வெள்ளி, 19 நவம்பர், 2010

புலிகள் இறுதிப்போரின் போது பெரும்பாலும் சிவில் உடையுடனேயே தாக்குதல்களை நடத்தினர்

புலிகள் இறுதிப்போரின் போது பெரும்பாலும் சிவில் உடையுடனேயே தாக்குதல்களை நடத்தினர் என 58 வது படையணியின் தளபதியும் தற்போது ஐக்கிய நாடுகளின் பிரதி நிரந்தர பிரதிநிதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

போர் நிறுத்த காலத்தின் போது டி சேர்ட்டையும் சாரத்தையும் உடுத்திக்கொண்டு படையினர் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களை பயங்கரவாதிகள்என்றே அழைக்கமுடியும் என அவர் குறிப்பிட்டார் புலிகளின் யாழ்ப்பாண தாக்குதல் படைத்தலைவராக இருந்த தீபன் போரின் போது கொல்லப்பட்டதும் தாம் சென்று பார்த்தபோது அவர் சாதாரண உடையிலேயே காணப்பட்டார்.

தமது படைப்பிரிவினர் புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

சாதாரண உடைகளில் இருந்தபோதும் கொல்லப்பட்டவர்கள் தமது உறுப்பினர்கள் என அடையாளம் கண்டு அந்த சடலங்களை புலிகள் ஏற்றுக்கொண்டனர்.

எனினும் சில செய்தி நிறுவனங்கள் இந்த சடலங்களை தமிழ் பொதுமக்கள் என காட்ட முயற்சித்தன.

பெண் போராளிகளின் ஆட்டிலறி பொறுப்பாளர் விதுஷா பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அந்தனி ஆகியோர் சிவிலியன் உடையிலேயே போரின் போது தாக்குதல்களில் ஈடுபட்டு மரணம் அடைந்தனர்

புலிகளின் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி தமது கணவரை தேடித்தருமாக இந்த ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்துள்ளார்.

எழிலன் திருகோணமலை மாவில் ஆறு நீர் விடயத்தில் முன்னிலை வகித்தார். அவரே புலிகளின் வரி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் இருந்தார்

அவர் பயங்கரவாதியாவார் அவர் படையினருக்கு எதிராக போராடியவராவார் அவர் படையினருடனான போரின் போது காணாமல் போயிருக்கலாம் ஆனால் இன்று அவரின் மனைவி தமது கணவரை காணவில்லை என புதிய கோணத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார் என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்

வடக்குகிழக்கு மக்கள் அவர்களின் பிரிவினராலேயே 30 வருடங்களாக அடக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்தனா.

இதன் போது மக்கள்படை மற்றும் போராளிகள் என கூறப்படுவோரின் புகைப்படங்களை ஆணைக்குழுவின் முன்னிலையில் காட்டிய சவேந்திர சில்வா, அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதால்அவர்களை பயங்கரவாதிகள் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார்.

எனினும் புலம்பெயர்ந்தோரும் இணையத்தளங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்களை பொதுமக்களாக காட்ட முனைகின்றனர் என அவர் குற்றம் சுமத்தினர்.

சுதந்திரபுரம் என்ற இடமே அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஆளில்லா விமானம் மூலம் கண்டறியப்பட்ட தகவலின்படி பொதுமக்கள் இருந்த புதுமாத்தளன் பகுதியை நோக்கி புலிகளின் ஆட்டிலறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 200 கிலோ மீற்றர் பிரதேசத்தை கைப்பற்றிய தமது படையினருக்கு சுமார் 7 கிலோமீற்றர் பிரதேசத்தை கைப்பற்றுவதற்காக பொதுமக்களை கொலை செய்யவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இறுதிப்போரின் போது புலிகளின் பிரதேசத்துக்குள் படையினரின் ஊடுருவல் படையினர் சென்று தமது தாக்குதல்களை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல