ஞாயிறு, 5 ஜூலை, 2015

மகனைக் காணாது அழுது புலம்பும் சொறிக்கல்முனை ஏழைத்தாயார் - தேடிக்­கண்­டு­பி­டித்­து­த்­த­ரு­மாறு உருக்­க­மான வேண்­டுகோள் விடுக்­கின்றார்

தனது ஒரே மகன் இந்­தியா சென்று ஐம்­பது நாட்­க­ளா­கியும் இன்னும் எது­வித தக­வ­லு­மில்­லாமல் அன­லி­டைப்­பட்ட மெழுகு போல் வெந்து புலம்­பு­கிறார் ஓர் ஏழைத்­தாயார்.

இச்­சம்­பவம் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள சொறிக்­கல்­முனைக் கிரா­மத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கணேஷ் கபிலன் எனும் 23வயது இளை­ஞனே இவ்­விதம் காணா­மல்­போ­யுள்ளார்.



கவிதை எழு­து­வதில் ஆற்­ற­லுள்ள இவர் சினி­மாவில் பாடல் எழு­துதல் துணை­ந­டி­க­ராக நடித்தல் போன்­ற­வற்­றுக்­காக ஒரு அமைப்­பினால் இந்­தி­யா­வுக்கு அனுப்­பப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. தற்­போது விசா­ரிக்­கின்­ற­போது அப்­ப­டி­யொரு அமைப்பு இல்­லை­யென்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.இந்­த­நி­லையில் உண்­மையில் என்ன நடந்­தது என்­று­ தெ­ரி­யாமல் அந்த ஏழைக்­கு­டும்பம் தினமும் செத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

இது­பற்றி சம்­மாந்­துறைப் பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

“தனது மகனை எப்­ப­டி­யா­வது தேடிக்­கண்­டு ­பி­டித்­த­ரு­மாறு உருக்­க­மான வேண்­டு­கோளை மன்­றாட்­ட­மாக விடுக்­கின்றார்” அவர்.

தாயா­ரிடம் கேட்­ட­போது அவர் அழு­த­வண்ணம் இருந்தார்.எது­வுமே பேச முடி­யா­த­வாறு புலம்­பிக்­கொண்­டி­ருந்தார்.எனவே வீட்­டி­லுள்ள ஒரேயொ­ரு­வ­ரான கபி­லனின் தங்கை லக்­சா­யி­னிடம் கேட்டேன்.

இது தொடர்பில் அவ­ரது சகோ­தரி கணேஷ லக்­சா­யினி (வயது 22 ) கவ­லை­யுடன் கூறி­ய­தா­வது:எனது அண்ணா கபிலன் கல்­முனை இ.கி.மி.மகா­வித்­தி­யா­ல­யத்தில் உயர்­தரம் படித்து 3சி பெற்­றவர். கவிதை இலக்­கி­யத்­து­றையில் கெட்­டிக்­காரர்.குடும்­பத்­தி­லுள்ள ஒரே ஆண் வாரிசும் அவர்தான். 2014இல் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள தமிழ் அமைப்பு ஒன்று நடத்­திய கவி­தைப்­போட்­டியில் அண்ணா கலந்­து­கொண்­ட­போது 2ஆம் இடத்­தைப்­பெற்றார்.

அதன்­பின்னர் 2014.02.14ஆம் திகதி அவ்­வ­மைப்­பி­ட­மி­ருந்து கடிதம் வந்­தது. இலங்­கை­யி­லி­ருந்து அண்ணா உட்­பட மூவர் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இவர்­க­ளது ஆற்றல் திற­மை­களை மேலும் ஊக்­கு­விக்க இந்­தி­யாவில் சென்னை திரைப்படக் ­கல்­லூ­ரியில் 03மாத காலப் பயிற்சி; 2014.03.25 – 2014. 06.25 வரை நடத்­தப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் தயா­ரா­கு­மாறு அதன் தலைவர் கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தார்.

முதல் இந்­தி­யப்­ப­யணம்

அதன்­படி அண்ணா ஏனைய இரு­வ­ருடன் 2014.03.24ஆம் திகதி கொழும்பு சென்று இந்­தியா பய­ண­மானார். அங்கு இந்­தி­யாவின் 147 பேரும் இலங்­கையின் 103பேரு­மாக மொத்தம் 150பேர் பயிற்­சி­பெற்­றனர். இரு தினங்­க­ளுக்­கொ­ரு­த­டவை அவர் அங்­கி­ருந்து எம்மிடம் பேசுவார். இறு­தியில் பரீட்சையில் அண்ணா மிகத்­தி­ற­மை­யா­கச்­சித்­தி­பெற்­ற­தாக கூறி­னார்கள். ஆனால் ஒரு வரு­டத்­தின்­ பின்­னரே அதற்­கான சான்­றிதழ் வழங்­கப்­ப­டு­மெ­னவும் சொல்­லப்­பட்­டது.

பின்பு அவர் இலங்­கைக்­கு­வந்து வீடு­வந்தார். இங்கு வந்து கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் செக்­கி­யூ­றிற்றி கார்ட்­டாக சில மாதங்கள் வேலை­செய்தார். இந்­த­நி­லையில் இவ்­வ­ருடம் 25.02.2015 இல் மீண்டும் அதே திரு­மலை அமைப்பிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்­தது.

அதில் இந்­தி­யாவில் பெற்ற பயிற்சி பரீட்­சையில் திற­மை­யாக சித்­தி­பெற்­ற­மை­யினால் அண்­ணாவை சினி­மாவில் புதிய படங்­க­ளுக்கு எழு­து­வ­தற்கும் துணை­ந­டி­க­ராக நடிப்­ப­தற்கும் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ள­தா­கவும் 16.05.2015 இல் திரு­மலை அமைப்பின் த­லைவரின் அனு­ம­தி­யோடு இந்­தியா வரு­மாறும் கோரப்­பட்­டி­ருந்­தது.

இரண்­டா­வது இந்­தி­யப்­ப­யணம்!

அதற்­க­மைய 14.05.2015இல் கொழும்­பு­சென்று அலு­வல்­களை முடித்­துக்­கொண்டு 17ஆம் திகதி அதி­காலை 3.30க்கு இந்­தியா சென்றார். அவர் கொழும்பு சென்று இந்­தியா செல்லும் வரை அடிக்­கடி எம்­முடன் தொடர்­பி­லி­ருந்தார். பேசினார்.

இந்­தி­யா­சென்­ற­பின்பு அவர் கோல் பண்­ண­வில்லை.நான் அவ­ரது செல்­லி­டத்­தொ­லை­பே­சிக்கு செய்­தி­களை அனுப்­பினேன். சென்­ற­தாக போனில் காட்­டி­யது. ஆனால் அவ­ரி­ட­மி­ருந்து எவ்­வித பதிலோ தக­வலோ செய்தியோ கிடைக்­க­வில்லை.

ஆதலால் நாம் பயந்தோம் சம்­மாந்­து­றைப்­பொ­லிஸில் முறை­யிட்டோம். கிழக்­கு­மா­கா­ண­சபை உறுப்­பினர் மு. இரா­ஜேஸ்­வ­ர­னிடமும் தெரி­வித்தோம்.அவரும் பல முயற்­சி­களை எடுத்தார். திரு­மலை சென்று இவ்­வா­றான அமைப்பு தலைவர் மற்றும் கடிதம் பற்றி விசா­ரித்­த­போது அப்­ப­டி­யொரு அமைப்பு அங்­கில்லை எனத் தெரி­ய­வந்­தது. அதை­ய­றிந்­ததும் எமக்கு இன்னும் சந்­தே­கமும் கவ­லையும் பயமும் ஏற்­பட்­டது. இன்­றோடு 50 நாட்­க­ளா­கி­விட்­டது. இன்­னமும் ஒரு வித தக­வ­லு­மில்லை. அம்மா எந்­நே­ரமும் அழு­து­பு­லம்­பு­கிறார். கோழி­வ­ளர்த்து அதிலே வாழ்க்­கையை ஓட்­டிக்­கொண்­டி­ருக்­கின்றோம்.அப்­பா­வு­மில்லை. மிகவும் கவ­லை­யா­க­வுள்­ளது. யாராவது எனது அண்ணாவை தேடித்தாருங்கள். என்றார் கண்ணீருடன்.

 வீரகேசரி


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல