சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென பறந்து வந்த கிளி வந்த வேகத்தில் "ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது" என கொஞ்சி கொஞ்சி பேசியதாம். இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடத்தொடங்கி விட்டார்கள்.
இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை கண்காணிப்பதற்காகவே அந்த கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” (Lorenzo) என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் கொலம்பிய நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக