ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியும் இது வரை அவர் விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக்கின்றது என சிகிரியா மலையில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ். தவமணி தெரிவித்தார்.
சிகிரியா மலையில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதய சிறியை அவரது தாய் எஸ். தவமணி அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன் போது தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடியதாகவும் தாய் தவமணி குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இதுவரை எனது மகள் உதயசிறி விடுதலை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகளை பார்ப்பதற்காக கடந்த வியாழக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற போது நான் மகளுக்காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொருளையுமே உள்ளே கொண்டு செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
சவர்க்காரத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடினார் என்றும் தெரிவித்தார்.
சிகிரியா மலையில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதய சிறியை அவரது தாய் எஸ். தவமணி அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன் போது தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடியதாகவும் தாய் தவமணி குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இதுவரை எனது மகள் உதயசிறி விடுதலை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகளை பார்ப்பதற்காக கடந்த வியாழக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற போது நான் மகளுக்காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொருளையுமே உள்ளே கொண்டு செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
சவர்க்காரத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடினார் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக