அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இவன் எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது உங்­க­ளுக்கும் அபா­ய­க­ர­மா­னவன்



ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு சிரிய செயற்­பாட்­டாளர் எச்­ச­ரிக்கை

கைக்­குண்டு, துப்­பாக்கி மற்றும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் வழங்­கப்­பட்ட பிறப்புச் சான்­றிதழ் என்­ப­வற்­றுக்கு அருகில் புதி­தாக பிறந்த குழந்­தை­யொன்று உறங்­கு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­ட­மொன்றை அந்த தீவி­ர­வாத குழு­விற்கு எதி­ரான செயற்­பாட்­டாளர் ஒருவர் இணை­யத்­த­ளத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை மீள வெளி­யிட்டு, "இந்தக் குழந்தை எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது உங்­க­ளுக்கும் அபா­ய­மிக்­க­தாகும்" என எச்­ச­ரித்­துள்ளார்.




மேற்­படி புகைப்­படம் முதன் முத­லாக ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளா­லேயே வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த குழந்­தையின் பெயர் ஜராஹ் எனவும் அதன் தாய்­மார் பெயர் 'ஒம்' எனவும் தந்­தை­யர் பெயர் 'அபு' எனவும் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் சிரி­யாவைச் சேர்ந்த அபு வார்ட் அல்–ரக்­காவி என்ற மேற்­படி தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாட்டாளர் இந்த புகைப்படத்தை மீள வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக