சுத்தப்படுத்தப்பட்ட உழுத்தம் பருப்பு 2 கிலோ
எண்ணெய் 100 ml
சீரகம் 10 கிராம்
பெருங்காயம் சிறு துண்டு
உப்பு தேவையான அளவு
உழுத்தம் பருப்பைச் சுத்தம் செய்து கல்லுரலில் இட்டு மிகச் சன்னமாக மாவாக அரைத்து அதனை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவை கவனமாக தட்டில் கொட்டி, சீரகத்தையும் கலந்து அளவாக உப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் தெளித்து இறுக்கமாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
பெருங்காயத்தை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து அதனையும் மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின் பிசைந்துள்ள மாவின் மீது நன்றாக எண்ணெயைத் தடவி உருண்டையாக எடுத்து கல்லுரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். இடிக்கும் போது கூடவே எண்ணெய் உபயோகப்ப டுத்த வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நன் றாக இடித்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ் வளவு மா ரப்பர் பதத்திற்கு வரும்.
ரப்பர் மாதிரி ஆனதும் எடுத்து நமக்குத் தேவையான அளவுக ளில் புள்ளிகள் போட்ட மரப்பலகையில் வட்ட மாகவோ அல்லது நீண்ட வடிவிலோ அவற்றை தட்ட வேண்டும். இப்படித் தட்டப்பட்ட அப் பளத்தை வெயில் அதிகம் படாத அளவில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும் எல்லாவற்றையும் ஒழுங் காக அடுக்கி வைக்கவேண்டும்.
கார பப்படம்:
தேவையானபொருட்கள் உழுத்தம்பருப்பு 500 கிராம்
துவரம் பருப்பு 500 கிராம்
பச்சை மிளகாய் 50 கிராம்
பப்படக் காரத்தூள்
ஒரு ஸ்பூன் ஓமம்
ஒரு ஸ்பூன் பெருங்காயம்
சிறு துண்டு செத்தல் மிளகாய் விதை
அரை கப் சோடா தூள்
ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு
முதலில் உழுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை சுத்தமாக்கி தனித்தனியே எடுத்துக் கொள்ளவும். பின்னர் உழுத்தம் பருப்பை மட்டும் தண்ணீ?ல் 45 நிமிடம் வரை ஊற வைத்து நீரை வடித்து ஒரு துணியில் பரப்பி உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் உழுத்தம் பருப்பையும் துவரம் பருப்பையும் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பெருங்காயம், பப்படக் காரத்தூள், சோடாத் தூள் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மெழுகு பதத்திற்கு அரைத்து எடுத்து அதில் ஓமப் பொடியைக் கலந்து விடவும். பிறகு அரைத்த மாவில் ஓமம் கலந்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சப்பாத்தி மாவைப் பிசைவது போல நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை உரலில் போட்டு அம்மிக் குழவியால் நன்றாக இடித்துப் பிசைந்தால் ரப்பர் போன்று வர வேண்டும். செத்தல் மிளகாய் விதைகளை ஒரு தட்டில் கொட்டி, இடித்த பப்பட மாவை சிறு சிறு துண்டுகளாக உருண்டையாக உருட்டி ஒவ்வொரு உருண்டையையும் அந்த மிளகாய் விதைகளில் படும்படி உருட்டி எடுக்கவும். ஒட்டி எடுத்த உருண்டைகளை பூரி போன்று உருட்டி எடுத்து நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்று இவற்றை மூன்று நாட்கள் உலர்த்தினால் ஈரப்பதம் போய் விடும். ஈரப்பதம் அகன்றதும் பப்படத்தை பேப்பரில் சுற்றி வட்டவடிவில் மேலே லேபில் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம். பப்படம் தயாரிக்க தேவைப்படும் பொருட்களைப் பார்த்தால் எல்லாமே அதிக செலவு தரக் கூடியவை அல்ல. அதுமட்டுமன்றி எப்போதும் கிடைக்கக் கூடிய பொருட்களாகவும் உள்ளன.
எனவே எவ்வித தடைகளுமின்றி இவ் வியாபா ரம் நடைபெறும். மற்றும் பப்படம் தயாரிக்கும் போது பல்வேறு வகையான வடிவங்களிலும் தயாரித்து வழங்கினால் அனைவரும் விரும்பி பெற்றுக் கொள்வர். எனவே பப்படம் தயாரிப்பது ஒரு சிறந்த சுயதொழிலாகும். மேலும் , இதனை தொழிலாக மட்டும் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டுப்பாவனைக்கும் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே பப்படம் தயாரித்து புதிய சுவையில் குடும்பத்தினரை அசத்தி விடுங்களேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக