சனி, 4 ஜூலை, 2015

வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல் - பாகம் - 2

பாகம் - 2

பட்டியலிடப்பட்ட தனிநபர்கள்

பட்டியலில் உள்ள 424 தனி நபர்களில் ஆண்களும் மற்றும் பெண்களும்.அடங்குவார்கள், அவாகளைப் பற்றி விசேடமாகக் குறிப்பிடுவதற்கு அந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த நபர்களில் கிட்டத்தட்ட 30 பேர் பெண்கள் அவர்கள் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இந்தியா, மலேசியா, நெதர்லாந்து, நியுசிலாந்து, நோர்வே, ஸ்ரீலங்கா, சுவீடன் சுவிட்சலாந்து, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.



தடை செய்யப்பட்டதாய் நியமனம் செய்து பட்டியலிடப்பட்டவர்கள் இடையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுய பாணி பிரதமரான விசுவநாதன் உருத்திரகுமாரன், உலகத் தமிழர் பேரவை தலைவர் வண.பிதா சீமான்பிள்ளை ஜோசப் இமானுவேல், எல்.ரீ.ரீ.ஈயின் சர்வதேசச் செயலகத்தின் தலைவர் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தலைமையகத்தின் தலைவர் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி என்கிற விநாயகம் ஆகியோர் உள்ளனர்.

இந்த நான்கு பேர்களைத் தவிர நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பட்டியலில் உள்ளனர். இவர்களில் முன்னாள் மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது பிரித்தானியாவில் வசிப்பவருமான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியும் உள்ளார். மேலும் எல்.ரீ.ரீ.ஈ யின் முக்கிய செயற்பாட்டாளர்களான பல ஐரோப்பிய நாடுகளின், தற்போதைய மற்றும் முன்னாள் நாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டு முக்கிய நபர்களான, ஸ்ரீலங்காவின் முன்னாள் தமிழர் புனர்வாழ்வு இயக்கத்தின் (ரி.ஆர்.ஓ) தலைவரான கேபி றெஜி மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் பொருளாதாரப் பிரிவான ரீடோருக்கு தலைவரான றூட் ரவி ஆகியோரே அந்த இருவர். தற்போது லண்டனில் உள்ள றூட் ரவி, பிரித்தானிய தமிழர் பேரவைக்கு பின்னாலிருக்கும் கட்டுப்பாட்டு சக்தியாகக் கருதப்படுகிறார், கேபி றெஜி ரி.ஆர். ஓ வின் நிதிமூலம் கொள்வனவு செய்யப்பட்ட பல்வேறு வருமானம் தரும் சொத்துக்களை மேற்பார்வை செய்தவாறு லண்டனுக்கும் மற்றும் ltte supportsநோர்வேக்குமாகப் பறந்து கொண்டிரக்கிறார்.

ஸ்ரீலங்கா அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இன்ரர்போல் முன்னர் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த அநேக நபர்கள் கூட வர்த்தமானி அறிவித்தல்படி நியமிக்கப்பட்ட படடியலில் உள்ளனர். இதில் ஆயுதக் கொள்வனவு செய்யும் நோக்கத்தோடு, எல்.ரீ.ரீ.ஈ யின் பெருந்தொகைப் பணத்தை தன்வசம் வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பொன்னையா ஆனந்தராஜா என்கிற ஐயா என்பவரும் அடங்குவார். ஐயா ஒரு அமெரிக்கப் பிரஜை, அமெரிக்காவின் மத்திய – மேற்கு மாநிலம் ஒன்றில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள்


தடை செய்யப்பட்ட பதினாறு அமைப்புகளும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளது:

01.தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற எல்.ரீ.ரீ.ஈ என்கிற தமிழ் புலிகள்.
02.தமிழர் புனர்வாழ்வு இயக்கம் என்கிற ரி.ஆர்.ஓ
03.தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்கிற ரி.சி.சி
04.பிரித்தானிய தமிழர் பேரவை என்கிற பி.ரி.எப்
05.உலகத் தமிழர் இயக்கம் என்கிற டபிள்யு.ரி.எம்
06.கனடிய தமிழ் காங்கிரஸ் என்கிற சி.ரி.சி
07.அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் என்கிற ஏ.ரி.சி
08.உலகத் தமிழர் பேரவை என்கிற ஜி.ரி.எப்
09.கனடிய தமிழர் தேசிய சபை என்கிற என்.சி.சி.ரி என்கிற மக்கள் அவை
10.தமிழர் தேசிய சபை என்கிற ரி.என்.சி
11.தமிழ் இழையோர் அமைப்பு என்கிற ரி.வை.ஓ
12.உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்கிற டபிள்யு.ரி.சி.சி
13.தமிழீழ நாடுகடந்த அரசாங்கம் என்கிற ரி.ஜி.ரி.ஈ
14.தமிழ் ஈழ மக்கள் மனறம் என்கிற ரி.ஈ.பி.ஏ
15.உலகத் தமிழர் நிவாரண நிதியம் என்கிற டபிள்யு.ரி.ஆர்.எப்
16.தலைமையகக் குழு என்கிற ஹெட் குவார்ட்டஸ் குரூப்

01.LIBERATION TIGERS OF TAMIL EELAM a.k.a LTTE a.k.a TAMIL TIGERS.
02. TAMIL REHABILITATION ORGANIZATION a.k.a TRO.
03. TAMIL COORDINATING COMMITTEE a.k.a TCC
04. BRITISH TAMIL FORUM a.k.a BTF
05. WORLD TAMIL MOVEMENT a.k.a WTM
06. CANADIAN TAMIL CONGRESS a.k.a CTC
07. AUSTRALIAN TAMIL CONGRESS a.k.a ATC
08. GLOBAL TAMIL FORUM a.k.a GTF
09. NATIONAL COUNCIL OF CANADIAN TAMILS a.k.a NCCT a.k.a Makkal Avai
10. TAMIL NATIONAL COUNCIL a.k.a TNC
11. TAMIL YOUTH ORGANIZATION a.k.a TYO
12. WORLD TAMIL COORDINATING COMMITTEE a.k.a WTCC.
13. TRANSNATIONAL GOVERNMENT OF TAMIL EELAM a.k.a TGTE
14. TAMIL EELAM PEOPLES ASSEMBLY a.k.a TEPA
15. WORLD TAMIL RELIEF FUND a.k.a WTRF
16. HEADQUARTERS GROUP a.k.a Head Quarters Group

சட்டப்படி தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்களில் சில ஒரு ஒற்றை நாட்டில் மட்டுமே செயற்படுகிறது எனச் சொல்லப்படும் அதேவேளை ஏனையவற்றுக்குப் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் உள்ளன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இத்தாலி, சுவிட்சலாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா என்பன இந்த நாடுகளில் உட்படும்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் குறிப்பிடத் தக்கவை விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்(ரி.ஜி.ரி.ஈ), கத்தோலிக்க மதகுருவான பிதா எஸ்.ஜே. இமானுவல் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை, மற்றும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ குழு மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகள். மற்றும் விநாயகம் என்கிற சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையிலான புலிகள் குழு ( தலைமையகக் குழு) என்பன.

தடை செய்யப்பட்ட அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த அமைப்புகள் யாவும் நான்கு பரந்த குழுக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு அவை நான்கு பிரதான நபர்களான உருத்திரகுமாரன், பிதா இமானுவல், நெடியவன் மற்றும் விநாயகம் என்பவர்களின் கீழ் ஒன்றில் கட்டுப் படுத்தப்படும் அல்லது செல்லாக்கு செலுத்தும் என நம்பின. ஸ்ரீலங்கா அராங்கம் இந்த நான்கு குழுக்களையும் ஒன்றாகச் சேர்த்து பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதை தேர்வு செய்தாலும்கூட, ஒருபுறம் உருத்திரகுமாரன் மற்றும் பிதா இமானுவல் தலைமை தாங்கும் இயக்கங்களுக்கும் மற்றும் மறுபுறம் நெடியவன் மற்றும் விநாயகம் தலைமை தாங்கும் இயக்கங்கள் இடைய மிகவும் முக்கியமான வேறுபாடுகள் இருந்தன. நான்கு முக்கிய நபர்களிடத்தும் மற்றும் அவர்கள் தலைமை தாங்கிய நிறுவனங்கள் இடையேயும் பாரிய வித்தியாசங்கள் இருந்தன.

உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் வண. பிதா இமானுவல் தலைமையிலானா உலகத் தமிழர் பேரவை என்பன - எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்புகள் இருப்பதாகச் சொல்லப்படுவதை தவிர – உலகின் பல பாகங்களிலும் வெளிப்படையாக செயலாற்றி வருகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பன பொதுவாக புலப்படும் தன்மை உள்ளதாகவும் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதுடன் சில குறிப்பிட்ட அம்சங்களில் பொறுப்புக்கூறலை பெயரளவிற்கேனும் பதிவு செய்கின்றன. நெடியவன் மற்றும் விநாயகத்தின் கீழுள்ள எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகள் அடிப்படையில் நிழலான அமைப்புகள். அமைப்பு என்கிற முகப்பின் கீழ் இரகசியமாகச் செயலாற்றுகினறன.

விசுவநாதன் உருத்திரகுமாரன்


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுயபாணி பிரதம மந்திரியான விசுவநாதன் உருத்திரகுமாரன் நியுயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு வழக்கறிஞர். அவர் முன்னாள் யாழ்ப்பாண மேயராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை (ரி.யு.எல்.எப்) சேர்ந்த இராசையா விசுவநாதனின் மகன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர், யாழ்ப்பாணத்தில் 1957 ஜூலை 6ல் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான உருத்திரகுமாரன் ஸ்ரீலங்கா சட்டக் கல்லூரியில் படித்து ஒரு சட்டத்தரணியாக சித்தி பெற்றார். பின்னர் அவர் ரெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றார். உருத்திரகுமாரன் தனது முனைவர் பட்டத்துக்காக ஹவார்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.

பொதுவாக ருத்ரா என்று குறிப்பிடப்படும் உருத்திரகுமாரன் முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச சட்ட ஆலோசகராக சேவையாற்றியுள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் ஒஸ்லோவின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுக்களில் புலிகளின் தூதுக்குழுவில் ஒரு முக்கிய ஆளாக அவர் பங்குபற்றியிருந்தார். இந்த எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகளின் விளைவாக உருத்திரகுமாரனை ஒரு பயங்கரவாதம் எனும் முப்பட்டைக் கண்ணாடி வழியாக பார்த்ததுடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் கனடா என்பனவற்றில் இவரை வரவேற்கத் தகாத ஒரு நபராகவும் கணித்தனர். நாடு கடந்த அரசாங்கம் ஒன்றின் பிரதமருக்கு நாடு கடந்த எல்லைகளை கடக்க முடியாமல் இருப்பது உண்மையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு முரண்பாடு.

எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக மே, 2009ல் தோல்வியடைந்த பின்னர் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றுகூடி, நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படும் ஒன்றை நிறுவினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (ரி.ஜி.ரி.ஈ) வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நகரங்களில நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பகிரங்க மாநாடுகளை நடத்தியுள்ளது. அது தெரிவு செய்யப்பட்ட 135 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு பாராளுமன்றம், சபாநாயகர். துணை சபாநாயகர், பிரதம மந்திரி, மூன்று துணை பிரதமர்கள் ஏழு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பத்து துணை அமைச்சர்கள் என்பனவற்றைக் கொண்ட ஒரு நிருவாகக் கட்டமைப்பு ஆகும். பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இரண்டாவது சபையும் கூட அமைக்கப் பட்டுள்ளது. தவிரவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் என்பன கிட்டத்தட்ட அதன் குறிக்கோளுக்கு கணிசமான அளவு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நெடியவன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரிவினரால் கடும் அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் பாரிய பிளவு உண்டானது, நெடியவனுக்கு விசுவாசமான பிரிவினர்கள் அதிலிருந்து கிளர்ச்சி பண்ணிப் பிரிந்து தனியான ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் புலம் பெயர்ந்தவர்களிடையே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை கிளறியது, அநேக வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் தேர்தலுக்காக பெருமளவு பணத்தையும் கூடச் செலவு செய்தார்கள். இரண்டாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் சிறிதளவு உற்சாகத்துடனேயே நடைபெற்றது. பெரும்பாலான பிரதிநிதிகள் போட்டியின்றியே தெரிவு செய்யப் பட்டார்கள். ருத்ரா திரும்பவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகத் தெரிவானார்.

வண. கலாநிதி. எஸ்.ஜே. இம்மானுவல்

உலகத் தமிழர் பேரவை(ஜி.ரி.எப்) ஒரு குடை வலையமைப்பு அதன் தலைவர். வண. கலாநிதி. சீமாம்பிள்ளை ஜோசப் இமானுவல் (பிதா.எஸ்.ஜே.இமானுவல்). 1934ல் பிறந்த பிதா.எஸ்.ஜே.இமானுவல் யாழ்ப்பாணம் கோவில் வீதியை சேர்ந்தவர். தனது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் பிதா.இமானுவல் துறவறத்துக்குள் நுழையவில்லை. அவர் 1958ல் முதலில் பௌதீக விஞ்ஞானத்தில் தனது பி.எஸ்சி பட்டத்தை பெற்று ஒரு ஆசிரியராகவும் மற்றும் பத்திரிகையாளராகவும் கடமை புரிந்தார். அவர் கத்தோலிக்க மத குருவாக மாறியது, முந்தைய நூற்றாண்டின் அறுபதுகளில். பிதா.இமானுவல் தனது பட்டப் பின்படிப்பை றோமில் உள்ள எபெனியா அவையின் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் மற்றும் இறையியலில் மேற்கொண்டு பட்டம் பெற்றார்.

பிதா.இமானுவல் யாழப்பாணம் அல்லது மன்னார் மாவட்டங்களில் ஆயராவார் எனக் கருதப்பட்டது ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. முறையே தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் ஜோசப் ராயப்பு ஆகியோர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களாக இரண்டு வௌ;வேறு சந்தர்ப்பங்களில் திருநிலைப் படுத்தப்பட்டார்கள். பிதா.இமானுவல் யாழ்ப்பாண மாவட்டத்தின் துணை ஆயர் நிலையிலுள்ள தலைமைப் போதகராகவும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பிரதான குருத்துவக் கல்லூரி அதிபராகவும் சேவையாற்றி வந்தார். அவர் ஆசிய ஆயர் மாநாட்டின் ஆலோசகராக எட்டு ஆண்டுகளாக இருந்திருப்பதுடன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள நற் சமூக மையத்தின் நிறுவன பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இராணுவம் 1995 – 96 ல்; யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றியதுடன் எஸ்.ஜே இமானுவல் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறினார். லண்டனில் சிறிது காலத்தைச் செலவிட்டதின் பின்னர், பிதா.இமானுவல 1996ல் ஜேர்மனியில் குடியேறினார். மேற்கில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்காக அவர் பரவலாக பயணங்களை மேற்கொண்டார். அவர் 2009ல் எல்.ரீ.ரீ.ஈ யின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலகத் தமிழர் பேரவையை ஸ்தாபித்தார். உலகத் தமிழர் பேரவை, அது நிறுவப்பட்ட தருணத்தில் பதினாலு வௌ;வேறு அமைப்புக்களைக் கொண்டிருந்தது. இன்று அது ஐந்தாகச் சுருங்கியுள்ளது. ஆரம்பத்தில் உலகத் தமிழர் பேரவையின் உயிர் நாடியாக இருந்தது பிரித்தானிய தமிழர் பேரவையே. பிரித்தானிய தமிழர் பேரவையின் நன்றி மிக்க உதவியினால் உலகத் தமிழர் பேரவை லண்டனில் ஒரு செயலகத்தை அமைத்துக் கொண்டது. பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் மற்றும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையில் ஒரு பிளவு தோன்றியது, அதன் பின் பிரித்தானிய தமிழர் பேரவை தனியாகச் செயல்படுகிறது. இது உலகத் தமிழர் பேரவையின் நிதி வளம் வரட்சியடைய வழி வகுத்தது.

  -  டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தொடரும்)

பாகம் -1
பாகம் -3

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல