வியாழன், 3 அக்டோபர், 2013

கோடீஸ்வரர் வரதராஜபெருமாளிடம் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சுமார் 150 பவுண் தங்க நகைகள் மற்றும் சுவாமிக்கு சாத்தியிருந்த வெள்ளி அங்கி மற்றும் உண்டியலில் இருந்த பணம் உட்பட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் நேற்றிரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டும் இந்த ஆலயத்தில் இதேபோன்றதொரு பாரிய கொள்ளை இடம்பெற்றது. இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பொருட்களும் திருடப்பட்டிருந்தன. காலத்திற்கு காலம் இக்கோவிலில் உள்ள நகைகள் உண்டியல் பணம் திருடப்படுவது வழமையாகும்.

1987ஆம் ஆண்டு கொள்ளை நடந்த பின் சேகரிக்கப்பட்ட 150 பவுண் தங்க நகைகளே தற்போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு குறித்த ஆலயத்தின் மடப்பள்ளிக் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அந்த அறையின் கதவுகளை உடைத்து ஆலயத்தினுள் நுழைந்துள்ளனர்.

பின்னர் ஆலய களஞ்சியசாலை கதவுகளை உடைத்து உட்சென்று அங்கிருந்த குளிர்பானங்களை பருகியதுடன் பிஸ்கட் என்பவற்றையும் சாப்பிட்டுள்ளனர். மாட்டிறச்சி கொத்து றொட்டி பார்சல்களை கொண்டு வந்து கோவிலுக்குள் வைத்து உண்டதுடன் மதுபானங்களையும் அருந்தி உள்ளனர். ஆலயத்திற்குள் பீடி சிகரட் துண்டுகளும் மது போத்தல்களும் மாட்டிறச்சி கொத்துறொட்டி பார்சலும் காணப்படுவதாக நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மடப்பள்ளியில் இருந்த மண்வெட்டி, அலவாங்கு போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று ஆலய மூலஸ்தானத்திற்குச் செல்லும் கதவை உடைத்து, எழுந்தருளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்கத்தை உடைத்து, அதற்குள்ளிருந்த 150 பவுண் வரையான நகைகளைத் திருடியுள்ளனர்.

இந்த பெட்கத்திற்கு எட்டு பூட்டுக்கள் போடப்பட்டிருந்தது. அத்தனை பூட்டுக்களையும் உடைத்தே நகைகளைத் திருடியுள்ளனர்.

திருவிழாக் காலங்களில் சுவாமிக்கு சாத்துகின்ற அத்தனை நகைகளும் திருடப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத நாராயணப் பெருமானுக்கு சாத்தப்பட்டிருந்த மூன்று வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன.
ஆலயத்திலிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது. திருடர்கள் மிக நீண்ட நேரம் ஆலயத்திற்குள் தங்கி இருந்துள்ளனர்.

ஆலயத்தின் உள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஏணி மணிக்கோபுரத்தினுள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நகைகளைத் திருடிய பின்னர் திருடர்கள் மணிக்கோபுர வழியாக ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை வழமையான பூசைக்காக ஆலயத்திற்கு வந்த அர்ச்சகர் ஆலயத்தின் உள் கதவுகள் உடைக்கப்பட்டிருக்கின்றமையையும் நகைகள் திருடப்பட்டிருக்கின்றமையும் கண்டு ஆலய பரிபாலன சபைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

Thinakkathir

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல