அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 1 பிப்ரவரி, 2014

கள்ள தொடர்பு வைத்த புலம்பெயர் பெண்ணின் பிறப்புறுப்பு சிதைப்பு!

சுவிற்சலாந்தில் சூரிச் நகரத்தை வாழ்விடமாக கொண்ட நடுத்தர வயது கிளிநொச்சி பெண் ஒருவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமைக்காக கணவானால் பிறப்புறுப்புப்ப், குதம் ஆகிய அங்கங்களில் அசிற் ஊற்றப்பட்டு உள்ளார்.

வேலைக்கு கணவன் செல்கின்ற சமயத்தில் இவர் கள்ளக் காதலனை வரவழைத்து உறவில் ஈடுபட்டு வந்து உள்ளார் என்றும் வீட்டில் இரகசிய கமரா பொருத்தி வைத்திருந்த கணவனிடம் இருவரும் வகையாக மாட்டிக் கொண்டனர் என்றும் சூரிச்சில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன.

பிள்ளைகளை பாடசாலை அனுப்பிய பிற்பாடு மனைவியை கணவன் கட்டிப் போட்டார். பின் மனைவியின் இரகசிய உறுப்புக்கள் மீது அசிற் ஊற்றி உள்ளார்.

கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்து உள்ளனர். உயிருக்காக பெண் போராடி வருகின்றார்.

பெண்ணின் கள்ளக் காதலனும் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதே பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றில் பங்காளியாக உள்ளார் என்று தெரிகின்றது.

பெண்ணின் கணவனை பொலிஸார் பிடித்து சென்று உள்ளார்கள்.


தாய்நாடு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக