அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 30 ஜூலை, 2014

232 பற்களை கொண்ட சிறுவன் அறுவைச் சிகிச்சையால் குணமடைந்தார்

மகா­ராஷ்ட்­ராவைச் சேர்ந்த சிறு­வ­னொ­ரு­வ­ருக்கு மேலதிகமாக வளர்ந்­தி­ருந்த 232 பற்­கள் அறுவை சிகிச்சை மூலம் அப்­பு­றப்­ப­டுத்தப்பட்டுள்ளது.



மகா­ராஷ்ட்ரா மாநிலம் புல்­தானா பகு­தியை சேர்ந்த சிறுவன், ஆஷிக்கி கவாய் (வயது 17). இவர், அங்­குள்ள பாட­சா­லை யில் 10 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வரு­கி­றார் கள்.

இவ­ருக்கு கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்பு தாடையில் வீக்கம் ஏற்­பட்­டது. இத னால், ஆஷிக்கி கவாய்யை கடந்த சில தினங்­க­ளுக்கு முன் அவ­ரது பெற்றோர் மும்­பையில் உள்ள அரச வைத்­தி­ய­சா­லை க்கு அழைத்து வந்தனர். அப்­போது சிறு­வனை பரி­சோ­தித்­ததில், இரு தாடை பகு­தி­யிலும் சதைப்­பற்­றுக்கு பதி­லாக 232 பற்கள் நிறைந்து காணப்­பட்­டது கண்­ட­றி­யப்­பட் ­டது.

இத­னை­ய­டுத்து, தாடை பகு­தியில் வளர்ந்­துள்ள மேலதிகமான பற்­களை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்ற முடிவு செய்­யப்­பட்டு 6 பேர் கொண்ட வைத்­திய குழு­வினர் அந்த அறுவை சிகிச்­சையை மேற்­கொண்­டு ள்­ளனர்.

6 மணி நேரம் இடம்­பெற்ற இந்த அறுவை சிகிச்­சை­யின்­போது தாடை பகு­தியில் சிறிதும், பெரி­து­மாக இருந்த 232 பற்­களும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன்­பின்னர், சிறுவன் ஆஷிக்கிகவாய், நலமடைந்­துள்­ள­தாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக