இதை கவனிப்போர் யாராகினும் அவர்களின் பார்வைக்கு... ..
பரமஹம்ச நித்யானந்தா (ஸ்ரீநித்யானந்த சுவாமி) என்கிற நான், ஸ்ரீநித்ய தர்மானந்தா (லெனின் கருப்பணன் என முன்பு அறியப்பட்டவர்) என்கிற இவர் பொறுப்பும் அர்ப் பணிப்பும் உள்ள சீடர். நித்யானந்த தியான பீடத்திற்கு தன்னால் இயன்ற அளவில் சிறப்பாக உழைத்தவர் என ஒப்புதல் அளிக்கிறேன்.
ஸ்ரீநித்யானந்த சுவாமி என்கிற நான், எனது செயலாளர் ஸ்ரீ நித்ய சதானந்தா மற்றும் நித்யானந்த தியானபீடத்துடன் இணைந்திருக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கிளைகளைச் சேர்ந்த சீடர்கள், பக்தர்கள், இதர உறுப்பினர்கள் உள்ளிட்டோரை இந்தக் கடிதத்தில் "நாங்கள்' என்று குறிப்பிட்டுள்ளோம்.
"நாங்கள்' ஸ்ரீநித்ய தர்மானந்தாவுக்கு (லெனின் கருப்பணன் என அறியப்பட்டவர்) ஒரு நோக்கத்துடனோ- நோக்கமில்லாமலோ, நேரடி யாகவோ-மறைமுகமாகவோ, உடல்ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ தற்போது அல்லது எதிர்காலத்திலோ எவ்வித துன்பமும் நாங்கள் தரமாட்டோம் என உறுதியளிக்கிறோம். அதற்கு, பரமஹம்ச நித்யானந்தா (ஸ்ரீநித்யானந்த சுவாமி) என்கிற நான் பொறுப்பாளி. அவருடைய பாது காப்புக்கும் நலத்திற்கும் நான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.
கையெழுத்து:
ஸ்ரீ நித்யானந்த சுவாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக