அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

கவிஞர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு பட்டு எழுதினா அதுக்கு rhyming ஆக எப்படி எல்லாம் அர்த்தம் சொல்லறாங்க பாருங்க:

1)நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா-
மெளன ராகம் எப்படிய்யா கேக்கும் ?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?



3) வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து நடங்க, எதிர்ல லாரி வருது ?

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டா இது ? சுடு தண்ணிய மூஞ்சில ஊத்திடுவேன்.

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடு முதல்லே..

6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவாப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........
உன் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, அடி ரெண்டு போடலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
அங்கே உயிர் போயிடிச்சுனு அழுகுறாங்க உனக்கு பாட்டா?

9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......
அறிவே இல்லையா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........
சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க...

11)எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி

லிப்ட் இருக்கு இல்லை. கீழே இறங்கி வாங்க.
(இவை அனைத்தும் ரசிப்பதற்க்காகவே தவிர வேறு அல்ல )
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக