அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

உணவகத்தில் பாவனையாளர்களின் உணவு பொருட்களுடன் இறந்த சிங்கத்தின் உடல்

பிரித்­தா­னிய உண­வ­க­மொன்றின் குளிர்­சா­த­னப்­பெட்­டியில் உண­வுப்­பொ­ருட்­க­ளுடன் இறந்த சிங்­க­மொன்றின் உடல் வைக்­கப்­பட்­டி­ருப்­பது சுற்றுச் சூழல் சுகா­தார அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யொன்றின் போது கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.



மேற்கு சஸக்­ஸி­லுள்ள சிசெஸ்டர் மாவட்ட சபையின் சுகா­தார பாது­காப்பு முகா­மை­யா­ள­ரான அயன் பிறைட்மோர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரா­லேயே இந்த அதிர்ச்­சி­யூட்டும் செயற்­பாடு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட உண­வ­கத்தின் உரி­மை­யாளர் தனது நாய்­க­ளுக்கு உண­வ­ளிப்­ப­தற்­காக அரு­கி­லி­ருந்த மிரு­கக்­காட்­சி­சா­லை­யொன்­றி­லி­ருந்து இறந்த சிங்­கத்தை அன்­ப­ளிப்­பாக பெற்­றி­ருந்தார்.

இந்­நி­லையில் அவர் அந்த சிங்­கத்தின் உடலை நீண்ட நாட்­க­ளுக்கு கெடாமல் பாது­காக்க, அதனை குளிர்­சா­த­னப்­பெட்­டியில் உண­வ­கத்­துக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பரி­மாற்­று­வ­தற்­கான உண­வு­க­ளுடன் வைத்­தி­ருந்­துள்ளார். இந்நிலையில் மேற்படி உணவகத்தை அதன் பாதுகாப்பு தொடர்பில் திருப்தி ஏற்படும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக