உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரை உள்ள அனைத்து தொகுதிகளிலும், அதன் உறுப்புகளிலும் நாட்பட்ட பாதிப்புகளை மதுபாவனை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உள்ளெடுக்கப்படுகின்ற வாய்க்குழி, அகத்துறிஞ்சல் நடைபெறுகின்ற இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், உட்பட்ட சமிபாட்டு தொகுதியில் உள்ள முக்கிய சுரப்பிகளான ஈரல், சதையி என்பவற்றில் இதன் பாதிப்புக்கள் மிக அதிகம்.
இரத்தவாந்தி, வயிற்றோட்டம், குடற்புண், ஈரல் அழற்சி, ஈரல் கருகல் நோய் ,குறையூட்டம், விற்றமின் குறைபாடு, சதையி அழற்சி என்பன ஏற்படுகின்றன.
இரத்தவாந்தி
சமிபாட்டுத் தொகுதியில் அடங்குகின்ற வாய்குழி, குரல்வளை, களம், இரைப்பை, சிறுகுடல் பகுதிகளில் அதிக மதுபாவனையால் மயிர்துளை குழாய்களின் பாதிப்பு உடனடியாக இரத்தவாந்தியாக மாறும். அவசர மருத்துவ உதவி இல்லாமல் புறக்கணிக்கும் போது இதுவே உயிரிழப்பாகவும் மாறும்.
குறையூட்டம்
மிகக்கூடுதலாக மதுபாவிக்கின்ற ஒருவரில் அவர் உட்கொண்ட மதுவில் உள்ள உயர் கலோரிப் பெறுமானத்தால் உடல் தனது சக்தியை பெற்றுக்கொண்டதாக எடுத்துக் கொள்ளும். எனவே, மதுபாவிக்கின்ற ஒருவரில் பசியோ, உணவுத் தேவையோ அல்லது அதற்கான முன்னுரிமையோ கொடுக்கப்படுவதில்லை. காலப்போக்கில் மதுபாவித்தவர் புரத கலோரி குறையூட்டம், உடல் மெலிவு, விற்றமின் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப் படுவார். அத்துடன் மதுவின் இரசாயன செயற்பாட்டால் உட்கொள்ளும் உணவின் சமிபாடு, அகத்துறிஞ்சல் என்பனவும் பாதிக்கப்படும்.
குடற்புண்கள்
இரைப்பை, சிறுகுடல் பகுதிகளில் “எதனோல்” குடற்புண்களை ஏற்படுத்தும். மதுவிற்கு அடிமைப்பட்டவர்கள் தங்களது உடல்நிலை குறித்து அதிகம் அக்கறைப் படாததாலும், மருத்துவ உதவியை உடன் நாடாததாலும் இவை மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
சில வேளைகளில் குடற்பகுதிகளில் உட்புற குருதிப்பெருக்கு மரணத்திலும் முடிவதுண்டு.
இரைப்பை புற்றுநோய்
குடற்புண் ஏற்பட்ட இடங்களிலும், ஏனைய இரைப்பை பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மிக அதிகம்.
ஈரலில் கொழுப் பு சேமிப்பு
“எதனோலின்” ஈரல் நஞ்சு நிலை ,குறையூட்டம் என்பவற்றால் உடலின் ஏனைய உறுப்புகளில் சேமிக்கப்பட்ட கொழுப்பு அங்கிருந்து அகற்றப்பட்டு படிப்படியாக ஈரலில் சேமிக்கப்படும். மிதமான, அதிக குடி இதனை ஏற்படுத்தும். அத்துடன் இதற்கு நீண்ட நாட்கள் குடிக்க வேண்டும் என்றும் இல்லை. குறுகிய காலப்பகுதியிலேயே ஈரல் பாதிப்புக்கள் ஏற்படும்.
ஈரல் அழற்சி
“எதனோலின்” இரசாயன விளைவாக ஈரலில் ஏற்படும் மற்றுமொரு ஆபத்தான பாதிப்பு ஈரல் அழற்சியாகும். இதன் அறிகுறிகளாக பசியின்மை, ஓங்காளம், வயிற்றுக் குத்து, காய்ச்சல், மாறாட்டம் என்பன காணப்படலாம். பொது வைத்திய நிபுணரை உடன் நாடவேண்டிய தீவிர பிரச்சினையாகும். காலம் தாமதித்தால் நாட்பட்ட ஈரல் பாதிப்பாக மாறிவிடும்.
ஈரல் கருகல் நோய்
நாட்பட்ட மதுபாவனை ஈரல் கருகல் நோயை ஏற்படுத்தும். இந்நிலை மீள முடியாதது. எனவே, ஈரல் செயலிழப்பு உயிரிழப்பாக மாறும். இதுவரை ஈரல் மீள பதிந்தல் பெரிதாக வெற்றி பெறாததாலும். அதிக செலவாகின்ற ஒரு மருத்துவ சிகிச்சை என்பதாலும், ஈரல் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் மரணமடைவதே வழமை. முற்றாக ஈரல் செயலிழந்த ஒருவர் இறுதி காலங்களில் நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
ஈரல் புற்றுநோய்
ஈரல் புற்றுநோயை ஏற்படுத்தும் Hepatitis - B, Hepatitis - C வைரஸால் பறப்படும் என்பவற்றுடன் மதுபாவனையும் முக்கிய இடம்பெறுகின்றது.
களப்பகுதி இரத்த குழாய் புடைப்பு
ஈரல் கருகல் நிலைக்கு பின்னர் களப்பகுதியில் உள்ள இரத்த குழாய்கள் அதிகம் பருத்த நிலைக்கு உட்படும். இவற்றில் ஏற்படுகின்ற இரத்த அமுக்கமாற்றம் நாளடைவில் குருதிப்பெருக்காக மாறும், அவசர சத்திரசிகிச்சை இல்லை எனில் அதிக இரத்த இழப்பு உயிரிழப்பாக முடிவடையும்.
சதையச்சுரப்பி அழற்சி
நாட்பட்ட மதுபாவனையாளர்களில் சதையசுரப்பி அழற்சி ஏற்படலாம். சதையசுரப்பி சமிபாட்டு நொதியங்கள், குருதியில் வெல்ல அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் என்பனவை உட்பட ஏராளமான இரசாயனங்களை சுரப்பதால் நேரிடையாகவும். மறைமுகமாகவும் ஒரு மனிதனின் அனுசேப தொழிற்பாடுகளை குறுகிய, நாட்பட்ட அளவில் பாதிக்கும்.
சதையச்சுரப்பி புற்றுநோய்
சதையச்சுரப்பியில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் மதுபாவனையும் பிரதானமானது.
.
டாக்டர் .பா. யூடிரமேஸ் ஜெயக்குமார்
சிரேஷ்ட உளநல மருத்துவர்,
உளநலச் சேவைகள், மட்டக்களப்பு
இரத்தவாந்தி, வயிற்றோட்டம், குடற்புண், ஈரல் அழற்சி, ஈரல் கருகல் நோய் ,குறையூட்டம், விற்றமின் குறைபாடு, சதையி அழற்சி என்பன ஏற்படுகின்றன.
இரத்தவாந்தி
சமிபாட்டுத் தொகுதியில் அடங்குகின்ற வாய்குழி, குரல்வளை, களம், இரைப்பை, சிறுகுடல் பகுதிகளில் அதிக மதுபாவனையால் மயிர்துளை குழாய்களின் பாதிப்பு உடனடியாக இரத்தவாந்தியாக மாறும். அவசர மருத்துவ உதவி இல்லாமல் புறக்கணிக்கும் போது இதுவே உயிரிழப்பாகவும் மாறும்.
குறையூட்டம்
மிகக்கூடுதலாக மதுபாவிக்கின்ற ஒருவரில் அவர் உட்கொண்ட மதுவில் உள்ள உயர் கலோரிப் பெறுமானத்தால் உடல் தனது சக்தியை பெற்றுக்கொண்டதாக எடுத்துக் கொள்ளும். எனவே, மதுபாவிக்கின்ற ஒருவரில் பசியோ, உணவுத் தேவையோ அல்லது அதற்கான முன்னுரிமையோ கொடுக்கப்படுவதில்லை. காலப்போக்கில் மதுபாவித்தவர் புரத கலோரி குறையூட்டம், உடல் மெலிவு, விற்றமின் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப் படுவார். அத்துடன் மதுவின் இரசாயன செயற்பாட்டால் உட்கொள்ளும் உணவின் சமிபாடு, அகத்துறிஞ்சல் என்பனவும் பாதிக்கப்படும்.
குடற்புண்கள்
இரைப்பை, சிறுகுடல் பகுதிகளில் “எதனோல்” குடற்புண்களை ஏற்படுத்தும். மதுவிற்கு அடிமைப்பட்டவர்கள் தங்களது உடல்நிலை குறித்து அதிகம் அக்கறைப் படாததாலும், மருத்துவ உதவியை உடன் நாடாததாலும் இவை மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
சில வேளைகளில் குடற்பகுதிகளில் உட்புற குருதிப்பெருக்கு மரணத்திலும் முடிவதுண்டு.
இரைப்பை புற்றுநோய்
குடற்புண் ஏற்பட்ட இடங்களிலும், ஏனைய இரைப்பை பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மிக அதிகம்.
ஈரலில் கொழுப் பு சேமிப்பு
“எதனோலின்” ஈரல் நஞ்சு நிலை ,குறையூட்டம் என்பவற்றால் உடலின் ஏனைய உறுப்புகளில் சேமிக்கப்பட்ட கொழுப்பு அங்கிருந்து அகற்றப்பட்டு படிப்படியாக ஈரலில் சேமிக்கப்படும். மிதமான, அதிக குடி இதனை ஏற்படுத்தும். அத்துடன் இதற்கு நீண்ட நாட்கள் குடிக்க வேண்டும் என்றும் இல்லை. குறுகிய காலப்பகுதியிலேயே ஈரல் பாதிப்புக்கள் ஏற்படும்.
ஈரல் அழற்சி
“எதனோலின்” இரசாயன விளைவாக ஈரலில் ஏற்படும் மற்றுமொரு ஆபத்தான பாதிப்பு ஈரல் அழற்சியாகும். இதன் அறிகுறிகளாக பசியின்மை, ஓங்காளம், வயிற்றுக் குத்து, காய்ச்சல், மாறாட்டம் என்பன காணப்படலாம். பொது வைத்திய நிபுணரை உடன் நாடவேண்டிய தீவிர பிரச்சினையாகும். காலம் தாமதித்தால் நாட்பட்ட ஈரல் பாதிப்பாக மாறிவிடும்.
ஈரல் கருகல் நோய்
நாட்பட்ட மதுபாவனை ஈரல் கருகல் நோயை ஏற்படுத்தும். இந்நிலை மீள முடியாதது. எனவே, ஈரல் செயலிழப்பு உயிரிழப்பாக மாறும். இதுவரை ஈரல் மீள பதிந்தல் பெரிதாக வெற்றி பெறாததாலும். அதிக செலவாகின்ற ஒரு மருத்துவ சிகிச்சை என்பதாலும், ஈரல் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் மரணமடைவதே வழமை. முற்றாக ஈரல் செயலிழந்த ஒருவர் இறுதி காலங்களில் நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
ஈரல் புற்றுநோய்
ஈரல் புற்றுநோயை ஏற்படுத்தும் Hepatitis - B, Hepatitis - C வைரஸால் பறப்படும் என்பவற்றுடன் மதுபாவனையும் முக்கிய இடம்பெறுகின்றது.
களப்பகுதி இரத்த குழாய் புடைப்பு
ஈரல் கருகல் நிலைக்கு பின்னர் களப்பகுதியில் உள்ள இரத்த குழாய்கள் அதிகம் பருத்த நிலைக்கு உட்படும். இவற்றில் ஏற்படுகின்ற இரத்த அமுக்கமாற்றம் நாளடைவில் குருதிப்பெருக்காக மாறும், அவசர சத்திரசிகிச்சை இல்லை எனில் அதிக இரத்த இழப்பு உயிரிழப்பாக முடிவடையும்.
சதையச்சுரப்பி அழற்சி
நாட்பட்ட மதுபாவனையாளர்களில் சதையசுரப்பி அழற்சி ஏற்படலாம். சதையசுரப்பி சமிபாட்டு நொதியங்கள், குருதியில் வெல்ல அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் என்பனவை உட்பட ஏராளமான இரசாயனங்களை சுரப்பதால் நேரிடையாகவும். மறைமுகமாகவும் ஒரு மனிதனின் அனுசேப தொழிற்பாடுகளை குறுகிய, நாட்பட்ட அளவில் பாதிக்கும்.
சதையச்சுரப்பி புற்றுநோய்
சதையச்சுரப்பியில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் மதுபாவனையும் பிரதானமானது.
.
டாக்டர் .பா. யூடிரமேஸ் ஜெயக்குமார்
சிரேஷ்ட உளநல மருத்துவர்,
உளநலச் சேவைகள், மட்டக்களப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக