வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது. மாகாணத்தில் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 555 வாக்குகளைப் பெற்று 28 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 30 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கான அங்கீகாரத்தினை வடபகுதி மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 25 வருடங்களுக்குப்பின்னர் தனியான வடமாகாணசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றிருந்தது.
வடக்கில் யாழ். மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களிலும், வன்முறைச்சம்பவங்கள் பதிவாகி இருந்த போதிலும் மக்கள் அச்சுறுத்தலையும் மீறி உணர்வுபூர்வமாக வாக்களித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல் கண்காணிப்புக்குழுவினருக்கு கிடைத்துள்ளன. இந்த நிலையிலும், வடபகுதி மக்கள் அச்சமின்றி துணிந்து வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 907 மொத்த வாக்குக்களைப் பெற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35 ஆயிரத்து 995 வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்மைப்பு 28 ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆயிரத்து 209 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 41 ஆயிரத்து 225 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி 16 ஆயிரத்து 633 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 37 ஆயிரத்து 79 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆயிரத்து 897 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 118 வாக்குகளைப்பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், 15 ஆயிரத்து 104 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும், 4571 வாக்குகளைப் பெற்று முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ். மாவட்டத்தில் 65 ஆயிரத்து 119 வாக்குகளையும், வன்னி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 671 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 1 இலட்சத்து 6 ஆயிரத்து 792 வாக்குகளையே பெற்றிருந்தது. ஆனால் இம்முறை யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 555 வாக்குகளை கூட்டமைப்பு பெற்று பெரு வெற்றி ஈட்டியுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தல் நீதி நியாயமாக நடத்தப்படவேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் பெரும் அக்கறை காட்டியிருந்தது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் இடம் பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டுமென்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதற்கிணங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழுவும் சார்க் நாடுகளின் கண்காணிப்புக்குழுவினரும் தேர்தல் கண்காணிப்புக்கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், யாழ். குடாநாடு உட்பட பல பகுதிகளிலும், வன்முறைகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் தினத்திற்கு முதல் நாள் அதிகாலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இதேபோல் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மீது பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. தேர்தல் தினத்தன்றும் இராணுவத்தினர் பல்வேறு வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் மக்களை வாக்களிக்க விடாது தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையிலும், வடமாகாண மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
வடக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி,. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. மற்றும் இடதுசாரிக்கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்தன. யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. யின் சார்பில் 11 பேர் போட்டியிட்டிருந்தனர். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் 8 பேர் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் இருவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 47 ஆயிரத்து 622 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றதுடன் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 35 ஆயிரத்து 995 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதேபோல், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 12 ஆயிரத்து 624 வாக்குகளைப் பெற்று ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 855 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் இத்தகைய நிலையே காணப்படுகின்றது. இதிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினையே தமது பிரதிநிதியாக தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தெரிவு செய்துள்ளமை நிரூபணமாகின்றது.
தேர்தல் பிரசாரங்களின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்களுக்கு பல சலுகைகளையும் உதவிகளையும் வழங்கியது. குடாநாடு உட்பட வடபகுதியை அபிவிருத்தி செய்துள்ளதாகவும், இந்த அபிவிருத்தி தொடரவேண்டுமானால் தமக்கு வாக்களிக்குமாறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரியிருந்தது. இதனைவிட வடக்கில் பெருமளவான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுயதொழில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என்றும் அரசாங்கத் தரப்பினர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இதற்கிணங்கவே வடமாகாணசபையினை கைப்பற்ற முடியும் என்ற தோரணையில் அமைச்சர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால், அபிவிருத்திகளும் சலுகைகளும் வேண்டாம். அடிப்படை உரிமைகளே எமக்கு வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர். தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைந்த வடக்கு-, கிழக்கில் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கக்கூடிய தீர்வு வேண்டும். இத்தகைய தீர்வு முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமையவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தல் விஞ்ஞாபனமானது தனிநாட்டுக்கான கோரிக்கை எனவும் நாட்டைப் பிரிக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயல்வதாகவும் அரசாங்கத்தரப்பினர் பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர். ஆனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு தேர்தலில் தமிழ் மக்கள் அமோக ஆதரவினை வழங்கியுள்ளமை நிரூபணமாகியுள்ளது.
இதிலிருந்து அபிவிருத்திகளும் சலுகைகளும் எமக்கு வேண்டாம். ஆனால் அதனைவிட எமக்குரிய உரிமைகள் வழங்கப்படவேண்டியது இன்றியமையாததாகும் என்பதை தமது தீர்ப்பின் மூலம் வடபகுதி தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நன்கு உணர்த்தியுள்ளனர். இதனை உணர்ந்து இனியாவது அரசாங்கம் செயற்படவேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கான அங்கீகாரத்தினை வடபகுதி மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 25 வருடங்களுக்குப்பின்னர் தனியான வடமாகாணசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றிருந்தது.
வடக்கில் யாழ். மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களிலும், வன்முறைச்சம்பவங்கள் பதிவாகி இருந்த போதிலும் மக்கள் அச்சுறுத்தலையும் மீறி உணர்வுபூர்வமாக வாக்களித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல் கண்காணிப்புக்குழுவினருக்கு கிடைத்துள்ளன. இந்த நிலையிலும், வடபகுதி மக்கள் அச்சமின்றி துணிந்து வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 907 மொத்த வாக்குக்களைப் பெற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35 ஆயிரத்து 995 வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்மைப்பு 28 ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆயிரத்து 209 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 41 ஆயிரத்து 225 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி 16 ஆயிரத்து 633 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 37 ஆயிரத்து 79 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆயிரத்து 897 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 118 வாக்குகளைப்பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், 15 ஆயிரத்து 104 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும், 4571 வாக்குகளைப் பெற்று முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ். மாவட்டத்தில் 65 ஆயிரத்து 119 வாக்குகளையும், வன்னி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 671 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 1 இலட்சத்து 6 ஆயிரத்து 792 வாக்குகளையே பெற்றிருந்தது. ஆனால் இம்முறை யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 555 வாக்குகளை கூட்டமைப்பு பெற்று பெரு வெற்றி ஈட்டியுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தல் நீதி நியாயமாக நடத்தப்படவேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் பெரும் அக்கறை காட்டியிருந்தது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் இடம் பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டுமென்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதற்கிணங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழுவும் சார்க் நாடுகளின் கண்காணிப்புக்குழுவினரும் தேர்தல் கண்காணிப்புக்கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், யாழ். குடாநாடு உட்பட பல பகுதிகளிலும், வன்முறைகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் தினத்திற்கு முதல் நாள் அதிகாலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இதேபோல் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மீது பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. தேர்தல் தினத்தன்றும் இராணுவத்தினர் பல்வேறு வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் மக்களை வாக்களிக்க விடாது தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையிலும், வடமாகாண மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
வடக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி,. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. மற்றும் இடதுசாரிக்கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்தன. யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. யின் சார்பில் 11 பேர் போட்டியிட்டிருந்தனர். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் 8 பேர் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் இருவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 47 ஆயிரத்து 622 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றதுடன் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 35 ஆயிரத்து 995 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதேபோல், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 12 ஆயிரத்து 624 வாக்குகளைப் பெற்று ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 855 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் இத்தகைய நிலையே காணப்படுகின்றது. இதிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினையே தமது பிரதிநிதியாக தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தெரிவு செய்துள்ளமை நிரூபணமாகின்றது.
தேர்தல் பிரசாரங்களின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்களுக்கு பல சலுகைகளையும் உதவிகளையும் வழங்கியது. குடாநாடு உட்பட வடபகுதியை அபிவிருத்தி செய்துள்ளதாகவும், இந்த அபிவிருத்தி தொடரவேண்டுமானால் தமக்கு வாக்களிக்குமாறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரியிருந்தது. இதனைவிட வடக்கில் பெருமளவான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுயதொழில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என்றும் அரசாங்கத் தரப்பினர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இதற்கிணங்கவே வடமாகாணசபையினை கைப்பற்ற முடியும் என்ற தோரணையில் அமைச்சர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால், அபிவிருத்திகளும் சலுகைகளும் வேண்டாம். அடிப்படை உரிமைகளே எமக்கு வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர். தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைந்த வடக்கு-, கிழக்கில் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கக்கூடிய தீர்வு வேண்டும். இத்தகைய தீர்வு முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமையவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தல் விஞ்ஞாபனமானது தனிநாட்டுக்கான கோரிக்கை எனவும் நாட்டைப் பிரிக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயல்வதாகவும் அரசாங்கத்தரப்பினர் பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர். ஆனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு தேர்தலில் தமிழ் மக்கள் அமோக ஆதரவினை வழங்கியுள்ளமை நிரூபணமாகியுள்ளது.
இதிலிருந்து அபிவிருத்திகளும் சலுகைகளும் எமக்கு வேண்டாம். ஆனால் அதனைவிட எமக்குரிய உரிமைகள் வழங்கப்படவேண்டியது இன்றியமையாததாகும் என்பதை தமது தீர்ப்பின் மூலம் வடபகுதி தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நன்கு உணர்த்தியுள்ளனர். இதனை உணர்ந்து இனியாவது அரசாங்கம் செயற்படவேண்டும்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக