வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

விஜயகாந்த் முதல்வரானால் தான் எல்லா பிரச்சனையும் தீரும்: பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழக மீனவர்கள், தண்ணீர், மின்வெட்டு பிரச்சனைகள் குறித்து பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் திடீரென பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்திக்க நேரம் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.

தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவே பிரதமரை தமது எம்.எல்.ஏக்கள் 20 பேருடன் சந்திப்பதாக விஜயகாந்த் தரப்பு தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி குறித்தே இந்த சந்திப்பில் விஜயகாந்த் பேச இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து 20 எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 11 மணியளவில் மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் விஜயகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பில் விஜயகாந்த் உடன் தேமுதிகவின் 20 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, தாதுமணல் கொள்ளை, முல்லை பெரியார், காவேரி உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விஜயகாந்த் மனு ஒன்றை கொடுத்தார்.

பிரதமருடனான இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமருடன் பேசினேன். அதேபோல் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்ச்சனை, மின்வெட்டு பிரச்சனை குறித்தும் பிரதமருடன் தெரிவித்தோம்.
தமிழக பட்ஜெட் போற்றுவதற்கு பதிலாக தூற்றுவதாக இருக்கிறது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

பிரதமர் சொன்னதாக கேப்டன் நியூஸ் டிவி...

தேமுதிகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகளில் ஒன்றான கேப்டன் நியூஸ் விஜயகாந்திடம் பிரதமர் தெரிவித்த கருத்துகளாக வெளியிட்டுள்ள செய்தி:


தமிழக எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் தம்மை சந்தித்தது மகிழ்ச்சி என்று பிரதமர் கூறினார். மேலும் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தமக்கு கடிதங்களை மட்டும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறார். அது சரியல்ல என்றும் விஜயகாந்திடம் பிரதமர் கூறினார்.

அத்துடன் விஜயகாந்த் தமிழ்நாட்டின் முதல்வரானால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு கேப்டன் நியூஸ் டிவி கூறியுள்ளது.

போயா.. டெல்லியிலும் எகிறினார் விஜயகாந்த்

பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழகத்தை சார்ந்த ராஜ் தொலைக்காட்சி செய்தியாளர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்து "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று கடுப்படித்துவிட்டு விறுட்டென கிளம்பினாராம் விஜயகாந்த்.
முன்பு சென்னை விமான நிலையத்தில் மூத்த செய்தியாளர் ஒருவர் விஜயகாந்திடம் இப்படி கேள்வி கேட்கப் போய் அவரது ஆதரவாளர்கள் தள்ளிவிட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல