அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இறு­தி­யுத்­தத்தின் போது பொட்டு அம்மான் கொல்­லப்­பட்டு விட்டார் என்கிறார் பிரிகேடியர்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுத் துறை பொறுப்­பாளர் பொட்டு அம்மான் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள செய்தி முற்­றிலும் பொய்­யா­னது. பொட்டு அம்மான் இறுதி யுத்­தத்தில் கொல்­லப்­பட்­டு­விட்டார் என்­பதை சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்க முடி­யும் என இலங்­கையின் பாது­காப்பு பிரிவு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.



தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் புல­னாய்­வுத்­துறை பொறுப்­பாளர் பொட்டு அம்மான் ஹொங்கொங் நாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலங்­கையின் இணை­யத்­தளம் ஒன்றில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு இலங்கை இரா­ணு­வத்­தினால் பல மாதங்­க­ளாக பொட்டு அம்மான் தேடப்­பட்டு வந்­த­தா­கவும் தற்­போது ஹொங்கொங் நாட்டில் வைத்து இவரை கைது செய்­துள்­ள­தா­கவும் விரைவில் இவர் இலங்கை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளா­ரெ­னவும் அவ் இணை­யத்­தளம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இதன் உறு­தித்­தன்மை தொடர்பில் இலங்கை பாது­காப்பு பிரி­விடம் வின­விய போது நகர அபி­வி­ருத்தி மற்றும் பாது­காப்பு

அமைச்சின் பணிப்­பா­ளரும் இரா­ணுவ ஊடகப் பேச்­சா­ள­ரு­மான பிரி­கே­டியர் ருவான் வணிக சூரிய இச்­செய்தி பொய்­யா­ன­தென மறுத்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரி­விக்­கையில்;

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறு­தி­யுத்­தத்தின் போது புலி­களின் புல­னாய்­வுத்­துறை பொறுப்­பாளர் பொட்டு அம்மான் கொல்­லப்­பட்டு விட்டார். இறுதி யுத்­தத்தின் போது விடு­த­லைப்­பு­லி­களின் தரப்பில் இருந்து சர­ண­டைந்­த­வர்கள் மற்றும் கைது செய்­யப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களின் உறுப்­பி­னர்கள் அவர் இறந்­துள்ளார் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அதேபோல் இவர்­களின் எவரும் வெளி­நா­டு­க­ளுக்கு செல்­ல­வில்லை என்­ப­தையும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு இருக்­கையில் பொட்டு அம்மான் ஹொங்கொங் நாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என்றும் எம்­மிடம் அவரை ஒப்­ப­டைக்கப் போகின்­றனர் எனவும் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளமை எவ்­வித உண்மைத் தன்­மையும் இல்லை. அதேபோல் இவ்­வா­றான செய்­தி­களை பரப்பும் சிலர் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். சர்வதேசத்தின் தேவைக்காகவும் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைக்காகவும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

 (ஆர்.யசி)

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக