அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை மகள் விடுதலை செய்யப்படவில்லை உதய சிறியின் தாய் தகவல்

ஜனா­தி­பதி எனது மக­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்­கியும் இது வரை அவர் விடு­தலை செய்­யப்­ப­டா­தது பெரும் கவ­லை­ய­ளிக்­கின்­றது என சிகி­ரியா மலையில் தனது பெயரை எழு­திய குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி உதயசிறியின் தாய் எஸ். தவ­மணி தெரி­வித்தார்.



சிகி­ரியா மலையில் தனது பெயரை எழு­திய குற்­றத்­திற்­காக அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி உதய சிறியை அவ­ரது தாய் எஸ். தவ­மணி அண்­மையில் சிறைச்­சா­லைக்குச் சென்று பார்­வை­யிட்டார்.

இதன் போது தன்னை விரை­வாக விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுங்கள் என மகள் உத­ய­சிறி தன்­னிடம் மன்­றா­டி­ய­தா­கவும் தாய் தவ­மணி குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

ஜனா­தி­பதி எனது மக­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்­கி­ய­தாக கூறியும் இதுவரை எனது மகள் உத­ய­சிறி விடு­தலை பற்றி எதுவும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக எந்­த­வொரு அறி­வித்­தலும் அநு­ரா­த­புரம் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கும் வர­வில்லை என சிறைச்­சாலை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

மகளை பார்ப்­ப­தற்­காக கடந்த வியா­ழக்­கி­ழமை அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு சென்ற போது நான் மக­ளுக்­காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொரு­ளை­யுமே உள்ளே கொண்டு செல்ல சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அனு­ம­திக்­க­வில்லை.

சவர்க்­கா­ரத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

தன்னை விரை­வாக விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுங்கள் என மகள் உத­ய­சிறி தன்­னிடம் மன்­றா­டினார் என்றும் தெரி­வித்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக