அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

சிறுநீர் கழிக்கச் சென்ற சிறு­வனின் அவலம்!

பெற்­றோர்­களே, இது உங்­க­ளுக்­கான ஒரு எச்­ச­ரிக்­கை­யாகும். சிறு­வர்கள் சிறுநீர் கழிக்கும் போது, இந்த அவலம் உங்கள் பிள்­ளை­க­ளுக்கும் ஏற்­ப­டலாம்!

விளை­யாட்­டுத்­தனம் மாறாத சிறு­வர்­களை பிளே ஸ்கூல், கின்டர் கார்டன் பள்­ளி­களில் சேர்த்து அவர்­களை அவஸ்­தைக்­குள்­ளாக்­கு­வது ஒரு­பு­ற­மி­ருக்க, சிறு­வர்­களின் சீரு­டை­யி­லுள்ள ஸிப் ஓர் ஆபத்­தான விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றது.



தமிழ்­நாட்டில் கோவை நகரின் பெயர் பெற்ற தனியார் பாட­சாலை அது. சில நாட்­க­ளுக்கு முன் மதிய உணவு இடை­வே­ளையின் போது, கின்டர் கார்டன் குழந்­தைகள் வகுப்­பி­லி­ருந்து பெரும் அல­றல். ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் அதிர்ந்து போய் அங்கே ஓட, காற்­சட்­டையில் இருந்து இரத்தம் வழிய யு.கே.ஜி மாணவன் தரையில் புரண்டு கதறிக் கொண்­டி­ருந்தான். அவனைத் தூக்கிப் பார்த்த போது தான் தெரிந்­தது, காற்­சட்டை ஸிப்பில் சிக்­கி­யி­ருக்கும் விடயம். சிறுநீர் கழித்து விட்டு சிறுவன் ஸிப்பை இழுத்த வேகத்தில் மென்­மை­யான தோல் பகு­தியில் ஸிப்பின் இரண்டு அடுக்­குகள் சர­ச­ர­வென ஏறி­யி­ருக்­கின்­றன. விவ­ர­ம­றி­யாத சிறுவன் பயத்தில் மேலும் வலு­வாக இழுத்­ததில் இன்­னமும் ரண­மா­கி­யி­ருக்­கி­றது. உடனே அவனைப் பாட­சாலை வாக­னத்தில் கொண்­டுபோய் ஆஸ்ப்­பத்­தி­ரியில் சேர்த்து ஒரு சத்­தி­ர­சி­கிச்­சைக்குப் பிறகு ஸிப்பை பிரித்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஒரு சம்­பவம் மட்­டு­மல்ல, இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் கோவை, பல்­லடம், திருப்பூர், நீல­கிரி, ஈரோடு சுற்று வட்­டா­ரத்தில் இதுபோல் எட்டுச் சம்­ப­வங்கள் நடந்­தி­ரு­கின்­றன. கோவையில் நடந்த இன்­னொரு சம்­ப­வத்தில் சிக்­கிய ஸிப்பை எடுக்க முயற்­சிக்­காமல் வலியில் முனங்­கிக்­கொண்டே சில மணி­நே­ரங்­களை கழித்­ததன் விளை­வாக அவ­னது சிறுநீர் உறுப்பின் முன்­ப­குதி வீங்கிச் சொல்ல முடி­யாத அவ­திக்­குள்­ளா­கி­யி­ருக்­கிறான்.

இந்த விவ­கா­ரத்தை வைத்து பொது­நல வழக்குப் போடத் தயா­ராகி வரு­கின்றார் கோவை வழக்­க­றி­ஞ­ரான லோக­நாதன்.

ஆண்­கு­ழந்­தை­க­ளுக்கு சிறுநீர் உறுப்பு எவ்­வ­ளவு சென்­சிடிவ் என்­பது சொல்லி தெரிய வேண்­டி­ய­தில்லை. ­சிறுவர்­க­ளுக்கு பக்­கு­வ­மான வயது வரும் வரைக்கும் ஸிப் வைத்த காற்­சட்டை, முழு­க்காற்­சட்டை அணி­விப்­பது கூடாது. ஆனால் கணி­ச­மான தனியார் பள்­ளிகள் தங்­க­ளோட சீரு­டையில் ஸிப் வைத்துப் தைத்து போடும்படி சொல்­வது தான் வேதனை என்­கிறார் அவர்.

பாடத்திட்டம், ஸ்கூல் டைமிங், பயிற்சி முறை என்று கல்­வித்­து­றையில் மாற்­றங்கள் கொண்டு வந்­து­விட்டோம். அப்­ப­டி­யி­ருக்கும் போது, ஆண் குழந்­தை­களின் உயிர் சம்­பத்­தப்­பட்ட விஷ­யத்தில் விளை­யாடக் கூடாது. விதி­வி­லக்­காக சில பள்­ளிகள் ஸிப் முறைக்கு தடை விதித்­தி­ருப்­பது சந்­தோசம் தான். ஆனால், சமீ­பத்தில் நடந்த சம்­ப­வங்­க­ளுக்கு காரணம் சீருடை காற்­சட்­டைகள் ஸிப் முறையில் இருந்­தது தான். காயப்­படும் குழந்­தைகள் மன­ரீ­தி­யா­கவும் பாதிக்­கப்­படும் அபாயம் உண்டு.

இது போல் பாதிக்­கப்­பட்ட என்­னு­டைய நண்­பரின் மகன் காயம் ஆறிய பிறகும் சிறுநீர் போகவே நடுங்­கு­கிறான். பாட­சாலை சீரு­டையை பார்த்தால் அழுகை, பாட­சாலைப் போக பயம் என சிக்­கல்கள் தொடர்ந்­து­கொண்டே போகின்­றது எனச் சொல்லி மன­து­டைந்து பேசினார்.

பெரிய பள்­ளி­களில் ஆயாக்கள் இருந்­தாலும் சிறுநீர் கழிக்கும் எல்லாக் குழந்­தை­க­ளுக்கும் அவர்­களால் உதவி செய்ய முடி­யாது. ஆகவே, இந்தப் பிரச்­சினைக்கு ஒரே முற்­றப்­புள்ளி அர­சாங்கம் மருத்­து­வர்கள் குழு ஒன்றை அமைத்து அவர்கள் பரிந்­து­ரைக்கும் வயது வரைக்கும் ஆண் குழந்­தை­க­ளுக்­கான சீருடை காற்­சட்­டையில் ஸிப் முறை இருக்­கவே கூடாது என்ற சட்­டத்தை கொண்­டு­வ­ர­வேண்டும். அத்­தனை தனியார் பள்­ளி­களும் அதை பின்­பற்ற வேண்டும்.

ஸிப் காற்­சட்டை விஷ­யத்தில் பள்­ளிகள் தங்­க­ளு­டைய நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்ள வேண்­டிய அதே நேரத்தில், ஒவ்­வொரு பெற்­றோரும் தங்­க­ளோட ஆண் குழந்­தைக்கு குறிப்­பிட்ட பருவம் வரை ஸிப் ரக உடை­களை வாங்­காமல் இலாஸ்டிக் உடைகள் அணி­வித்தல் மிகவும் நல்­லது என்றார்.

சிறு­வர்கள் சந்­திக்கும் இந்தச் சிக்கல் குறித்து சிறு­நீ­ரக அறுவைச் சிகிச்சை நிபு­ண­ரான டாக்டர் சக்­தி­குமார் கூறும் போது, 'குழந்­தை­க­ளுக்கு ஏற்­படும் இது போன்ற காயங்­களை ஸிப்பர் இன்­ஜூ­ரீஸ்னு சொல்­லுவொம்.

ஸிப் வைத்த காற்சட்­டைகள் உடுத்தும் குட்டிப் பசங்­க­ளுக்கு கண்­டிப்பா உள்­ளாடை போட்­டுத்தான் காட்­சட்டை போடணும். அப்­ப­டியே போட்டு விட்­டாலும் கூட சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் உள்­ளா­டையை இழுத்­து­விட்ட பிறகே ஸிப்பை போட­வேண்டும் என அவர்­க­ளுக்கு தெரி­வது இல்லை. இங்கே தான் சிக்கல் ஆரம்­பிக்­கி­றது. விளை­யாட்டுத் தனம், அவ­சரம், பிரெண்ட்ஸ் கூட ஜாலிப் பேச்­சுன்னு சட்­டுன்னு ஸிப்பை இழுத்­து­டு­வாங்க. பொதுவா உறுப்பின் தோல் பகுதி சிக்­கினால் அத தாங்க முடி­யாத வேத­னையைத் தரும்.

உறுப்பு ஸிப்பில் சிக்­கி­விட்­ட­தென்றால் உட­ன­டி­யாக சிறு­நீ­ரக அறுவைச் சிகிச்சை வைத்­தி­ய­ரிடம் கூட்­டிக்­கொண்டு செல்­ல­வேண்டும். அப்­ப­டிப்­பட்ட வசதி இல்­லை­யென்றால் ஒரு வைத்­திய நிப­ண­ரிடம் அழைத்துப் போய் தோலிலோ, சதை­யிலோ வலுவா ஏறி­யி­ருந்தா ஸிப்பை லாவ­க­மாக துண்­டித்து எடுத்­து­வி­டலாம். நீங்கள் எடுக்க முயற்சி செய்வது, பிடித்து இழுத்தல், அசைத்தல் போன்ற வேலைகளைச் செய்தால் பிரச்சினை மேலும் பெரிதாகலாம்.

பொதுவாக இரண்டாம் வகுப்பு வரை சிறுவர்களுக்கு ஸிப் வடிவிலான சீருடையை தவிர்ப்பது நல்லது. ஸிப்புக்கு பதிலாக பொத்தான், இலாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆபத்தை உணர்ந்து சில பள்ளிகள் இவ்வாறான முறைகளை மாற்றிவிட்டன. இதை மற்றப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

தகவல்: ஷண்பா

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக