ஞாயிறு, 5 ஜூலை, 2015

உளச்­சோர்வு – உத­வி­யின்றேல் உயிர்­கொல்லும்

“என்ன சோர்ந்­துபோய் இருக்­கிறாய்”, முகத்தில் ஈ ஆட­வில்லை”, “முகம் காய்ஞ்சு போய் இருக்கு” “முன்­புபோல் உஷா­ராக இல்லை”, இது­போன்ற வச­னங்­களை நாம் அன்­றாட வாழ்வில் எமது உற­வி­னர்கள், நண்­பர்கள், மாண­வர்கள் போன்­றோரை காணும் போது பயன்­ப­டுத்­து­கிறோம். முகம் அதன் தோற்றம் எமது மனதின் பல்­வேறு விம்­பங்­களை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. முகத்தில் ஏற்­படும் மாற்­றங்கள் எமது சிந்­தனை, செயல், நடத்­தை­களில் வெளிக்­காட்டப் படுகின்றன. மேலே குறிப்­பிட்ட வச­னங்­களை உங்­க­ளிற்கு நன்­றாக தெரிந்த ஒரு­வரில் பிர­யோ­கிக்க வேண்டி ஏற்­பட்டால், இவ­ரிற்கு “உளச்­சோர்வு” நோய் இருக்­குமோ? என்ற அடுத்த சந்­தே­கத்தை தீர்க்க உங்­க­ளிற்கு இக்­கட்­டுரை உதவி செய்யும்.



மனச்­சோர்வு நோயின் இன்­றைய நிலை:-

உலகம் முழு­வதும் 350 மில்­லியன் மக்கள் மனச்­சோர்வு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தற்­போது நோய்­ப­ரம்­பலில் மூன்­றா­வது இடத்தில் உள்ள மனச்­சோர்வு 2030ஆம் ஆண்­ட­ளவில் முத­லா­வ­தாக வந்­து­விடும் என உலக சுகா­தார ஸ்தாபனம் எச்­ச­ரித்­துள்­ளது. வரு­டாந்தம் ஒரு மில்­லியன் மக்கள் மனச்­சோர்வு ஏற்­ப­டுத்­திய தற்­கொ­லை­களால் இறக்­கின்­றனர். அதா­வது 3000 பேர் நாளாந்தம் என்ற ஒழுங்கில் இது இடம்­பெ­று­கின்­றது. இலங்­கை­யர்கள் உல­க­ளவில் தற்­கொலை செய்­வதில் முன்­னிலை வகிக்­கி­றார்கள். நான்கில் ஒருவர், மூன்றில் ஒருவர் என்ற அளவில் மனச்­சோர்வு நோய் பரம்பல் இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது. எனவே வருமுன் காத்தல் வேண்டும்.

கடு­மை­யான மனச்­சோர்வு நோயினால் பாதிக்­கப்­பட்­டவர்­களை நீங்கள் கண்­டி­ருப்­பீர்கள். மனச்­சோர்வு மிகப் பர­வ­லாக காணப்­படும் ஒரு முக்­கிய உளநோய் ஆகும். இது சில வேளை தற்­கொ­லைக்கும் இட்­டுச்­செல்லும். மனச்­சோர்வின் குணங்­கு­றிகள் பொது­வாகப் பல்­வே­று­வி­த­மான இய­லா­மை­களாய் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அன்­புக்­கு­ரிய குடும்ப உறுப்­பினர் அல்­லது நண்பர் ஒரு­வரின் இழப்பு வீடு, சொத்து, வியா­பாரம் என்­ப­வற்றில் இழப்­புக்கள், கடும் வறுமை, வேதனை தரு­கின்ற அல்­லது ஆயுட்­கா­லத்தை குறைக்­கின்ற நாட்­பட்ட மோச­மான நோய்கள், எதிர்­பார்ப்­புகள் நிறை­வே­றாமை, கடன் பிரச்சி­னைகள் போன்­றன மனச்­சோர்­வுக்­கு­ரிய மிகப் பொது­வான கார­ணங்­க­ளாகும்.

இதை விட ஒருவர் தனது சொந்த சமு­தா­யத்­தி­லேயே மதிப்­பி­ழக்­கக்­கூ­டிய அல்­லது மற்­ற­வர்­களால் கீழ்­நி­லையில் பார்க்­கப்­ப­டக்­கூ­டிய நிலை­மை­க­ளான வேண்­டத்­த­காத கர்ப்பம், குடும்பப் பிரிவு அல்­லது விவா­க­ரத்து, வேறு ஒரு­வ­ருடன் வாழுதல், வேலையை இழத்தல், வேலையால் நிறுத்தப்படல் போன்­ற­னவும் மனச்­சோர்­வுக்கு கார­ண­மா­கலாம். இவற்றை விட பயத்­தையும், உளப்­பா­திப்­பையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நிகழ்­வு­க­ளான கற்­ப­ழிப்பு, கொள்ளை, ஆட்­க­டத்தல் போன்­ற­னவும் மனச்­சோர்வை ஏற்­ப­டுத்தும்.

இருந்­த­போதும், சில மனச் சோர்வு நோயா­ளி­களில் அதை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கக் கூடிய எந்த வித­மான கார­ணங்­க­ளையும் கண்­டு­பி­டிக்க இய­லாது இருக்கும். இவர்­களில் மனச்­சோர்வு நோயா­னது ஒரு­வி­த­மான புறக்­கா­ர­ணி­க­ளு­மின்றி தானா­கவே ஏற்­பட்­டி­ருக்கும். சாதா­ர­ண­மாக ஒரு­வ­ருக்கு ஏதா­வது ஓர் இழப்பு ஏற்­பட்டால் அவர் சிறிது காலம் கவ­லைப்­பட்டு விட்டு, பின்பு தானா­கவே அதி­லி­ருந்து மீண்டு விடுவார். அவர் மனச் சோர்வு நோயால் பாதிப்­பு­று­வ­தில்லை. ஆனால் மனச் சோர்வு நோய் ஏற்­பட்ட ஒருவர் கிழ­மைக்­க­ணக்­காக, மாதக்­க­ணக்­காக மிகவும் கவ­லை­யாக இருப்பார். வாழ்க்­கையில் எது­வுமே உத­வப்­போ­வ­தில்லை என்ற விரக்­தியில் இருப்பார். பொது­வாக அவர் தனக்கு தேவைப்­படும் உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­க­மாட்டார். எது­வுமே தனது நிைல­மையை மாற்­றப்­போ­வ­தில்லை என்றோ, தான் இவற்­றுக்­கெல்லாம் “லாயக்­கில்­லை­என்றோ” அவர் எண்­ணுவார்.

மனச் சோர்வின் பொது­வான குணங்­கு­றிகள்:-

கவ­லையில் மூழ்­கி­யி­ருத்தல், சோகத்தில் ஆழ்ந்­தி­ருத்தல், இல­குவில் அழுதல் (ஆண்கள் அழு­வது மிக­முக்­கி­ய­மா­னது), அடி­க்­கடி அழ வேண்டும் போலத் தோன்­றுதல், தொடர்ச்­சி­யாக யோசித்­த­படி இருத்தல் (யோசனை), எதிர்­கா­லத்தில் நம்­பிக்­கை­யின்மை (விரக்தி) தாழ்வு மனப்­பான்மை, தன்­னம்­பிக்கைக் குறைவு, வாழ்க்­கையில் சந்­தோ­ஷ­மின்மை (வெறுப்பு, - ஒன்­றுக்கும் விருப்­ப­மில்லை, உத­வி­யற்­ற­நிலை (கையறு நிலை), தான் பிர­யோ­ச­ன­மற்­றவர் என்ற நினைப்பு ஒன்­றுக்கும் உத­வாமல் போன நிலை, மற்­ற­வர்­க­ளுக்குச் சுமை­யாக இருத்தல், தனக்­குத்­தானே தீங்கு செய்யும் மன­நிலை, முன்பு செய்­த­வற்றைக் கூட செய்­ய­மு­டி­யாத ஆர்­வ­மின்மை, இறப்பு பற்­றிய, தற்­கொலை பற்­றிய எண்­ணங்கள் (இருந்­தென்­ன­பி­ர­யோ­சனம்) நித்­திரை குழப்பம், நித்­தி­ரை­யின்மை, பசி­யின்மை உடல் மெலிவு பாலு­றவில் நாட்­ட­மின்மை இல­குவில் களைப்­ப­டைதல், பல­வீ­ன­மாக இருத்தல் (இய­லாமை) கருத்­தூன்றல், ஞாப­க­சக்தி, என்­ப­வற்றில் குறை­பாடு (மற­திக்­குணம்) தலை­யிடி, நெஞ்சு நோ, கைகால் உளைவு, உடம்பு அடிச்சுப் போட்­ட­மா­திரி, தலையில் பாரம் ஏறி­னது போல, உடம்பு முழு­வதும் எரிதல் போல உண­ருதல் மனச்­சோர்வு நோயு­டை­ய­வர்கள் பல­வி­த­மான உடல்­மு­றைப்­பா­டு­களைக் கூறுவர். இந்த முறைப்­பா­டுகள் அநே­க­மான சந்­தர்ப்­பங்­களில், அவர்­க­ளது மனநோய் கார­ண­மா­கவே ஏற்­ப­டு­கின்­றன என்­பதை மறந்­து­வி­ட­வேண்டாம்.

உடல் உபா­தை­க­ளுடன் பொது­வைத்­தி­யரை நாடினால் அவர் “மனச்­சோர்வு நோயை” கண்­ட­றிந்து சிகிச்சை அளிப்­ப­தை­விட நோயாளி சொல்லும் உடல் சம்­மந்­தப்­பட்ட முறைப்­பா­டு­க­ளிற்கே முன்­னு­ரிமை கொடுத்து சிகிச்­சை­ய­ளிப்பார்.

சம்­பவம்:-

33 வய­து­டைய பிர­ணவன் ஓர் கட்­டிட ஒப்­பந்­த­காரர் ஆறு மாத கால­மாக, அவ­ரு­டைய “கட்­டிட ஒப்­பந்த” தொழிலில் கடும் போட்­டியும், பிரச்­ச­னையும் ஏற்­படத் தொடங்­கிற்று. அத்­துடன் “லீசிங்கில்” உழவு இயந்­திரம் ஒன்றும் வாங்­கி­யுள்ளார். மாதாந்த கட்­டுப்­ப­ணத்­தையும் அவரால் கட்ட முடி­ய­வில்லை. ஆரம்­பத்தில் இவற்றைச் சமா­ளித்து வந்த அவர், பிறகு படிப்­ப­டி­யாகச் சோர்ந்து போகத்­தோ­டங்­கினார். அவ­ருக்கு நித்­திரை வர­வில்லை, பசி­யெ­டுக்­க­வில்லை, வாழ்க்­கையில் இருந்த ஒரு பிடிப்பும் இல்­லாமல் போனது. யோசித்­துக்­கொண்டும், கவ­லைப்­பட்­டுக்­கொண்டும் இருந்தார். சில வேளை­களில் அவரை அறி­யா­ம­லேயே அழுகை அழு­கை­யாக வந்­தது. இனி என்ன செய்யப் போறன்? என்று திரும்பத் திரும்ப யோசித்தார். சில வேளை­களில் வாய்க்குள் முணு­மு­ணுப்பார். எதிர்­காலம் நம்­பிக்­கை­யற்­ற­தாயும், இருள்­ம­ய­மா­ன­தாயும் இருந்­தது. மனதில் ஒரு பயம் ஏற்­பட்­ட­ப­டியே இருந்­தது நாள­டைவில் அவ­ருக்கு தலை­வி­றைப்பு, கண் எரிவு, கை கால் குத்­து­ளைவு எனப் பல அறி­கு­றிகள் தோன்­றின. தன்­னு­டைய கோலத்­திலும், உடை­க­ளிலும் கவனம் குறைந்­தது. நாங்கள் அவரை முதலில் பார்த்­த­போது, அவர் கலைந்­த­த­லை­யு­டனும், சுருக்கம் நிறைந்த நெற்­றி­யு­டனும், சவ­ரம்­செய்­யாத முகத்­து­டனும், அழுக்­கான ஆடை­க­ளு­டனும் இருந்தார். கதைக்க விருப்­ப­மில்­லா­மல்இ எதற்கோ பயந்­த­படி, யோசித்­த­படி இருந்தார். அவ­ரது வருத்­தத்தின் கடுமை கார­ண­மாக அவர் விடு­தியில் அனு­ம­திக்­கப்­பட்டார். மிகக்­கு­றை­வான அளவில் மருந்­துகள் கொடுக்­கப்­பட்­டன, ஆத­ர­வான உள­வ­னத்­து­ணையும், சாந்­த­வ­ழி­முறைப் பயிற்­சி­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டன. ஒரு கிழ­மைக்­குள்­ளா­கவே அவ­ரது மன­நி­லையில் மாற்றம் ஏற்­ப­டத்­தொ­டங்­கிற்று. அவர் பழைய நிலை­மைக்கு வாறார் என்று “மனைவி சந்­தோ­ஷப்­பட்டார்.”

மனச் சோர்­வு­டைய ஒரு­வரை எவ்­வாறு அடை­யாளம் காணலாம்:-

அவ­ரிடம் மனச்­சோர்­வுக்­கு­ரிய குணங்­கு­றிகள் இருக்­கின்­ற­னவா என்­பதைக் கண்­டு­பி­டிக்­கவும். அவை எவ்­வ­ளவு கால­மாக இருக்­கின்­றன? அவை அவ­ரு­டைய நாளாந்த வாழ்க்­கை­யில (வீட்டில், வேலையில், படிப்பில்) பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னவா? ஒரு வரு­மா­னத்தை தேட முடி­யாமல் செய்­கின்­ற­னவா? என்­ப­தனை நோயா­ளி­யி­டமும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­டமும் விசா­ரித்­துக்­கொள்­ளவும். எந்த நிகழ்­வு­களின் தாக்­கத்­தினால் அவ­ருக்கு மனச்­சோர்வு ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்­ப­தனை நோயா­ளி­யி­டமும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரி­டமும் விசா­ரித்து அறி­யவும் .மனச்­சோர்வு நோயு­டைய சிலர் தாங்கள் கவ­லையாய் இருப்­ப­தையோ நம்­பிக்­கை­யற்று இருப்­ப­தையோ மறுக்­கக்­கூடும்.

அவர்கள் என்ன நடந்த போதும், தங்கள் மனம் நன்­றா­கவே இருப்­ப­தா­கவே கூறிக் கொள்­வார்கள். அவர்கள் பெரும்­பாலும் உடல்­சார்ந்த முறைப்­பா­டு­க­ளையே கூறு­வார்கள். மனச்­சோர்­வு­டைய வேறு சிலர் நோயின் கடு­மை­யினால் எதுவும் கதைக்­காமல், ஒன்­றி­ரண்டு முறைப்­பா­டு­களைக் கூறு­வ­துடன் நின்­று­வி­டுவர். இவர்கள் உண்­மை­யி­லேயே தங்­களைத் தாங்­களே அழித்­துக்­கொள்ளும் அள­விற்கு ஆபத்­து­மிக்­க­வர்கள். நோயா­ளி­யு­ட­னான முதற் சந்­திற்பின் போதே, அவர்­தற்­கொலை செய்யும் எண்­ணத்தில் இருக்­கி­றாரா? என்­பதை கண்­ட­றி­யவும்.

தற்­கொலை எண்­ணத்தைக் கண்­ட­றிய பின்­வரும் வினாக்­களைக் கேட்­கலாம்:-

இனி வாழு­ற­திலை பிர­யோ­ச­ன­மில்லை என்று நினைக்­கி­றீர்­களா? இப்­படி இருக்­கி­றதை விடச் சாகலாம் எண்டு விரும்­பு­றீங்­களா?” ஏதா­வது செய்து செத்­துப்­போனால் நல்­லது எண் யோசிக்­கி­றீங்­களா?” அப்­பிடி ஏதா­வது திட்­டங்கள் இருக்கா?” முந்தி அப்­பிடி ஏதேனும் செய்து பார்த்­த­னீங்­களா?”முன்பு செய்து கொண்ட தற்­கொலை முயற்­சியைப் பற்­றிக்­கேட்­ட­றி­யவும். (இது, இனி வருங்­கா­லத்தில் அவர் தற்­கொலை செய்­யக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­று­களை எதிர்வு கூறு­வ­துடன், அவர் எவ்­வா­றான முயற்­சி­களில் ஈடு­ப­டக்­கூடும் என்­கின்ற ஒரு கணிப்­பையும் உங்­க­ளுக்கு தரும்). கடும் மனச் சோர்­வு­டையோர் உண்­மை­யான தூண்­டு­தல்கள் இல்­லா­ம­லேயே பார்த்தல், கேட்டல், மணத்தல் போன்ற புல­னு­ணர்­வு­களை அனு­ப­விக்­கலாம். இவற்றை மாயப்­பு­ல­ணு­ணர்­வுகள் (Hallucinations) என அழைப்போம்.

இதனை உறுதி செய்­வ­தற்­காகப் பின்­வ­ரு­மாறு கேட்­கலாம்.சில வேளை­களில் ஒரு­வரும் இல்­லாது இருக்­கேக்­கைகே, ஆரோ உங்­க­ளோடை கதைக்­கிற மாதிரி (குரல்கள்) கேக்­கி­றதா? இப்­ப­டி­யான குரல்­களைக் கேட்கும் ஒரு­வ­ரிடம், அந்­தக்­கு­ரல்கள் அவரைத் தற்­கொலை செய்­யும்­படி கூறு­கின்­ற­னவா எனக்­கேட்­கவும். அப்­படி இருந்தால், உங்­களைத் தற்­கொ­லை­செய்யச் சொல்­லுற அந்தக் குரல்­களின் கட்­ட­ளை­களை உங்­களால் எதிர்க்க முடி­கி­றதா? என்று கேட்­கவும். மனச்­சோர்­வு­டைய சிலர் இறப்­புடன் தொடர்­பு­டைய எண்­ணங்­களால் குழப்­ப­ம­டைந்து இருப்­பார்கள். உதா­ர­ண­மாக, அவர்கள் இறந்­த­வர்­களை கனவில் காணலாம். பிரே­த­வாடை வீசு­வது போல உண­ரலாம் அல்­லது தங்­க­ளது உடம்பு படிப்­ப­டி­யாக அழிந்து போவது போல உண­ரலாம். எங்கள் குடும்­பத்­தி­னது எல்லா வித­மான துர­திஷ்­ரங்­க­ளுக்கும் நாங்­களே பொறுப்பு, எங்கள் பிள்­ளை­க­ளுக்கு ஏதோ நடக்­கப்­போ­கி­றது,

நாங்கள் பெரிய பிழை விட்டு விட்டோம். போன்ற தவ­றான, ஆனால் உறு­தி­யுடன் பேணப்­ப­டு­கின்ற போலி நம்­பிக்­கை­களை சில மனச் சோர்வு நோயு­டை­ய­வர்­களில் அவ­தா­னிக்­கலாம். இவ் வகை­பட்ட தவ­றான நம்­பிக்­கை­களை அவர் கொண்­டி­ருக்­கி­றாரா என்­ப­தைப்­பற்றி, அவர்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­களைக் கேட்­கவும். சில வேளை­களில் இவ்­வா­றான போலி நம்­பிக்­கைகள் அவ­ரது உடல் சம்­மந்­த­மா­ன­தா­கவும் இருக்­கலாம். உதா­ர­ண­மாகத் தனக்குப் புற்று நோய் வந்­து­விட்­டது என்று எந்­த­வித ஆதா­ரமும் இன்றி அவர் நம்­பலாம். தற்­கொலை எண்­ணத்­தைப்­பற்றி கேட்­பது தற்­கொ­லையை தூண்­டி­விடும் என்ற எண்ணம் தப்­பா­னது. தற்­கொலை எண்­ணத்தை அறி­யாமல் விடு­வதே தப்­பா­னது. உள­ந­லத்­துறை, மருத்­து­வத்­து­றையில் பணி­யாற்­று­கின்ற யாவரும் மறக்­காமல் எங்­க­ளது பய­னா­ளிகள்ஃ நோயா­ளி­களில் தற்­கொலை எண்ணம் இல்லை என்­பதை ஊறு­திப்­ப­டுத்திக் கொள்­ளுங்கள்.

.

எவ்­வாறு உத­வலாம்:-

நீங்கள் சந்­திக்­கின்ற அந்த நபர் தற்­கொலை செய்­யக்­கூ­டி­ய­வரா? என்று ஆராய்ந்து பார்க்­கவும். கீழ்­வரும் விட­யங்­களில் ஏதா­வது ஒன்று அல்­லது பல அவரில் இருக்­கின்­றதா? எனக் கண்­ட­றி­யவும். அப்­படி ஏதா­வது இருக்கம் பட்­சத்தில் அவர் தற்­கொலை செய்­யக்­கூ­டிய அபாயம் அதி­க­ளவு இருக்­கின்­றது எனக்­கொள்­ளலாம். ஒருவர் ஏற்­க­னவே தற்­கொலை முயற்சி ஒன்றில் ஈடு­ப­ட­டி­ருந்தால், அம்­மு­யற்சி எவ்­வ­ளவு பார­தூ­ர­மா­ன­தாக இருந்­தது. என்று கணிப்­பி­டவும், மேற்­கூ­றிய விட­யங்­களின் தொகுப்­பை­பா­வித்து, அவர் இன்­னமும் தற்­கொலை புரி­யக்­கூ­டிய ஆபத்தில் இருக்­கி­றாரா என்று மதிப்­பி­டவும்.

தற்­கொலை செய்­யக்­கூ­டிய அபாய அறி­கு­றிகள்:-

மிக அதி­க­ள­வான விரக்­தி­யோ­டி­ருத்தல், தங்­க­ளு­டைய இறப்புப் பற்றி நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மாவோ கதைத்தல் அல்­லது எழு­துதல். தற்­கொலை நோக்­கத்­திற்­காக நஞ்சு, மருந்­துக்­கு­ளி­சைகள், அலரி விதைகள் போன்­ற­வற்றை வைத்­தி­ருத்தல் அல்­லது அவை இல­குவில் கிடைக்­கக்­கூ­டிய வழி­வ­கை­களைப் பற்றிச் சிந்­தித்தல். முன்பு தற்­கொலை முயற்­சியில் ஈடு­பட்­டி­ருத்தல். அவர்­க­ளு­டைய குடும்ப உறுப்­பி­னர்கள் யாரா­வது தற்­கொலை செய்து இறந்­தி­ருத்தல். நாட்­பட்ட அல்­லது இறுதிக் கால நோய் ஒன்­றினால் பீடிக்­கப்­பட்­டி­ருத்தல். அவரைத் தடுக்­கவோ, பாது­காக்­கவோ ஒரு­வரும் இல்­லாத ஒரு தனி­மை­யான சூழ்­நி­லை­யி­லி­ருத்தல்.

மது. போதை­வஸ்து போன்­ற­வற்றைப் பாவித்தல் உண்­மை­யாக ஒன்றும் இல்­லாத போதே கேட்டல், பார்த்தல், மணத்தல் போன்­றன இருப்­ப­தாகக் கூறல் (மாயப்­பு­ல­னு­ணர்­வுகள்) தங்கள் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையோ, தங்­க­ளையோ கொல்­லக்­கூ­டிய விரி­வான திட்­டத்தை வைத்­தி­ருத்தல். தற்­கொலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் என்று நீங்கள் யாரை­யா­வது கரு­தினால், அவர் இனி அவ்­வாறு செய்­ய­மாட்டார் என்ற ஒரு நம்­பிக்கை உங்­க­ளுக்கு வரும் வரைக்கும் அவ­ரது வீட்­டிலோ அல்­லது பொது­வான ஓர் இடத்­திலோ வைத்து அவரை அவ­தா­னித்தல் அவ­சியம். அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள், நண்­பர்கள் போன்­றோரின் துணை­யோடு அவரை அவ­தா­னிக்­கவும். அவ­ருக்கு பெரும்­பாலும் வைத்­திய சிகிச்சை தேவைப்­படும். நீங்கள் அவ­ருக்கு உள­வ­ளத்­துணை அளிக்­கத்­தொ­டங்­கலாம் .இப்­ப­டி­யா­ன­வர்­களை, இயன்­ற­ளவு விரை­வாக அவர்கள் முன்னர் பார்த்து வந்த தொழில் துறை­க­ளுக்கோ அல்­லது படிப்­ப­வ­ராயின் பாட­சா­லைக்கோ போய், தங்கள் தங்கள் கரு­மங்­களில் ஈடு­படச் செய்­வது நல்­லது. அவர்கள் மனச்­சோர்வு நோயின் தாக்­கத்­தி­னால்தான் இப்­படி இருக்­கி­றார்கள் என்றும், அந்­நோ­யி­லி­ருந்து மீண்­டதும் அவர்கள் பழைய நில­மைக்கு திரும்பி விடு­வார்கள் என்றும் அவர்­க­ளுக்கும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கும் நம்­பிக்­கை­யுட்­டவும்.

சித்­தி­ர­வதை, கற்­ப­ழிப்புப் போன்­ற­வற்­றிற்கு ஆளா­ன­வர்கள் இல­குவில் மனச் சோர்­வ­டைந்து, தற்­கொலை செய்து கொள்­ளலாம். அது போல புற்று நோய், எயிட்ஸ், அங்­க­வீனம், சிறு­நீ­ரக நோய் போன்ற மாற்ற முடி­யாத நோய்கள் ஏற்­பட்ட ஒரு­வரும் இல­குவில் நம்­பிக்­கை­யி­ழந்து தற்­கொலை செய்யும் நில­மைக்கு வந்­து­வி­டலாம். இப்­ப­டி­யான நில­மை­களில், அவரை ஓர் அனு­ப­வ­மிக்க உள­வளத் துணை­யா­ள­ருடன் தொடர்­பு­ப­டுத்­தவும். அத்­துடன் அவ­ருக்குத் தேவை­யான குடும்ப, சமூ­தாய ஆத­ர­வையும் திரட்­டிக்­கொ­டுக்­கலாம். உள­நல மருத்­து­வரின் உதவி தேவைப்­பட்டால் கால­தா­ம­த­மின்றி உள­நல மருத்­து­வ­ரிடம் கொண்டு செல்­லவும்.

மனச்­சோர்வு நோய்க்­கான மருத்­து­வ­மற்ற சிகிச்­சைகள்:-

ஒரு பன்­முக ஆளுமை அணியின் ஒருங்­கி­ணைந்த சிகிச்சா முறைகள் பய­னு­டை­யவை. இனங் காணப்­பட்ட பிரச்­ச­னை­களைத் தீர்ப்­ப­தற்கு உள­வ­ளத்­துணை, பிரச்­ச­னையை தீர்ப்­ப­தற்­கான உத­விகள், சார்ந்த வழி­மு­றைகள், தளர்வுப் பயிற்­சிகள், நெருக்­கீட்டு முகா­மைத்­துவம், கோபக் கட்­டுப்­பாடு, வாழ்க்கை ஆற்­றல்கள், நாளாந்த செயற்­பா­டு­களை ஒழுங்­க­மைத்தல் என்­பன தேவைப்­படும். இவற்றை உள­வள ஆலோ­ச­கர்கள், யோகா சிகிச்­சை­யா­ளர்கள், தளர்வு பயிற்­சி­யா­ளர்கள், உள­ச­மூக சேவை­யா­ளாளர், தாதி­யார்கள், மருத்­து­வர்கள் போன்ற யாவரும் செய்­யலாம்.

உளச்­சோர்வு கோளா­றிற்­கான மருத்­துவ சிகிச்­சைகள்:-

பொது­வாக மித­மான, தீவிர உளச்­சோர்வு நோயா­ளிக்கு மாத்­தி­ரைகள், மின்வலிப்பு சிகிச்சைகள் பொறுத்தமானவை. ஆரம்ப அறிகுறிகள் கட்டுப்பாட்டிற்கு வந்தவுடன் மருத்துவ, மருத்துவமற்ற அணுகுமுறைகள் இரண்டையும் ஒருங்கினைத்து பாதிக்கப்பட்டவரை மீள்நிலைக்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்துவது மிகப்பொறுத்தமானது. அரசாங்க வைத்தியசாலையில் உள்ள உளநலப்பிரிவுகளில் இம்மருத்துவ, மருத்துவமற்ற சேவைகள் இலவசமாக கிடைக்கின்றன. சந்தேசங்களை நீண்ட நாட்களிற்கு பின் போட்டு பிழையான அனுகுமுறைகள், பராம்பரிய சிசிச்சைகளில் அதிக நாட்களை வீணடிப்பது, பாதிக்கப்பட்டவறை மீள்நிலைக்கு கொண்டுவருவதற்கு மாறாக தற்கொலைக்கே இட்டுச்செல்லும். எனவே உளநலத்துறையினருடன் உடன் தொடர்பு கொள்வதே மிகப்பயனுடைய இடையீடாகும். ‘சமூகநாணம்’ அது நாங்கள் போர்த்துக் கொள்ளும் உடை, களைந்து விட்டு ஆகவேண்டியதைச் செய்யுங்கள்.

பாவனையில் உள்ள மருந்துகள்:-

பின்வரும் மருந்துகள் உளச்சேர்வு நோய்களிற்கான சிகிச்சைகளிற்கு பொதுவாக பாவனையில் உள்ளன. மருந்துகளை தேர்வு செய்வது உளநல வைத்தியரினதும், நோயாளியினது நோய்நிலையிலும், விருப்பத்தின் பேரிலும் இடம்பெறும். Amitriptyline, Doxepine, Imipramine-இவை ஆரம்பகால உளச்சேர்வு கோளாரிற்கான மருந்துகளாகும் இன்றும் சில மருத்துவர்கள் இதனை நம்பிக்கையுடன் பாவிக்கின்றனர்.

Citalopram, Escitaiopram, Fluoxetine, Paroxetine, Sertraline Venlafaxine, Reboxetine, Mirtazapine என்பன மிக அண்மைக்களமாக பாவிக்கப்படுகின்ற மருந்துகளாகும். இவை மிக விலைகூடிய மருந்துகளாகும்.

மின்வலிப்பு சிகிச்சை தேவையை பொறுத்து உளநலமருத்துவர்களல் கொடுக்கப்படும் பெரும்பாலும் தீவிர மனச்சோர்வுடன் தற்கொலை முயற்சி, தற்கொலை எண்ணங்கள், உயிரியல் செயற்பாட்டு பாதிப்புக்கள், மகப்பேற்றிற்கு பின்னான உளச்சோர்வு என்பவற்றிற்கு மின்வலிப்பு சிகிச்சை மிகப்பயனுடையது.

டாக்டர் . பா.யூடி­ர­மேஸ் ­ஜெ­யக்­குமார்.
சிரேஷ்ட உள­நல மருத்­துவர்,
உள­ந­லச்­சே­வைகள், மட்­டக்­க­ளப்பு.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல