமைத் தணிப்­பினை மேற்­கொண்­டுள்­ளது.

2013இல் மேற்­கொள்­ளப்­பட்ட 25 மாவட்­டத்தின் புள்­ளி­வி­ப­ரத்­துடன் 2010 புள்­ளி­வி­ப­ரத்­தினை ஒப்­பிட்டு நோக்­கு­கின்ற போது இலங்­கையில் வறு­மை­யினைத் தனித்த 20 மாவட்­டங்­களில் ஆகக் குறை­வான நிலையில் உள்ள மாவட்­ட­மான இரத்­தி­ன­பு­ரிக்கு அடுத்­த­ப­டி­யாக உள்ள மாவட்­ட­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்டம் உள்­ளமை ஒரு துர்­பாக்­கிய நிலை­யாகும்.

கிழக்கு மாகாண வறுமை நிலை

2012/2013இல் எடுக்­கப்­பட்ட புள்­ளி­வி­ப­ரத்­தின்­படி கிழக்கு மாகா­ணத்தில் உள்ள மாவட்­டங்­க­ளான மட்­டக்­க­ளப்பில் வறுமை 20.3 வீதமும், அம்­பா­றையில் 11.8 வீதமும், திரு­கோ­ண­ம­லையில் இவ்­வீதம் 11.7 வீத­மாகக் காணப்­பட்­டது. இவ் வறுமை வீதம் மூன்று வருட காலத்தில் பின்னர் 2012/2013ல் மேற்­கொள்­ளப்­பட்ட போது இவ்­வீதம் மட்­டக்­க­ளப்பின் வறுமை 19.4 வீதமும், அம்­பா­றையில் 5.4 வீதமும், திரு­கோ­ண­ம­லையில் இவ்­வீதம் 9.0 வீத­மாகக் காணப்­ப­டு­கின்­றது. எனவே கிழக்கு மாகா­ணத்தில் ஆகக்­கூ­டு­த­லான வறு­மை­யினை கடந்த மூன்று வரு­ட­கா­லத்தில் குறைத்த மாவட்­ட­மாக அம்­பாறை காணப்­ப­டு­கின்­றது. எனவே கிழக்கு மாகா­ணத்தின் வறுமை நிலை­யா­னது 2009/2010இல் 14.6இல் இருந்து 2012/2013இல் 11.27 ஆகக் குறை­வ­டைந்­துள்­ளமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

வடக்கு மாகாண வறுமை நிலை

கடந்த யுத்தம் கார­ண­மாக 2009/2010இல் வன்னிப் பெரு நிலப்­பி­ர­தே­சத்தில் உள்ள மூன்று மாவட்­டங்­க­ளுக்­கான புள்ளி விப­ரங்கள் எடுக்­கப்­ப­டாத நிலையில் 2012/2013இல் மேற்­கொள்­ளப்­பட்ட புள்­ளி­வி­ப­ரத்­தின்­படி வடக்கின் வறுமை 14.66 விழுக்­காட்­டினைக் காட்­டு­கின்­றது.இதில் முல்லைத் தீவில் 28.8 வீதத்­தி­னையும் மன்­னாரில் 20.1 வீதத்­தி­னையும், கிளி­நொச்­சியில் 12.7 வீதத்­தி­னையும், வவு­னி­யாவில் 3.4 வீதத்­தி­னையும் யாழ்ப்­பா­ணத்தில் 8.3 வீதத்­தி­னையும் காட்­டு­கின்­றது. இதில் வவு­னியா மாவட்­ட­த்தில் கடந்த காலத்­தி­னை­விட தற்­போது வறுமை அதி­க­ரித்­துள்­ள­தனைக் காணலாம்.

வாழ்­வா­தா­ரத்­தினை மீள

கட்­டி­ய­மைத்­துள்ள வடக்கு

கடந்த முற்­பது வருட யுத்­தம்­கா­ர­ண­மாக தங்கள் உற்­பத்திப் பொருட்­களை பெரு­வா­ரி­யாக மேற்­கொள்ளப்­ப­டாத நிலை­யிலும் இன்னும் இம் மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­டாத நிலையிலும் வடக்கு மக்கள் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் 25 வீதத்­துக்கு மேற்­பட்ட பங்­க­ளிப்­பினை வழங்கி வரு­கின்­றார்கள்.

திராட்­சைப்­பழ உற்­பத்­தியும் மரக்­கறி, சின்­ன­வெங்­காய உற்­பத்­தியும்

வடக்கின் பெயர் சொல்லும் உற்­பத்­தி­களில் திராட்­சைப்­பழ உற்­பத்­தியும் ஒன்­றாகும். இன்று நாட்டில் திராட்­சைப்­பழம் விலை குறை­வாகக் கிடைக்­கின்­றது. என்றால் அதற்கு பிர­தான காரணம் யாழ்.­மா­வட்ட உற்­பத்­தி­யாகும். இதன் கார­ண­மாக வெளி­நாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் திராட்­சைப்­ப­ழத்தின் விலை குறை­வ­டைந்­துள்­ள­மை­யினைக் காணலாம். அது போலவே தற்­போது நாட்டில் சின்­ன­வெங்­கா­யத்தின் விலை வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ள­தனைக் காணலாம். ஒரு மாவட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட சின்­ன­வெங்­கா­யத்தின் உற்­பத்தி கார­ண­மாக ஒட்டு மொத்­த­மாக நாட்டில் இந்த சின்­ன­வெங்­கா­யத்தின் விலை குறை­வ­டைந்­துள்­ள­மைக்கு இம் மாவட்­டமே கார­ண­மாகும். அதைப்போல் உரு­ளைக்­கி­ழங்கின் விலையும் நாட்டில் குறை­வ­டை­வ­தற்குக் காரணம், வடக்கின் உற்­பத்தி இன்று நாட்டின் விலை­யினைத் தீர்­மா­னிக்­கின்ற முக்­கிய கார­ணி­யாகக் கொள்­ளப்­ப­டு­கின்­றது. இதனால் விவ­சா­யிகள் பாரிய நட்­டத்­தினை எதிர்­நோக்­கு­கின்­றார்கள் என்­ப­த­னையும் நாம் குறிப்­பிட வேண்டும். இதனை இங்கு குறிப்­பி­டு­வ­தற்குக் காரணம் கடந்த முப்­பது வரு­டத்­துக்கு முன்னர் எவ்­வாறு யாழ். மக்கள் தங்கள் செயல்­பா­டு­களை மேற்­கொண்­டார்­களோ அந்த நிலைக்கு தங்­களை தயார்­ப­டுத்­தி­யுள்­ளார்கள் என்­ப­தற்­கான குறி­காட்­டி­க­ளே இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மட்­டக்­க­ளப்பின் அபி­வி­ருத்தி

போருக்குப் பின்னர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பாரிய அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் கூடு­த­லான பாலங்கள் கட்­டப்­பட்­டுள்ள மாவட்டம் மட்­டக்­க­ளப்­பாகும். அத்­தோடு மாத்­தி­மல்ல உட்­கட்­டு­மான அபி­வி­ருத்தி, மின்­சார அபி­வி­ருத்தி. நீர்­பா­சன அபி­வி­ருத்தி,குடி­நீர்­திட்டம் என பாரிய முத­லீட்­டினைக் மேற்­கொண்டு நீண்­ட­காலத் நோக்கின் அடிப்­ப­டையில் பாரிய திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. வரு­டாந்தம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துக்கு ஆறு ஆயிரம் மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட நிதி செல­வி­டப்­ப­டு­கின்­றது.அத்­தோடு இதற்கு மேலான நிதியும் செல­வி­டப்­ப­டு­கின்­றது.

இவை போக வாழ்­வா­தா­ரத்­துக்­கான பல திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் இம் மாவட்­டத்தின் வறுமை தனிப்பு போது­மா­ன­தாக காணப்­ப­டாமை வருத்தம் தரும் விட­ய­மாகும்.இதற்கு இலங்­கையில் அதி­கப்­ப­டி­யான சமுர்த்தி பய­னா­ளி­களை இங்க கொண்­டி­ருப்­பதும் ஒரு கார­ண­மாக அமை­யலாம்.

–ச.தியாகராசா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக