சனி, 4 ஜூலை, 2015

வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்

பாகம் - 1

ஸ்ரீலங்காவின் ஆற்றலும் உற்சாகமும் மிக்க வெளிவிவகார அமைச்சர் மங்கLtte fOள சமரவீர தற்சமயம் சில குறிப்பிட்ட ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஐக்கிய நாடுகள் சபையின் 1968 ஆண்டின் சட்டம் இல.45ன்படி பயங்கரவாதிகளாக நியமிக்கப் பட்டிருப்பதை மீளாய்வு செய்து மற்றும் அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்றுவதற்கான சாத்தியமான நகர்வு ஒன்றை மேற்கொள்ளுவதற்காக முன்னணியில் நிற்கிறார். வெளிநாட்டு மண்ணில் இயங்கிவரும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் வேறு 15 அமைப்புகள் என்பன வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று 2014 மார்ச்சில் வெளியான அதி விசேட வர்த்தமானி 1856ஃ41 யின்படி தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 16 அமைப்புக்களைத் தவிர, எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகள் உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஸ்ரீலங்கா உட்பட 19 நாடுகளில் வசிக்கும் மேலும் 424 பேரும் கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.



வர்த்தமானி பிரகடனத்திலுள்ள பட்டியலில் உள்ள நபர்கள், குழுக்கள், மற்றும் அமைப்புகள் என்பனவற்றை நியமித்திருப்பது, 2012ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் இல. 1, பந்தி (4) ன் உப பந்தி (2) ன்படி பிரசுரிக்கப்பட்ட, 2012, மே 15 திகதிய அதி விசேட வர்த்தமானி இல.1758ஃ19 க்கு அமையவே. இயற்கையான நபர்கள், சட்ட, நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பாக இந்த பட்டியலை நிறுவவும் மற்றும் பராமரிக்கவும் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப் பட்டிருப்பவர், அப்போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த திரு. கோட்டபாய ராஜபக்ஸ ஆவார்.

இந்த கட்டளை, பயங்கரவாதத்தை எதிர்க்கவும் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதையும் கட்டுப்படுத்துவது போன்ற உத்திகளை அமைப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையல் மேற்கொள்ளப்பட்ட பிரேரணை 1373 படி ஏற்படுத்தப் பட்டதாகும் இதில் அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டிருந்தார். ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373 கொண்டு வரப்பட்டது செப்ரம்பர் 28, 2001ல், அது 2001 செப்ரம்பர் 11ல் நியுயார்க் வர்த்தக மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் எழுச்சியினால் மேற்கொள்ளப்பட்டது.

பத்திரிகை அறிவிப்பு

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தடையை அறிவிக்கும் முகமாக கடந்த வருடம் பத்திரிகை அறிவிப்பு ஒன்றைச் செய்திருந்தது. அது பின் வருமாறு குறிப்பிடுகிறது :-

“ ஒரு கட்டளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373ன் விதிகளின்படி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் மற்றும் பயங்கரவாதத்துக்கு பணம் வழங்குவதை கட்டுப் படுத்தவும் வேண்டி ஆட்களையும் மற்றும் அமைப்புகளையும் பயங்கரவாதிகளாக நியமிக்க முடியும் மற்றும் இது வெகு விரைவில் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும்”.

இந்த உத்தரவு, நபர்கள், குழுக்கள், மற்றும் அமைப்புகள் நியாயமான அடிப்படையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புச் செய்வது, செய்ய முயற்சிப்பது, உதவி செய்வது அல்லது பங்குபற்றுவது போன்றவற்றை மேற்கொள்வதாக நம்பப்படும் பட்சத்தில் அது தொடர்பானவர்களை இனங்காண்பதற்கு பொறுப்பான தகுதியான அதிகாரியான பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது”.

“இந்த ஒழுங்குவிதிகளின் கீழ் கணிசமான தாக்கம் உள்ள ஒரு உத்தரவின்படி நியமிக்கப்பட்ட நபர்கள், அல்லது அமைப்புகளின் அனைத்து நிதிகள், சொத்துக்கள்,மற்றும் பொருளாதார வளங்கள் யாவும் அவர்கள் நியமிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் வரை முடக்கப்படும்”.

“தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி முடக்கப்பட்ட சொத்துக்களை மாற்றுவது அல்லது கையாளுவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒழுங்கு விதியில் உள்ளதின்படி முடக்கப்பட்ட சொத்துக்களைப் பற்றிய கட்டளைக்கு இணங்கத் தவறும் எந்த நபரும் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள்”.

எனவே புலம்பெயர் அமைப்புகளைத் தடை செய்யும் நடவடிக்கை தொழில்நுட்ப ரீதியாக வெளிவிவகார அல்லது வெளிநாட்டு அமைச்சின் வரம்பின் கீழ்தான் வருகிறது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எனவே இது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தில் இப்போது நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவரின் தலையீட்டு உரிமை. மேலும் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த தடைகளைப் பற்றி அவ்வப்போது மீள்பரிசீலனை செய்ய வேண்டியது அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இதற்கான விதியும் உள்ளது.

மங்கள சமரவீர

மார்ச் 2015ல் பாராளுமன்றத்தில் பேசும்போது வெளிவிவகார அமைச்சர் சமரவீர சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை மீளாய்வு செய்வதற்கு அழைப்பு விடுத்தார். ஒரு மாதத்துக்குப் பின்னர் ஏப்ரலில் 16 அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீதான மீளாய்வு நடவடிக்கை இப்போது செயற்பாட்டில் இருப்பதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த வருடம் ஜூன் ஆரம்பத்தில் மங்கள சமரவீர தடை செய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை (ஜி.ரி.எப்) பிரதிநிதிகளுடன் லண்டனில் பேச்சுக்களை நடத்தினார். இந்த வாரம் கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசும்போது, அமைச்சர் சமரவீர தான் நல்லிணக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்ததாகச் சொன்னார். சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் தனது முயற்சிக்கு உறுதியான பின்துணை வழங்குவதாக மங்கள வலியுறுத்தினார்.

“தனது இதயத்தை சரியான இடத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதர்” என நண்பர்களும் மற்றும் எதிரிகளும் ஒன்றுபோல வர்ணிக்கும் ஒரு மனிதர் மங்கள சமரவீர. இந்த எழுத்தாளர், குழப்பமான இனப் பிரச்சினையில் ஞர்னமும் முற்போக்கான எண்ணமும் கொண்ட தொலைநோக்கம் உள்ள றுகுணுவின் மைந்தன் என்று மங்களமீது தனிப்பட்ட மதிப்பு நிறைய வைத்துள்ளார். இந்த ஆற்றல் மிக்க தென்பகுதி மாத்தறையை சேர்ந்த அரசியல்வாதி பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்காவில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்குத் தான் ஓரு உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். இன ஒடுக்குமுறை பற்றி துணிச்சலாக பேசுவதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

எனினும் சரியானதை செய்யவேண்டும் என்கிற அவா மற்றும் ஆர்வம் காரணமாக மங்கள சமரவீர அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதுண்டு. தவறுகளைத் திருத்தி அதற்கான பரிகார நடவடிக்கையை உடனடியாகச் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக அடிக்கடி மங்கள ஏனைய அரசியல்வாதிகள் அடியெடுத்து வைக்க அஞ்சும் பிரதேசங்களுக்கும் வேகமாக விரைவதுண்டு. புலம்பெயர்ந்தவர்களை அணுகும் மங்கள சமரவீரவின் பாராட்டத்தக்க தற்போதைய திட்டம் கூட மகாநாம சமரவீரவின் மகன் மிகவும் எச்சரிக்கையாக அடியெடுத்து வைத்தால் சிறப்பாக மாறக்கூடிய ஒரு பிரதேசமாகும்.

மூன்று ஆலோசனைகள்

இந்த எழுத்தாளர் அமைச்சருக்கும் மற்றும் அவரது அரசாங்கத்துக்கும் மூன்று ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறார்.

முதலாவதாக – வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் செல்வதற்கு முன்பு உள்நாட்டில் வாழும் தமிழர்களிடம் செல்லுங்கள். ஸ்ரீலங்காவில் வாழுபவர்கள்தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கு முன் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். புலம்பெயர்ந்தவர்கள் மீது கவனம் சொரியப்படும் அதேவேளை அது ஸ்ரீலங்காவில் எஞ்சியிருப்பவர்களிடம் சீற்றத்தை ஏற்படுத்தும். புலம்பெயர்ந்தவர்களின் திறமைகளைப் பயன்படுத்த முயற்சிப்பதற்கு முன்னர் ஸ்ரீலங்காவிலுள்ள திறமையான ஆட்களுக்கு ஒரு நியாயமான ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். ஸ்ரீலங்காவிலுள்ள சாதாரண மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களது பண மூட்டை என்பனவற்றின் மீது கொதிப்பும் சீற்றமும் உள்ளது.

இரண்டாவதாக – எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகள் மற்றும் அனுதாபம் உள்ள தமிழ் அரசியல் அமைப்புகளை அணுகுவதற்கு மாறாக சாதாரண தமிழ் மக்களை அணுக வேண்டும். தமிழ் புலம்பெயர்ந்தவர்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் தவறாக நம்பப் படுவதைப்போல எல்.ரீ.ரீ.ஈ யினாலோ அல்லது எல்.ரீ.ரீ.ஈ சார்பு அமைப்புக்களாலோ கட்டுப்படுத்தப் படுபவர்கள் அல்ல. ஒரு சிறுபான்மைப் புலிகள் குழு, தான் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்தினாலும் யதார்த்தம் வித்தியாசமானது. அரசியல் அமைப்புக்களை கவர்ந்திழுப்பதுக்குப் பதிலாக, பழைய மாணவர் சங்கம், கிராம நலன்புரி சங்கங்கள், மத நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சபை போன்ற புலம்பெயர் நிறுவனங்களை அணுக வேண்டும்.

மூன்றாவதாக – அதற்குள் மூழ்குவதற்கு முன்னர் தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் அரசியலை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் பிரச்சினையானது ஆழமான விளைவுகளால் உந்தப்பெற்ற சிக்கலான ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள தொண்டு நிறுவன நபர்கள் அல்லது வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகள் வழங்கும் தரவுகளில் மட்டும் முற்றாகத் தங்கியிருக்கக் கூடாது. இந்தக் கூறுகள் இந்த விடயத்தில் தங்கள் தனிப்பட்ட நலன்களை கொண்டுள்ளன. புலிகள் சார்பான புலம்பெயர்ந்த அமைப்புகள் பேசும் “சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகளில் ஏமாந்து விடவேண்டாம். புலம்பெயர்ந்த அமைப்புகளின் உண்மையான பலம் மற்றும் செல்வாக்கை மதிப்பிட வேண்டும். மேலும் அமைப்புகளை ஆய்வு செய்து அந்த அமைப்பின் பெயரளவு தலைமைப் பொறுப்பில் உள்ள நபர்கள் தவிர்க்கமுடியாத பின்னடைவுகளை தாங்கக் கூடியவர்களா என்பதைக் கண்டறிய வேண்டும். சடுதியாக எழும் கட்டுப்பாடற்ற நிலைக்கு ஏற்ப செயற்படாமல் அறிவின் ஒளியுடன் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சமரவீரவின் பேச்சு என்னை ஆச்சரியப்பட வைத்தது, புலம்பெயர் அமைப்புக்களை தடைசெய்வது தொடர்பான உண்மைகளை அவர் முற்றாக ஆராய்ந்து பார்த்துள்ளாரா என்பதுதான் அதற்கான காரணம். உதாரணமாக மார்ச் 2015ல் பாராளுமன்றத்தில் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான தடையை மீளாய்வு செய்வது தொடர்பாக பேசியபோது மங்கள சமரவீர பேசியதாகச் சொல்லப்படுவது, “இந்த பட்டியல் மேற்கொள்ளப்பட்டது, ஜனாதிபதி தேர்தலை இயக்குவதற்காக எல்.ரீ.ரீ.ஈ மீள் இணைவது என்கிற வெறித்தனமான கதைக்கு பலம் சோப்பதற்காக” என்று. மங்களவின் இந்த வலியுறுத்தல் முற்றிலும் தவறானது. ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளையும் மற்றும் தனி நபர்களையும் தடைசெய்வது பற்றி நெருக்கமாக பின்தொடர்ந்து அதுபற்றி மார்ச் 2014ல் எழுதியும் உள்ளேன். “ஜனாதிபதி தேர்தலை இயக்குவதற்காக எல்.ரீ.ரீ,ஈ மீள் இணைகிறது என்கிற வெறித்தனமான கதைக்கு பலம் சேர்ப்பதற்காககத்தான் இந்த தடை மேற்கொள்ளப்பட்டது” என்கிற சமரவீரவின் கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். நான் அறிந்த வரையில் மார்ச் 2014ல் வெளியான இறுதி வர்த்தமானி அறிவித்தல், அதிகாரத்துவ தள்ளிப் போடுதலுக்காக பெரிய அளவில் தாமதிக்கப்பட்ட ஒரு மிக நீண்ட செயல்முறையின் இறுதி விளைவாகும்.

ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானம்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை பட்டியலிடுவது ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம் 1373 மற்றும் 1267 என்பனவற்றின் அடிப்படையில் ஏற்பட்டது. புலம்பெயர் அமைப்புகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கு பொருட்கள் வகையில் உதவி வழங்கி பயங்கரவாதத்தை விரிவாக்குவதாகச் சொல்லப்படும் தனிநபர்கள் தொடர்பான தடை நடவடிக்கைகள் 2008ல் ஆரம்பித்தது. அதை ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் பொருளாதார புலனாய்வுப் பிரிவினர் (எப்.ஐ.யு) சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.யு) உதவியுடன் ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் இந்த நடவடிக்கை வெளிவிவகார அமைச்சினால் தொடரப்பட்டது, சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் என்பன எப்.ஐ.யு வின் முயற்சியில் வௌ;வேறு கட்டங்களில் இணைந்து கொண்டன. பாதுகாப்பு அமைச்சு இந்த நடவடிக்கையில் 2011ல் நுழைந்தது.

இந்த தடை நடவடிக்கையுடன் தொடர்புடையதான ஒரு தொடாச்சியான இடைவிடாத வர்த்தமானி அறிவித்தல்களும் வெளிவர ஆரம்பித்தன. ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373 பற்றிய வர்த்தமானி அறிவித்தல் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலாக 15 மே 2012ல் வெளிவந்தது. அதேபோல ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1267 பற்றிய வர்த்தமானி அறிவித்தல் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலாக 31, மே 2012 ல் வெளிவந்தது. அதன் பின் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் 11, ஜூன் 2013, 16, ஆகஸ்ட் 2013, மற்றும் 23, ஜனவரி 2014, மற்றும் 13 பெப்ரவரி 2014 என தொடர்ந்து கொண்டே போனது. இறுதியான முடிவு வர்த்தமானி அறிவித்தலாக 21,மார்ச் 2014ல் வெளியானது.

எனவே இந்த தடை நடவடிக்கை நீண்ட காலம் இழுபட்ட நடவடிக்கையாக இருக்கிறதே அன்றி மங்களவினால் குற்றம் சாட்டப்பட்படி 2015 ஜனாதிபதி தேர்தலை இயக்குவதற்கான வெறிபிடித்த நடவடிக்கைக்கு பலம் சேர்ப்பதற்காக குறுகிய கால அறிவிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கையின் முறையற்ற தாமதம் 2008ல் ஆரம்பித்து 2014 ல் முடிவடைந்தது, இதற்கு அதிகாரத்திலுள்ளவர்களின் வழமையான சோம்பலே காரணம். இது பற்றி அமைச்சர் சமரவீரவுக்கு ஒன்றில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது வேண்டுமென்றே இந்த நோக்கம் தவறாகச் சொல்லப்பட்டுள்ளது, எனத் தெரிகிறது.

இந்தக் கட்டத்தில் வர்த்தமானி அறிவித்தலின்படி தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 424 தனிப்பட்டவர்களில் அடங்கும் ஒரு சிலரது பின்னணியை சுருக்கமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தொடரும்)

 பாகம் -2
 பாகம் -3
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல