புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகர் அகோன் (Akon) ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதற்கான வீசாவை இலங்கை அரசாங்கம் வழங்க மறுத்துள்ளதை அடுத்து, அவர் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
அகோனின் அண்மைக்கால ஆல்பத்தில் புத்தர் சிலையின் முன்னால் நின்று நீச்சலுடை அணிந்த பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். ஆகவே இந்த ஆல்பத்தின்மூலம் அகோன் பௌத்தமதத்தை அவமானப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறியதற்கு, அந்த நீச்சல் தடாகத்தினருகில் புத்தர் சிலை இருந்த விடயம் இப்போதுவரை தமக்குத் தெரியாதென அறிக்கை விடுத்துள்ளார் அகோன்.
நான் ஒருபோதும் எந்தவொரு நபரினதும் மதத்தையோ மத நம்பிக்கைகளையோ அவமதிக்க மாட்டேன். நானும் கடவுள் பக்தி உள்ளவன். எனவே அவர்கள் ஏன் இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள் என்பதை என்னால் உணரமுடியும். ஆனால் இதற்கெல்லாம் வன்முறை தீர்வாகாது என அகோன் தெரிவித்துள்ளார். எனவே நடைபெறவுள்ள நிகழ்ச்சியை இப்போதைக்கு தள்ளிப்போடுவதாக நிகழ்ச்சிக்குப் பொறுப்பான அமெரிக்கன் டலண்ட் ஆஜென்சி தெரிவித்துள்ளது.
வெள்ளி, 26 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக