உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளார்கள். இப்படம் 3 பாகங்களைக்கொண்டது.
இப்படம் சுமார் 1 மணிநேரம்.
இப்படத்தினை பார்க்க விரும்புபவர்கள் இப்படியே இணையத்தில் பார்க்கலாம். பின்னர் பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்குகளையும் Bookmark செய்து வைத்து பின்னர் பார்க்கலாம். இதுதான் அந்த லிங்குகள்
1) http://www.dailymotion.com/swf/x4y3iy
2) http://www.dailymotion.com/swf/x4y4n1
3) http://www.dailymotion.com/swf/x4y5vb
இப்படத்தினை டவுன்லோட் செய்து சிடியில் பதித்து உங்கள் டிவியில் பார்க்க விரும்புபவர்கள் பிவரும் லிங்குகளை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோட் செய்ய youtube downloader ஐ பயன்படுத்தி டவுன்லோட் பண்ணி கொன்வேர்ட் பண்ணிக்கொள்ளவும். TV யில் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருந்தது. நல்ல copy.
இதுதான் அந்த லிங்குகள்
http://www.dailymotion.com/video/x4y3iy_sai-baba-1_news
http://www.dailymotion.com/video/x4y4n1_sai-baba-2_news
http://www.dailymotion.com/video/x4y5vb_sai-baba-3_news
இப்படத்தினை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் BBC யினரின் ஆங்கில படப்பிரதியை பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்கில் சென்று பாருங்கள் அல்லது டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இதுதான் அந்த லிங்
http://video.google.com/videoplay?docid=-3767740320034777862
மற்றும் இப்படத்தின் BBCயின் முழு Transcript ஐயும் படித்துப்பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்பண்ணவும்.
சனி, 30 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nallathu yaar seyrankalo avankala namma tamilar kal ippadithan seyvaarkal.. . thnk panni parunka. eppadi uthavikal seythirukkar makkalukku ena. atha viddittu ippadi seyya venam
பதிலளிநீக்கு'ஒருவன் தான் செய்யும் அற்புதங்களை ஆராய்ந்து பார்க்க அனுமதி மறுப்பவன் களவாளி, அற்புதத்தை ஆராய்ந்து பார்க்கத் துணிச்சல் இல்லாதவன் ஏமாளி, ஒன்றை ஆராய்ந்து பார்க்காது அப்படியே நம்புகிறவன் முட்டாள்" என்று சொன்னவர் வேறு யாரும் அல்ல. புகழ்பெற்ற பகுத்தறிவுவாதியும் உளவியல் வல்லுனருமான டாக்டர் ஏப்ரகாம் கோவூர்.
பதிலளிநீக்குகோவூர் கடவுள் அவதாரங்களுக்கும், பேய், பில்லி சூனியம், மாயமந்திரம், செப்படி வித்தை செய்பவர்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கினார்.
கடவுள் அவதாரம் என்று கருதப்படும் சாயி பாபாவுக்கு கோவூர் சங்கிலி, மோதிரம், கடிகாரம் என்றெல்லாம் வரவழைத்துக் காட்டுகிறீர்கள, முடியுமென்றால் உங்களால் ஒரு பூசனிக்காயை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று அறைகூவல் விடுத்தார்.
கடவுள் அவதாரங்கள் என்று சொல்பவர்கள் எப்போதும் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய விபூதி, சங்கிலி, மணிக்கூடு, சிவலிங்கம் போன்றவற்றை வரவழைத்துக் காட்டுவார்களேயொழிய பூசனிக்காய் போன்ற பருமனான பொருளை வரவழைத்துக் காட்டுவது கிடையாது. காட்டவும் முடியாது.
கொஞ்சக் காலத்துக்கு முன் தில்லியில் சாயி பாபா கலந்து கொண்ட விழாவில் காற்றில் கையசைத்து ஒரு சங்கிலியை வரவழைத்தார். உண்மையில் அவரது உதவியாளர் கொடுத்த சிலைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த அந்தச் சங்கிலியை அவர் கையால் தடவி எடுத்ததை கையும் மெய்யுமாக வீடியோ கமரா காட்டிக் கொடுத்துவிட்டது. பின்னர் அந்த விழா நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் அந்தக் காட்சியை பிபிசி தயாரித்த Guru Busters என்ற குறும்படத்தில் போட்டுக் காட்டினார்கள்.
உண்மையில் சாய்பாபா என்பவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பது இந்த உலகிற்கே வெட்டவெளிச்சமாக தெரியும். அவரும் பிரேமானந்த சுவாமி மாதிரி உள்ளுக்குள்ளே போகவேண்டிய ஒருவர் ஆனால் பணபலம் மற்றும் அரசியல் பலத்தினால் இன்னமும் வெளியே இருக்கின்றார். பெரும்பலத்தைக் (அரசியல், பணம்) கொண்டுள்ளதால் இவரைப்பற்றிய பல உண்மைகள் வெளிவருவராது மூடிமறைக்கப்படுகின்றது. எனினும் காலம் ஒருநாள் இவரை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என நம்புவோம்.
பாபா இறந்தபின் தொடர்ந்து அந்தநிலையில் இருப்பதற்கு இன்னொரு பாபா வளர்ந்து வருகின்றாராம். இருக்கலாம் இவரால் கேடாக்கப்பட்ட பெண்களில் யாரோ ஒருத்திக்கு அந்த பாக்யம் கிடைத்திருக்கும்.
அவரால் கீழே தரப்பட்டுள்ள சில கேள்விகளிற்கு பதில் கூறமுடியுமென்றால் அல்லது அவற்றை செயலில் காட்ட முடியுமென்றால் அவரை கடவுள் என்றோ ஒரு ஞானி என்றோ என்னால் ஓப்புக்கொள்ளலாம்
1) இந்தியாவில் காவிரி போராட்டம். பாகிஸ்தான் எல்லைப்போராட்டம் என பல நடந்துவருகின்றது. இவரால் மாயமந்திரங்கள் தந்திரங்கள் செய்யமுடியுமென்றால் அவற்றை ஏன் நீக்க முடியாது. அல்லது ஏன் முடிவுக்குகொண்டுவரமுடியாது ?
2) இந்தியா வறுமையில் வாடும் ஏராளமானோர் இருக்கின்றார்கள். அவர்களிற்கு சுபீட்சமான வாழவு வேண்டாம். ஒரு நேர சாப்பாட்டிற்காவது இவரால் வழிவகுக்க முடியாதா ?
3) மழை இல்லை நீர் இல்லை இதனால் விவசாயம் பாழாகிவிட்டது. எமது எதிர்காலம் இருண்டுவிட்டது என அல்லலுறும் இந்திய மக்களிற்கு விடிவைக்காட்ட மழையை வருவிக்க முடியாதா ?
மேலேகூறியவைகளை விட இன்னும் ஏராளமான காரியங்கள் செய்யவேண்டி இருக்கின்றது. அவற்றை செவ்வனேசெய்து தான் உண்மையில் ஒரு மகான் சக்திவாய்ந்தவன் என்று நிருபித்தால் அவரை இந்த உலகமே நம்பும்.
அதுவரைக்கும் அவரும் ஒரு சாதாரண மனிதன்தான்.
"கண்ணா நம்பாதே நம்மை ஏமாற்றும்
ஆய்வுகளை நம்பாதே நம்மை ஏமாற்றும்
கேட்டறிதல் நன்மை பயக்கும்"
தெருவில் உள்ள தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது ஒன்றும் பெரியவிசயம் இல்லை. இதுபோலத்தான் அவர் செய்யும் உதவிகளும்.
மாரிக்குமார்
நான் சத்திய சாயி உயர் நிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் கல்விகற்றவன். எனது சொந்த அனுபவத்தில் அவர் பற்றி பேசப்பட்டுவரும் செகஸ் லீலைகள் உண்மை என்று தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநான் மட்டுமல்ல அங்கு வேலைசெய்யும் அலுவலர்களும் அதிகாரிகளும் இந்த உண்மையை அறிவார்கள். குறிப்பாக பழைய மாணவர்கள் அனைவரும் இதில் பாதிக்கப்பட்டவர்களாவர். ஆனால் வௌ;வேறு காரணங்களால் யாரும் வெளியே சொல்ல விரும்புவதில்லை. பெரும்பாலான மாணவர்ளின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. மணமுறிவில் முடிந்து உள்ளது. இதற்கெல்லாம் அவர்கள் உடல் ரீதியாகவும் மனதளவிலும் பாதிக்கப்ட்டுள்ளமையும் காரணம்.
கமலக்கண்ணன்
An Ex-student of Sri Sathya Sai Schools
இதே போல் கிருத்துவ பாதிரியார்களால் நடத்தப்படும் “சுவிசேச அற்புதங்கள்” ம்ர்மத்தையும் அவிழ்ப்பீர்களா?..
பதிலளிநீக்குRAJARISHI
பதிலளிநீக்குஉங்களின் கருத்திற்கு நன்றி. நிச்சயமாக அவிழ்க்கப்படும். ஆதாரபூர்வமாக அதுபற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அது பற்றி அவிழ்ப்பதில் எது வித தயக்கமும் இல்லை. உங்களிடம் ஏதும் அதுபற்றி தகவல் இருந்தால் எனக்கு அதனை பகிர்ந்து உதவவும். நன்றி.
PL ALSO EXPOSE THE FRAUDS AND SEX SCANDALS BY THE CATHOLIC PRIESTS, EVANGELISTS, PROTESTANT PRIESTS, NUNS WITH PROOF AND VIDEOS WITHOUT PREJUDICE AND WITH FAIRNESS
பதிலளிநீக்குisha foundation சத்குரு ஜாக்கி வாசுதேவ் பற்றி ஒண்ணுமே சொல்லலியே
பதிலளிநீக்குஏதாவது சூடான தகவல் உண்டா?