புதன், 1 டிசம்பர், 2010
அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு சிறை
அவுஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனையை விதித்துள்ளது. இணையத்தளத்தின் ஊடாக சூதாட்டத்தை மேற்கொண்டு வந்தமை தொடர்பிலேயே இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தேவாலயம் ஒன்றின் நிதியத்தில் இருந்து இணையத்தளம் ஊடாக 1.5 மில்லியன் டொலர்களை குறித்த இலங்கையர் களவாடியுள்ளார். அத்துடன் பொதுநலவாய வங்கியில் இருந்து மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாத வரையான காலப்பகுதியில் 223 மூவாயிரத்து 404 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையரை நாடு கடத்தும் ஏதுநிலை குறித்தும் பிரிஸ்பேன் நீதிபதி ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக