நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கிய 19ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக கட்சி பேதமின்றி 215 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்ததுடன் சுயாதீனமாக செயற்படும் ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார வாக்கெடுப்பில் நடுநிலை வகித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில்ராஜபக் ஷ, பிரேம்லால் ஜயசேகர ஜனக்கபண்டார தென்னக்கோன், ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹெலிய ரம்புக்வெல, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகிய 7 பேரும் கலந்து கொள்ளவில்லை.
சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தவிர்த்து 224 பாராளுமன்ற உறுப்பினர்களில் 215 பேர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டிருந்தபோது பொது எதிரணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பிரதான அம்சமான நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பான அதிகாரங்களை குறைத்தல் மற்றும் 17 ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களை மீளவும் ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் முக்கிய இடம் வகித்திருந்தன.
இந்த விடயங்களை உள்ளடக்கி 19 ஆவது திருத்த சட்டமூலத்தினை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பதவியேற்றிருந்தது. அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களுக்குள் 19 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தது.
ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை குறைப்பது மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவது தொடர்பிலான இந்த திருத்த சட்டமூலத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தது. 19 ஆவது திருத்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான 20 ஆவது திருத்த சட்டமூலமும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு இரு சட்டமூலங்களும் ஒரே தடவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டுமென்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக்கட்சி ஆகியனவும் இந்த திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இந்தக் கட்சிகள் அங்கம் வகித்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவான அணியினராகவே இவர்கள் செயற்பட்டு வந்தனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகித்து வருகின்றபோதிலும் இந்த இரு கட்சியினரும் 19 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டைகளையே போட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை சந்தித்து 19 ஆவது திருத்த சட்டத்தினை ஆதரிக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்தார்.
19 ஆவது திருத்த சட்டத்தின் மீதான விவாதம் நடத்தப்படுவதாக இருந்தபோதிலும், இரண்டு தடவைகள் சர்ச்சைகள் காரணமாக அந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விவாதம் நடத்தப்பட்டு பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே நாட்டின் ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வழிமுறைகளை 19 ஆவது திருத்த சட்டம் கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன ஒன்றிணைந்து ஆதரவளித்தமை வரலாற்றின் முக்கியத்துவம் பெற்ற விடயமாக அமைந்திருக்கின்றது. தற்போது ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியை நடத்தி வருகின்றனவே தவிர சகல விடயங்களிலும், இருதரப்பிற்கும் இடையே முரண்பாடுகளே அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு சூழலில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும், 19 ஆவது திருத்த சட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை உண்மையிலேயே வரவேற்கத்தக்க செயற்பாடாகவே அமைந்துள்ளது. தனது அதிகாரங்களை குறைக்கும் வகையிலான சட்ட திருத்தம் மீதான விவாதத்தினை பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆரம்பித்து வைத்தார். அத்துடன் தனது அதிகாரங்களை குறைப்பதற்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்கவேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார். இவ்வாறு ஜனாதிபதியொருவர் நடந்துகொண்டுள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது நிறைவேற்று அதிகாரங்களை இல்லாது ஒழிப்பேன் என்று உறுதி அளித்திருந்தார். இதேபோல் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதும் நிறைவேற்று அதிகாரங்கள் ஒழிக்கப்படும் என்று உறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் இவர்களது காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பாதுகாக்கப்பட்டதே தவிர எந்தவகையிலும் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் உறுதியளித்ததைப்போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய நிலையும் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் உருவாகியுள்ளது.
அத்துடன் நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் தன்னிச்சையாக கலைக்க முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கின்றது. இரண்டு தடவைகளே ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை பாராளுமன்றம் தீர்மானிக்க முடியும் என்றும் 19 ஆவது திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் 17 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 17 ஆவது திருத்த சட்டம் ஒழிக்கப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு வலுசேர்க்கும் வகையில் 18 ஆவது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்பட்டது. ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் என்ற திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது 18 ஆவது திருத்த சட்டம் இல்லாது ஒழிக்கப்பட்டு 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனநாயக விழுமியங்கள் கட்டிக்காக்கும் நிலைமை ஓரளவிற்காவது உருவாகி யிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக கட்சி பேதமின்றி 215 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்ததுடன் சுயாதீனமாக செயற்படும் ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார வாக்கெடுப்பில் நடுநிலை வகித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில்ராஜபக் ஷ, பிரேம்லால் ஜயசேகர ஜனக்கபண்டார தென்னக்கோன், ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹெலிய ரம்புக்வெல, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகிய 7 பேரும் கலந்து கொள்ளவில்லை.
சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தவிர்த்து 224 பாராளுமன்ற உறுப்பினர்களில் 215 பேர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டிருந்தபோது பொது எதிரணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பிரதான அம்சமான நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பான அதிகாரங்களை குறைத்தல் மற்றும் 17 ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களை மீளவும் ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் முக்கிய இடம் வகித்திருந்தன.
இந்த விடயங்களை உள்ளடக்கி 19 ஆவது திருத்த சட்டமூலத்தினை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பதவியேற்றிருந்தது. அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களுக்குள் 19 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தது.
ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை குறைப்பது மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவது தொடர்பிலான இந்த திருத்த சட்டமூலத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தது. 19 ஆவது திருத்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான 20 ஆவது திருத்த சட்டமூலமும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு இரு சட்டமூலங்களும் ஒரே தடவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டுமென்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக்கட்சி ஆகியனவும் இந்த திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இந்தக் கட்சிகள் அங்கம் வகித்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவான அணியினராகவே இவர்கள் செயற்பட்டு வந்தனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகித்து வருகின்றபோதிலும் இந்த இரு கட்சியினரும் 19 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டைகளையே போட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை சந்தித்து 19 ஆவது திருத்த சட்டத்தினை ஆதரிக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்தார்.
19 ஆவது திருத்த சட்டத்தின் மீதான விவாதம் நடத்தப்படுவதாக இருந்தபோதிலும், இரண்டு தடவைகள் சர்ச்சைகள் காரணமாக அந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விவாதம் நடத்தப்பட்டு பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே நாட்டின் ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வழிமுறைகளை 19 ஆவது திருத்த சட்டம் கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன ஒன்றிணைந்து ஆதரவளித்தமை வரலாற்றின் முக்கியத்துவம் பெற்ற விடயமாக அமைந்திருக்கின்றது. தற்போது ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியை நடத்தி வருகின்றனவே தவிர சகல விடயங்களிலும், இருதரப்பிற்கும் இடையே முரண்பாடுகளே அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு சூழலில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும், 19 ஆவது திருத்த சட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை உண்மையிலேயே வரவேற்கத்தக்க செயற்பாடாகவே அமைந்துள்ளது. தனது அதிகாரங்களை குறைக்கும் வகையிலான சட்ட திருத்தம் மீதான விவாதத்தினை பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆரம்பித்து வைத்தார். அத்துடன் தனது அதிகாரங்களை குறைப்பதற்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்கவேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார். இவ்வாறு ஜனாதிபதியொருவர் நடந்துகொண்டுள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது நிறைவேற்று அதிகாரங்களை இல்லாது ஒழிப்பேன் என்று உறுதி அளித்திருந்தார். இதேபோல் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதும் நிறைவேற்று அதிகாரங்கள் ஒழிக்கப்படும் என்று உறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் இவர்களது காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பாதுகாக்கப்பட்டதே தவிர எந்தவகையிலும் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் உறுதியளித்ததைப்போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய நிலையும் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் உருவாகியுள்ளது.
அத்துடன் நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் தன்னிச்சையாக கலைக்க முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கின்றது. இரண்டு தடவைகளே ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை பாராளுமன்றம் தீர்மானிக்க முடியும் என்றும் 19 ஆவது திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் 17 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 17 ஆவது திருத்த சட்டம் ஒழிக்கப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு வலுசேர்க்கும் வகையில் 18 ஆவது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்பட்டது. ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் என்ற திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது 18 ஆவது திருத்த சட்டம் இல்லாது ஒழிக்கப்பட்டு 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனநாயக விழுமியங்கள் கட்டிக்காக்கும் நிலைமை ஓரளவிற்காவது உருவாகி யிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக