அக்கரைப்பற்றிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று கண்டி மஹியங்கனை வீதியின் எத்தமல்கொட பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வானில் பயணம் செய்த ஐவர் காயமடைந்துள்ளதாக உடுதும்புர பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடுதும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஒருவர் மேலதிக சிகிக்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்ற போது வானின் சாரதி நித்திரையில் இருந்ததாக உடுதும்புர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதன், 17 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக