ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவது அவரது சுவாச ஓட்டமாகும். “மூச்சுப்போனால் எல்லாம் போச்சு" என்பார்கள். “இறுதி மூச்சுவரை இதை நான் மறக்கமாட்டேன்" என்றும் சொல்வார்கள். மூச்சை அடக்கியும் கட்டுப்டுத்தியுமே பெரிய முனிவர்கள், யோகிகள் செயற்கரும் செயல்களைச் செய்துள்ளார்கள். நீண்டகாலம் வாழ்ந்துள்ளார்கள். எமது மூச்சுக்காற்று நாம் உறங்கும்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றது.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு "சுத்தக்காற்றை நித்தமும் சவாசி" என்பது சுகாதாரப் பழமொழி. காற்றை முறைப்படி மூக்குத் துவாரங்களால் உள்ளுக்கு இழுத்து வெளியே விடுவதை "பிராணாயாமம்" என்பர். உள்ளே இழுக்கும் போது "பூரகம்", வெளிவிடும் போது "ரேசகம்", அடக்கிவைக்கும் போது "கும்பகம்", காற்றை சிறிதுநேரம் உள்ளே அடக்கி வைப்பதால் இது உடல் எங்கும் ஓடி இரத் தம் சுத்திகரிக்கப்படுகின்றது.
நாம் தூங்குதல், உணர்ச்சிவயப்படுதல், கோபப்படுதல், வேலை செய்தல் போன்ற நேரங்களில் சுவாசம் பெருமூச்சாக வெளிவருகிறது. சுவாசம் எவ்வளவு குறைவாக வெளிவருகின்றதோ அந்தளவிற்கு ஆயுளும் கூடுகிறது என்று யோகசாத்திரம் சொல்லும். திருமூலர் மூவாயிரம் வருடங்கள் இருந்து வருடத்திற்கொரு திருமந்திரமாகப் பாடினார் என்றும் சொல்லப்படுகின்றது.
மூச்சை வலதுபக்க நாசியினால் இழுத்து இடது
பக்க நாசியினால் பொதுவாக வெளிவிடவேண்டும். திரும்பவும் இடதுபக்க நாசியினால் இழுத்து வலதுபக்க நாசியினால் மெதுவாக வெளிவிடவேண்டும். வலதுபக்கம் "சூரியகலை" என்றும் இடதுபக்கம் "சந்திரக்கலை" என்றும் பெயர். சூரியநாடி, சந்திரநாடி என்றும் பெயர் சொல்வர். இரண்டிற்கும் இடையில் உளள் நாடி "சுழுமுனை நாடி" என்றும் பயிற்சியின் மூலம் அது திறந்தால் மெய்ஞானம் உண்டாகும் என்பர்.
கலைவாணியின் அம்சமாகக் கருதப்படும் ஔவையார் "ஔவைக்குறள்" என்னும் நூலிலே அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையுள்ள காலத்துள் மூச்சை பின்வருமாறு சிறிது நேரம் பயிற்சி கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
வெள்ளி, புதன், திங்கள் –- இடதுபக்கம்
செவ்வாய், சனி, ஞாயிறு -– வலதுபக்கம்
வளர்பிறை வியாழன் -– இடதுபக்கம்
தேய்பிறை வியாழன் –- வலதுபக்கம்
அதிகமாக சுவாசத்தை வெளிவிட வேண்டும்.
வலது பக்க நாசியினால் அதிகமாகசக் காற்று வெளியே போகவேண்டுமானால் "காந்திஜி" உட்காருவது போல ஒருக்களித்து இருக்கவேண்டும். அதாவது, இடது கையை நிலத்தில் ஊன்றி ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்து இடது காலின் மேல் வலது காலை வைத்து வலது கையை வலது கால் கணுக்காலில் வைத்திருந்தால் சுவாசம் மாறும். இடதுபக்கம் மாறவேண்டுமானால் வலது கையை நிலத்தில் ஊன்றி முன்பு சொன்னது போல் இருந்தால் சுவாசம் மாறும்.
நாம் ஒருவரைச் சந்திக்க செல்லும் போதும் சுவாசம் வலது பக்கமாக அதிகம் செல்லும்படியாகச் செய்து செல்ல வேண்டும். இதற்கு இடதுபக்க அக்குளில் ஒரு குடை அல்லது ஒரு புத்தகம் போன்ற ஏதாவது பொருளை வைத்துச் சென்றால் வலது பக்கம் சுவாசம் அதிகமாகச் செல்லும். பரீட்சை எழுதும் நேரமும் இடது முழங்கையை மேசையில் ஊன்றிக் கொண்டு எழுதினால் படித்ததெல்லாம் ஞாபகம் வந்து நன்றாக எழுதி வெற்றி பெற முடியும்.
இடது கையால் எழுதுகின்றவர்களுக்கு இது சிரமமாக இருக்கும். பரீட்சைக்கு நன்றாக படிப்பதோடு இப்பயிற்சியை செய்து வந்தால் நிச்சயம் வெற்றிதான். பலர் இதைக் கடைப்பிடித்து வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
“அவன் மூச்சுப்பிடித்துப் படிக்கிறான் இம்முறை வெற்றிதான்" என்று பலர் சொல்லக் கேட்டிருக் கின்றோம். “மூச்சுப்பிடித்தல்" என்பது இடைவி டாது என்று பொருள் தந்தாலும் இந்த நாடி ஓட்ட முறையைத்தான் என்றும் கருதலாம். மாணவர்க ளும் கருமங்களைச் சாதிக்க நினைக்கின்றவர்க ளும் இதை முயன்று பார்க்கலாமே.
கலாபூஷணம் சிவஸ்ரீ.க.லோகநாத குருக்கள்
ஆரோக்கியமாக வாழ்வதற்கு "சுத்தக்காற்றை நித்தமும் சவாசி" என்பது சுகாதாரப் பழமொழி. காற்றை முறைப்படி மூக்குத் துவாரங்களால் உள்ளுக்கு இழுத்து வெளியே விடுவதை "பிராணாயாமம்" என்பர். உள்ளே இழுக்கும் போது "பூரகம்", வெளிவிடும் போது "ரேசகம்", அடக்கிவைக்கும் போது "கும்பகம்", காற்றை சிறிதுநேரம் உள்ளே அடக்கி வைப்பதால் இது உடல் எங்கும் ஓடி இரத் தம் சுத்திகரிக்கப்படுகின்றது.
நாம் தூங்குதல், உணர்ச்சிவயப்படுதல், கோபப்படுதல், வேலை செய்தல் போன்ற நேரங்களில் சுவாசம் பெருமூச்சாக வெளிவருகிறது. சுவாசம் எவ்வளவு குறைவாக வெளிவருகின்றதோ அந்தளவிற்கு ஆயுளும் கூடுகிறது என்று யோகசாத்திரம் சொல்லும். திருமூலர் மூவாயிரம் வருடங்கள் இருந்து வருடத்திற்கொரு திருமந்திரமாகப் பாடினார் என்றும் சொல்லப்படுகின்றது.
மூச்சை வலதுபக்க நாசியினால் இழுத்து இடது
பக்க நாசியினால் பொதுவாக வெளிவிடவேண்டும். திரும்பவும் இடதுபக்க நாசியினால் இழுத்து வலதுபக்க நாசியினால் மெதுவாக வெளிவிடவேண்டும். வலதுபக்கம் "சூரியகலை" என்றும் இடதுபக்கம் "சந்திரக்கலை" என்றும் பெயர். சூரியநாடி, சந்திரநாடி என்றும் பெயர் சொல்வர். இரண்டிற்கும் இடையில் உளள் நாடி "சுழுமுனை நாடி" என்றும் பயிற்சியின் மூலம் அது திறந்தால் மெய்ஞானம் உண்டாகும் என்பர்.
கலைவாணியின் அம்சமாகக் கருதப்படும் ஔவையார் "ஔவைக்குறள்" என்னும் நூலிலே அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையுள்ள காலத்துள் மூச்சை பின்வருமாறு சிறிது நேரம் பயிற்சி கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
வெள்ளி, புதன், திங்கள் –- இடதுபக்கம்
செவ்வாய், சனி, ஞாயிறு -– வலதுபக்கம்
வளர்பிறை வியாழன் -– இடதுபக்கம்
தேய்பிறை வியாழன் –- வலதுபக்கம்
அதிகமாக சுவாசத்தை வெளிவிட வேண்டும்.
வலது பக்க நாசியினால் அதிகமாகசக் காற்று வெளியே போகவேண்டுமானால் "காந்திஜி" உட்காருவது போல ஒருக்களித்து இருக்கவேண்டும். அதாவது, இடது கையை நிலத்தில் ஊன்றி ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்து இடது காலின் மேல் வலது காலை வைத்து வலது கையை வலது கால் கணுக்காலில் வைத்திருந்தால் சுவாசம் மாறும். இடதுபக்கம் மாறவேண்டுமானால் வலது கையை நிலத்தில் ஊன்றி முன்பு சொன்னது போல் இருந்தால் சுவாசம் மாறும்.
நாம் ஒருவரைச் சந்திக்க செல்லும் போதும் சுவாசம் வலது பக்கமாக அதிகம் செல்லும்படியாகச் செய்து செல்ல வேண்டும். இதற்கு இடதுபக்க அக்குளில் ஒரு குடை அல்லது ஒரு புத்தகம் போன்ற ஏதாவது பொருளை வைத்துச் சென்றால் வலது பக்கம் சுவாசம் அதிகமாகச் செல்லும். பரீட்சை எழுதும் நேரமும் இடது முழங்கையை மேசையில் ஊன்றிக் கொண்டு எழுதினால் படித்ததெல்லாம் ஞாபகம் வந்து நன்றாக எழுதி வெற்றி பெற முடியும்.
இடது கையால் எழுதுகின்றவர்களுக்கு இது சிரமமாக இருக்கும். பரீட்சைக்கு நன்றாக படிப்பதோடு இப்பயிற்சியை செய்து வந்தால் நிச்சயம் வெற்றிதான். பலர் இதைக் கடைப்பிடித்து வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
“அவன் மூச்சுப்பிடித்துப் படிக்கிறான் இம்முறை வெற்றிதான்" என்று பலர் சொல்லக் கேட்டிருக் கின்றோம். “மூச்சுப்பிடித்தல்" என்பது இடைவி டாது என்று பொருள் தந்தாலும் இந்த நாடி ஓட்ட முறையைத்தான் என்றும் கருதலாம். மாணவர்க ளும் கருமங்களைச் சாதிக்க நினைக்கின்றவர்க ளும் இதை முயன்று பார்க்கலாமே.
கலாபூஷணம் சிவஸ்ரீ.க.லோகநாத குருக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக