அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை துரத்தும் பசுமாடு.. நெஞ்சை நெகிழ வைக்கும் வாயில்லா ஜீவனின் பாசம்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது கன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை சரியாக இனம் கண்டு, அந்த பஸ்சை துரத்தி, வழிமறிக்கிறது இந்த பசுமாடு. வேறு எந்த வாகனத்தையும் அந்த பசுமாடு தொந்தரவு செய்வதில்லை. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடாவில் உள்ள சிர்சியில்தான் இந்த சம்பவம் தினசரி அரங்கேறுகிறது.



அந்த பஸ் வேகமாக வந்ததால்தான் கன்றுக்குட்டியின் மீது மோதி கொன்றுவிட்டதாக கருதி, அந்த பஸ்சை வேகமெடுக்க விடாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது அந்த பசுமாடு.

பசு மாடு சரியாக பஸ்சை இனம் கண்டு வழிமறிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, அந்த பஸ்சை சில நாட்கள் இயக்காமல், பஸ்சின் வண்ணத்தையே மாற்றியுள்ளனர். ஆனாலும், அந்த பஸ்சை துல்லியமாக அடையாளம் கண்டு மறிக்கிறதாம் இந்த பசுமாடு.

அந்த பஸ் கேஏ-31 எஃப்857 என்ற பதிவெண் கொண்டது. அதனை அடையாளமாக வைத்து மறிக்கிறதோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. இருப்பினும், அவ்வளவு துல்லியமாக அடையாளம் காணுமோ என்ற எண்ணமும் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அத்தோடு, தனது கன்றுக்குட்டியை கொன்ற முன்சக்கரத்தின் டயரை கொம்பாலும் குத்திக் கிழிக்க முயற்சிக்கிறதாம் அந்த பசுமாடு.

கன்றுக்குட்டியை கொன்ற இடத்தை விட்டு, அசையாமல் அதே இடத்தை சுற்றி வருகிறதாம் இந்த பசு மாடு. தனது கன்றுக்குட்டியை கொன்ற பஸ் ஓட்டுனரிடம் நீதி கேட்பது போலே இந்த சம்பவம் இருக்கிறது.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக