அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 5 ஜனவரி, 2015

அல்­சரும் அதன் உண்­மையும்

நேரத்திற் குச் சாப்­பி­டா­விட்டால் அல்சர் வரும் என்று உங்­க­ளுக்கு இத்­தனை நாளும் போதிக்­கப்­பட்­டுள்­ளது. அல்சர் பெரும்­பாலும் சரி­யான நேரத்­திற்குக் கடி­கா­ரத்தைப் பார்த்துச் சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கே வரு­கி­றது என்­பதைத் தெரிந்து கொள்­ளுங்கள். ஒரு பாத்­தி­ரத்தில் தயிர் சாதமோ அல்­லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதி­னைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்­போது அந்தச் சாதம் கெட்­டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்­கள்­கூட வந்­தி­ருக்­கலாம். மீண்டும் அந்தப் பாத்­தி­ரத்தை மூடி அப்­ப­டியே வைத்து விடுங்கள்.



மறு­ப­டியும் ஒரு பத்து பதி­னைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்­டுப்­போன சாதம் விஷ­மாக மாறி, அந்தப் பாத்­தி­ரத்தைப் பாதித்து ஓட்டை போட்­டி­ருப்­பதைப் பார்த்­தி­ருக்­கலாம் (இதை வீட்­டி­லேயே சோதித்துப் பாருங்கள்).

இப்­போது அல்சர் எப்­படி வந்­தது என்று உங்­களால் சுல­ப­மாகப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் நினைப்­பது போல் நேரத்­திற்குச் சாப்­பி­டா­விட்டால் அல்சர் வரும் என்­ப­தெல்லாம் தவறு. பசிக்­காமல் நேரத்­திற்குச் சாப்­பி­டும்­போது தான் அல்­சரே வரு­கி­றது. பசித்துச் சாப்­பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்­கின்­றன.

வயிற்றில் நேரத்­திற்கு அலாரம் வைத்­துக்­கொண்டு ஜீரண நீர்கள் சுரப்­ப­தில்லை. சரி­யான நேரத்­திற்குச் சுரப்­ப­தற்கு அங்கு எந்த வித­மான ஏற்­பாடும் கிடை­யாது. மனித உட­லா­னது முற்­றிலும் உணர்­வு­களால் ஆனது. உணர்­வு­களே மனித உடலை வேலை செய்யத் தூண்­டு­கின்­றன,

வேலையை முடிக்­கவும் தூண்­டு­கின்­றன. செயல்­ப­டுத்­தவும் வைக்­கின்­றன. நேரத்­திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்­போது வயிற்றில் சாப்­பாடு இல்­லை­யென்றால் அல்சர் புண் வந்­து­விடும் என்­பதும் தவறு.

நீங்கள் பசிக்­காமல் மூன்று வேளையும் சாப்­பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்­காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்­கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உரு­வாகத் துணை புரி­கி­றது.

தினம்­தோறும் இது­போன்ற செயல் தொடர்ந்து நடை­பெ­றும்­போது, கெட்­டுப்­போன உணவு விஷ­மாக மாறு­கி­றது. பாத்­தி­ரத்தில் வைத்த உணவு எப்­படி விஷ­மாக மாறு­கி­றதோ.... அப்­படி விஷ­மாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்­சரை(புண்­களை) உரு­வாக்­கு­கி­றது. ஜீரணம் கெட்­டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீர­ணிப்­ப­தற்கு அங்கு ஒன்­றுமே இல்­லாத போது அல்சர் வராது. சாப்­பி­டாமல் இருந்தால் உடல் சோர்­வ­டைந்து, சத்துக் குறை­பாடு ஏற்­பட்டு, அது சம்­பந்­த­மாக நோய்கள் வேண்­டு­மானால் வரலாம்.

அல்சர் வந்­து­விட்டால் உங்கள் உடலில் கழி­வு­களின் தேக்கம் நிறைய உள்­ளது என்­பதை அறிந்து கொள்­ளுங்கள். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக