திங்கள், 15 பிப்ரவரி, 2010

முத்தத்தில் எத்தனை மாயம்?

அதாவது ஒரு ஆண், பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ தொடும் போது நாம் தனியாக இல்லை. ஒரு துணையோடு தான் இருக்கிறோம் என்ற பாதுகாப்பான உணர்வு தோன்றுகிறது. அது தவிர பிறரால் விரும்பப் படுகிறோம் என்ற நம்பிக்கை உணர்வு அங்கே துளிர் விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுள்ள மனிதப்படைப்பு என்கிற எண்ணமும், அதன் மூலம் ஒரு வித இன்பமும் உண்டாகிறது.

கைகளால் மட்டுமே தொட முடியும் என்பதில்லை. ஒரு விதக் கதகதப்பு, நெருக்கம், இனம் புரியாத மென்மை போன்ற உணர்வுகளை ஊட்ட தோலோடு தோல் உரசும் பல வகைத் தொடுதல்கள் உண்டு. இந்த வகைகளுள் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவது தான் முத்தம்...*

முத்தம் என்பது பல வகை இன்ப உணர்வுகளைக் கிளர்ச்சி அடையச் செய்யும் தன்மை கொண்டது. அற்புதமான உணர்வுகளை நரம்புகளில் ஆர்ப்பரித்து எழச் செய்வது.

ஒரு ஆண் பெண்ணிடமோ, அல்லது ஒரு பெண் ஆணிடமோ தனது மனதுக்குள் வைத்திருக்கும் ஆசை, நெருக்கம் போன்றவற்றைத் தெரிவிக்க முத்தத்தைப் போல ஒரு அற்புத சாதனம் வேறொன்றில்லை..

சிலர் உடலுறவின் போது உக்கிரமாகவும் (கடுமையாகவும்) தொடர்ந்து நீண்ட நேரமும் நேரம் காலம் தெரியாமல் தங்களை மறந்து ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரிப்பது போல முத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு உதடுகள் நான்கும், சிறிது தொட்டுக் கொண்டாலே போதும் என இருக்கும். இன்னும் சிலருக்கு இதழோடு இதழ் பதித்து முத்தமிடவே தெரியாது. இது செக்ஸ் பற்றிய அறியாமையால் தான்.

ஆண்களை விட பெண்கள் முத்தமிடுவதையும், கட்டி அணைப்பதையும் விரும்புவதாக மேலை நாட்டு உளவியல் அறிஞர் கூறுகிறார். இதற்காக, உடலுறவில் பெண்களுக்கு நாட்டமில்லை என எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலில் முத்தத்தில் தொடங்கி, கட்டி அணைத்து, தழுவி, படிப்படியாக கடைசியில் உறவு கொள்ளவே விரும்புகிறாள் என அர்த்தம் கொள்ள வேண்டும்.

ஆண், பெண் இருபாலாருக்குமே இயற்கையில் குறிகளில் தொடு உணர்ச்சி அதிகம். இன்பம் அனுபவிக்கும் ஆர்வம் மனதின் அடித்தளத்திலிருந்து மேலோங்கும் போது இத்தகைய தொடுதல் மிகத் தீவிரமான உணர்வலைகளை உண்டாக்கும். செக்ஸ் பற்றிய உணர்வே இல்லாத நிலையில் உள்ள ஒருவனைத் தொடும் போது அவனுக்கு பாலுணர்ச்சி கிளர்ச்சி பெற வில்லை என வைத்துக் கொள்வோம். அதே நபர் செக்ஸ் பற்றிய எண்ணத்தில் இருக்கும் போது அவனைத் தொட்டால் அவன் அளவுக்கு அதிகமான உணர்ச்சியால் தீவிரமாகக் கிளர்ச்சி அடைவான்..

பெண்களைப் பொறுத்த வரை உடலுறவின் போது, மன்மதபீடப்பகுதியே, (கிளிடோரிஸ்) இன்பம் காண்பதில் பெரும் பங்கு வகிக்கிறது., இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட சில ஆண்கள், தவறாகப் பயன் படுத்துவார்கள். அதாவது, மன்மத பீடத்தை அழுத்தமாக உரசினால் வெகு சீக்கிரத்திலேயே உச்சக்கட்டம் அடைந்து விடுவாள் என்ற நினைப்பில் முரட்டுத்தனமாக மன்மத பீடத்தை (கிளிடோரிஸ்) உரசுவார்கள், அல்லது தேய்ப்பார்கள். இது தவறு. ஆண்கள் தங்கள் குறியைக் கையாள்வது போல அழுத்தித் தேய்த்தால், பெண்கள் இன்பத்திற்குப் பதிலாக எரிச்சலையே உணர்வார்கள்.

ஆனால், ஆண்குறியை பெண்கள் மென்மையாகக் கையாண்டால் அதில் ஆண் சுகம் அடைய மாட்டான், கிளர்ச்சி அடைய மாட்டான். காரணம் இது ஆணுக்கு அதிக இன்பம் தராது. இருவரின் தேவைகளும் என்னென்ன என்பதை முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். சில ஆண்கள் உடலுறவின் போது பெண் குறிக்குள் விரல்களை நுழைப்பார்கள். இந்தக் காரியத்தைப் பெரும்பான்மையான பெண்கள் விரும்புவதில்லை. ஆகவே ஆணுக்கோ, பெண்ணுக்கோ என்ன பிடிக்கும் என்பதைக் கூச்சப்படாமல் கேட்டு அறிந்து அதன் பின்னர் உறவில் ஈடுபடுவது, சுமுகமான உறவுக்கு வழி வகுக்கும்.

உடலுறவின் போது, பெண்ணின் குறிகளைத் தொடுவதில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் ரசிக்கிறார்கள். அணு அணுவாய் அனுபவிக்கிறார்கள். இதற்குக் காரணம் பெண்ணுக்குப் பெண் செக்ஸ் பற்றிய ரசனை வித்தியாசப்பட்டிருப்பது தான்.

அது மட்டுமல்ல, ஒரு பெண்ணை எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாகத் தொட்டாலும் அவளுக்கு அதிருப்தி தான் உண்டாகிறது. ஆக, தொடுவதிலும் மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிலர் பெண்ணின் கிளிடோரிசின் மேல் தேலை மட்டுமே உரசவோ, அல்லது தேய்க்கவோ விரும்புவார்கள். இன்னும் சில பெண்களுக்கு இது பிடிக்காது. மாறாக அவர்களது கிளிட்டோரிசையும், குறியின் உதடையும் மாற்றி மாற்றி வருடுவது தான் பிடிக்கும்.

சிலருக்கு குறியின் உள்ளே விரலை விட்டு மாற்றி மாற்றி வருடுவது பிடிக்கும். இதிலும், ஒரு பெண் செக்ஸ் கிளர்ச்சி அடையாமல் இருக்கும் நேரத்தில் இது போலச் செய்தால் அவள் அதனால் எந்த விதப் பயனும் அடைய மாட்டாள்.

இப்படிச் செய்வதை தனது கணவன் விரும்புகிறானே,,.,. இருக்கட்டுமே என்று தான் விட்டுக் கொடுத்துப் போவார்களே தவிர, எடுத்த எடுப்பிலேயே குறியின் உள்ளே ஆழமாகப் பாய எந்தப் பெண்ணுமே இடம் தருவதில்லை. ஆனால் மிக அபூர்வமாக சில பெண்கள் ஆண்களின் 3, 4 விரல்களை உச்ச நிலை அடையும் போது நுழைப்பதை விரும்புகிறார்கள்.

சில பெண்களின் குறியில் இயற்கையாகவே மதன நீர் சுரப்பு குறைவாக இருக்கும். இத்தகைய பெண்களின் குறி உதடுகள், மற்றும் நுழைவாயில் ஆகியவற்றில் சரியான வழ வழப்பு இருக்காது.

இப்படிப் பட்ட பெண்களிடம் உறவு கொள்ளும் போது விரல்களைப் பயன் படுத்தினால், இன்பத்துக்குப் பதில் எரிச்சல் தான் வரும். இப்படி ஆகாமல் இருக்க ஏதேனும் பசை அல்லது எண்ணையைப் பயன் படுத்தலாம். இவை தற்போது கடைகளிலேயே கிடைக்கின்றன. இன்பத்தை மேலும் சில படிகள் அதிகரிப்பது இவற்றின் மற்றொரு சிறப்பு.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல