image source: google
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளியான தனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்டது என இராணுவ த்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இர ண்டாவது நாளாக நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி பெண் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப் பில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவிருந்த எனது கணவர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தில் சரணடைந்தார்.
நானும் எனது இரண்டு பிள்ளைகளும் அதனை நேரில் கண்டோம். அதன் பின்னர் கணவர் பற்றிய தகவல் இல்லை. இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற ஆதார புகைப்படம் என க்கு கிடைத்தது. அதில் எனது கணவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அழைத்து வருவது மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்ளது.
இராணுவத்தினர் எனது கணவரைப் பிடித்து வைத்திருந்து சித்திரவதை செய்த மைக்கான ஆதாரங்களாக இது உள்ளன. இராணுவத்தினரே கணவரை வைத்துள்ளனர்.
அவரை மீட்டுத்தாருங்கள் என கண்ணீ ருடன் சாட்சியமளித்தார். இதன்போது புகைப்படங்களை பார்த்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தனர்.
இதேவேளை சனல் 4 வெளியிட்ட புகைப்படத்தில் ஐந்தாவது நபராக இவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வலம்புரி
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளியான தனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்டது என இராணுவ த்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இர ண்டாவது நாளாக நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி பெண் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப் பில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவிருந்த எனது கணவர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தில் சரணடைந்தார்.
நானும் எனது இரண்டு பிள்ளைகளும் அதனை நேரில் கண்டோம். அதன் பின்னர் கணவர் பற்றிய தகவல் இல்லை. இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற ஆதார புகைப்படம் என க்கு கிடைத்தது. அதில் எனது கணவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அழைத்து வருவது மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்ளது.
இராணுவத்தினர் எனது கணவரைப் பிடித்து வைத்திருந்து சித்திரவதை செய்த மைக்கான ஆதாரங்களாக இது உள்ளன. இராணுவத்தினரே கணவரை வைத்துள்ளனர்.
அவரை மீட்டுத்தாருங்கள் என கண்ணீ ருடன் சாட்சியமளித்தார். இதன்போது புகைப்படங்களை பார்த்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தனர்.
இதேவேளை சனல் 4 வெளியிட்ட புகைப்படத்தில் ஐந்தாவது நபராக இவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வலம்புரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக