பேசாலைப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோச் சாரதியான தர்மா, தோட்டவெளிப் பகுதியைச் சேர்ந்த கமல், கருசல் பகுதியைச் சேர்ந்த ஜலீஸ் மற்றும் எழுத்தூர் பெரியகமம் பகுதியைச் சேர்ந்த தில்லைநாதன் ஆகிய நான்கு இளைஞர்களே தனித்தனியாகக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள போதும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் எவரும் இதுவரை வந்து முறைப்பாடு செய்யவில்லை என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக