ஈரானிய ஜனாதிபதி முகமது அகமதிநிஜாத், இஸ்ரேலையும், அமெரிக்காவையும் எதிரி நாடுகளாக கருதுபவர். இந்நிலையில், அந்த நாடுகளைப் பற்றி அவர் வினோதமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
`ஈரானில் வறட்சியை உண்டாக்குவதற்காக, ஈரானை நோக்கி வரும் மழை மேகங்களை எதிரி நாடுகள் அழித்து விட்டதாக` அவர் கூறியுள்ளார். அவரது இக்கருத்து, ஈரானின் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
முகமது அகமதிநிஜாத், சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று முன்பு அவர் கூறிய ஒரு கருத்து, உலக அளவில் கண்டனத்தை பெற்றது.

`ஈரானில் வறட்சியை உண்டாக்குவதற்காக, ஈரானை நோக்கி வரும் மழை மேகங்களை எதிரி நாடுகள் அழித்து விட்டதாக` அவர் கூறியுள்ளார். அவரது இக்கருத்து, ஈரானின் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
முகமது அகமதிநிஜாத், சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று முன்பு அவர் கூறிய ஒரு கருத்து, உலக அளவில் கண்டனத்தை பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக